எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கால்நடை வளர்ப்பில் கறவை மாடு வளர்ப்பு என்பது சத்தான பால், வளமான எரு ஆகியவற்றை தருவதோடு ஆண்டு முழுவதும் சுயவேலைவாய்ப்பு அளித்து நிலையான வருவாய் ஈட்டிக்கொடுக்கிறது. இன்றைய கன்றே நாளைய பசு. ஆகவே கன்றுகளை நன்கு பராமரிப்பதன் மூலம் பசுக்களை நமது பண்ணையிலேயே உருவாக்கலாம். சந்தைகள், வீடுகள், தரகர்கள், அரசு மற்றும் தனியார் பண்ணைகள் மூலம் கறவை மாடுகளை தேர்ந்தெடுத்து வாங்கலாம். ஜெர்சி கலப்பின பசுக்கள், வடநாட்டைச் சேர்ந்த கறவை இனங்களான கிர், சாகிவால் தார்பார்கள் போன்ற இனங்களை வாங்கலாம். எந்த இனமாக இருந்தாலும் இளவயது மாடுகளை வாங்குவதே பண்ணைக்கு லாபகரமாக இருக்கும். முதல் அல்லது இரண்டாவது ஈற்று மாடுகளை வாங்குவது நன்று. மாடுகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். மாடுகளின் நாசிகளுக்கு நடுவே உள்ள கறுப்பு பகுதி ஈரமாக இருக்க வேண்டும். அசைபோட்டுக் கொண்டிருக்க வேண்டும். தோல் மிருதுவாகவும், மினுமினுப்பாகவும் இருக்க வேண்டும். சாணம் பேதி, ரத்தம், சீதம் அல்லது துர்நாற்றத்துடன் இருந்தாலோ மாட்டின் சிறுநீர் வெளிமஞ்சள் நிறமற்று சிவப்பு நிறமாக இருந்தாலோ, மாட்டின் ரோமங்கள் பெரிதாகவும் அடர்த்தியாகவும் இருந்தாலோ அது நோயின் அறிகுறியாகும்.
பால்மடி, உடலோடு ஒட்டி பெருத்து இருக்க வேண்டும். மடி மிருதுவாக இருக்க வேண்டும், காயங்கள், கொப்புளங்கள் இருக்கக்கூடாது. நான்கு காம்புகளும் சீராக சதுர வடிவில் உள்ளது போல் இருக்க வேண்டும். மடிக்குச் செல்லும் இரத்த நாளம் நன்கு புடைத்துக் காணப்பட வேண்டும். பால்கறக்கும் போது காம்புகளில் அடைப்பு இல்லாமல் இருக்க வேண்டும். காம்புத் துவாரம் நன்றாக இருந்தால் பால் கறக்கும் போது சீராக வரும். மாடு வாங்கும் பொழுது கால்நடை மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
மாட்டுக்கொட்டகை அவரவர் வசதி வாய்ப்புகளுக்கு தகுந்தாற்போல் பனை, தென்னை ஓலை மூங்கில் கொண்டு அமைக்கலாம் அல்லது செங்கல், சிமிண்ட், ஆஸ்பெஸ்டாஸ் அலுமினியம் கூரையுடன் கூடிய கட்டிடமாகவும் அமைக்கலாம். கொட்டகையின் நீளம் கிழக்கு மேற்காக இருக்குமாறு அமைக்க வேண்டும். கொட்டகையைச் சுற்றி மாடுகள் காலாற உலாவர திறந்தவெளிபரப்பு இருத்தல் நன்று. கூரையின் உயரம் 220 செ.மீ. இருந்தால் போதுமானது ஆகும்.
சரிவிகித உணவும் நல்ல பராமரிப்பும் அளிக்கப்பட்ட கலப்பின கிடாரிக் கன்றுகள் 12 முதல் 18 மாத வயதில் சுமார் 200 கிலோ உடல் எடையை அடைந்து பருவ வயதை எட்டுகிறது. இரண்டு வயதிற்குள் கன்றுகள் சுமார் 200 கிலோ உடல் எடையை எட்டி சரியான தருணத்தில் இனப்பெருக்கம் செய்தால் அது மூன்று வயதிற்குள் முதல் கன்றை ஈனும். இந்த கால இடைவெளி எவ்வளவு தள்ளிப்போகிறதோ அவ்வளவு நாட்கள் கன்று பிறப்பு தள்ளிப்போகும். அதனால் நாட்கள் தள்ளிப்போய் பண்ணையாளர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும்.
சினைப்பருவ காலங்களில் கிடேரி பசு அமைதியாக இருக்காது. அடிக்கடி அடிவயிற்றிலிருந்து கத்தும். அருகில் உள்ள மாடுகள் மீது தாவும். மேலும் பிற மாடுகள் தன்மீது தாவினால் அசையாது நின்று அனுமதிக்கும். பிறப்புறுப்பு சிவந்து தடித்திருக்கும். தீவனம் உண்ணும் அளவு குறையும். கண்ணாடி போன்ற நிறமற்ற சளி மாதிரியான திரவம் பசுவின் பிறப்புறுப்பிலிருந்து வடியும்.
காலை நேரத்தில் சினை அறிகுறிகள் தென்பட்டால் மாலை வேளையிலும், மாலை அல்லது இரவு நேரத்தில் தென்பட்டால் அடுத்தநாள் காலையிலும் கருவூட்டல் செய்வது சிறந்தது. கருவூட்டல் செய்த மாடுகளை மூன்றாவது மாதத்தில் கால்நடை மருத்துவரிடம் பரிசோதனை செய்து சினையை உறுதி செய்ய வேண்டும்.
கன்று பிறந்தவுடன் மூக்கு, வாயைச் சுற்றியுள்ள சளி போன்ற திரவத்தை காய்ந்த துணியால் நன்கு துடைக்கவும். கன்றின் பின்னங்காலை பிடித்து தூக்கி மூக்கில் உள்ள சளியை ஒழுகச் செய்து அப்புறப்படுத்த வேண்டும். மூச்சுவிட சிரமப்பட்டால் மார்பை அழுத்தியோ அல்லது வாயை திறந்து நாக்கை விரலால் தடவியோ மூச்சுவிடும் படி செய்யலாம். தொப்புள் கொடியை கன்றின் தொப்புளிலிருந்து 2 அங்குல தொலைவில் நூலினால் கட்டிவிட்டு சுத்தமான கத்தரியால் வெட்டி முனையில் டிங்ஞ்சர் அயோடின் திரவத்தை தடவவேண்டும். கன்று பிறந்த அரைமணி நேரத்திற்குள்ளாக சீம்பால் குடிக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். கன்று பிறந்த ஒரு வாரத்திற்குள் குடற்புழு நீக்க மருந்து கொடுத்து பிறகு 6 மாத வயது வரை மாதம் ஒரு குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். 6 மாதங்களுக்கு பிறகு 3 மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். கன்றுகளை பேன் மற்றும் மாட்டு ஈ போன்ற புற ஒட்டுண்ணிகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டும்.
அடர்தீவனத்தில் கால்நடைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் சரிவிகிதத்தில் இருக்க வேண்டும். கால்நடைகள் விரும்பி உண்ணும் பொருளாகவும் விலை மலிவாகவும் இருத்தல் நன்று. அடர்தீவனக்கலவையில் 100 கிலோ தயாரிக்க கீழ்க்கண்ட விகிதத்தில் பொருட்களை கலந்து தயாரிக்கலாம். தானிய வகைகள் - 35 கிலோ ( மக்காச்சோளம் அல்லது கம்பு அல்லது சோளம் ), புண்ணாக்கு வகைகள் - 25 கிலோ ( கடலைப்புண்ணாக்கு அல்லது எள்ளுப்புண்ணாக்கு ), தவிடு வகைகள் - 37 கிலோ ( அரிசித்தவிடு அல்லது கோதுமை தவிடு ), தாது உப்புக்கள் - 2 கிலோ ( அக்ரிமின் அல்லது சப்ளிவிட் - மருந்துவ கடைகளில் கிடைக்கும் ), சாதாரண உப்பு – 1 கிலோ ( சாப்பாடு உப்பு ).
பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதன் மூலம் செலவை குறைத்து பண்ணையை இலாபகரமாக நடத்த இயலும். பசுந்தீவனம் அதிக நார் மற்றும் புரதசத்தை தன்னுள் கொண்டிருக்கிறது. பல்லாண்டு தீவனப்புல் வகை – கம்பூ நேப்பியர் வீரியப்புல் ( கோ-1, கோ-3, கோ-4 ), கினியா புல், கொழுக்கட்டைப்புல், எருமைப்புல். தானியப்பயிர்கள் - தீவனச்சோளம், கம்பு, மக்காச்சோளம். பயறு வகை தீவனம் - வேலிமசால், காராமணி, குதிரைமசால், முயல்மசால், சணப்பை. தீவன மரங்கள் - சவுண்டல், அகத்தி, கிளைரிசிடியா.
தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க – கோமாரி நோயிலிருந்து பாதுகாக்க முதலில் 4 மாத வயதில் பின்பு 6 மாதத்திற்கு ஒருமுறை தடுப்பூசி போடலாம். சப்பை நோயிலிருந்து பாதுகாக்க முதலில் 6 மாத வயதில் பின்பு ஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசி போடலாம். தொண்டை அடைப்பான் நோயிலிருந்து பாதுகாக்க முதலில் 6 மாத வயதில் பின்பு ஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசி போடலாம். அடைப்பான் நோயிலிருந்து பாதுகாக்க முதலில் 6 மாத வயதில் பின்பு ஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசி போடலாம். ( நோயுள்ள பகுதிகளில் மட்டுமே இத்தடுப்பூசி போட வேண்டும் ). மேலும் விபரங்களுக்கு:-
உதவி பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
சேலம்.
தொலைபேசி 0427-2410408
தொகுப்பு:
முனைவர் து.ஜெயந்தி
முனைவர் ப.ரவி
மருத்துவர் என்.ஸ்ரீபாலாஜி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 3 days ago |
-
புதுச்சேரியில் புதுப்பிக்கப்பட்ட பஸ் நிலையம் இன்று திறப்பு
01 May 2025புதுச்சேரி, புதுச்சேரியில் புதுப்பிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் நீண்ட இழுபறிக்கு பிறகு இன்று (மே 2) திறக்கப்படுகிறது.
-
பள்ளிகள் மீண்டும் திறக்கும் தேதியில் மாற்றம் வருமா..? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
01 May 2025திருச்சி: கோடை விடுமுறை முடிந்து வெயிலைப் பொருத்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
-
54-வது பிறந்தநாள்: நடிகர் அஜித்துக்கு இ.பி.எஸ். வாழ்த்து
01 May 2025சென்னை, 54-வது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் அஜித்துக்கு இ.பி.எஸ். வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கேரளா, தமிழக பகுதிகளில் மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
01 May 2025சென்னை: இந்த மாத இறுதியில் கேரளா, தமிழக பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்புள்ளதாகவும், மே 15-ம் தேதி மத்திய வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகு
-
போர் பதற்றத்தை தணிக்க இந்தியா, பாகிஸ்தானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை
01 May 2025வாஷிங்டன், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டிருக்கும் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, வ
-
அண்ணா பல்கலைக்கழக வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவையற்றது: டி.ஜி.பி. அறிக்கை தாக்கல்
01 May 2025சென்னை, அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவையற்றது என டி.ஜி.பி. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆந்திராவில் பயங்கரம்: வீடு மீது கார் மோதிய விபத்தில் ஐந்து மருத்துவ மாணவர்கள் பலி
01 May 2025நெல்லூர், ஆந்திராவில் வீடு மீது கார் மோதியதில் மருத்துவ மாணவர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு தியாகி அந்தஸ்து: ராகுல் காந்தி கோரிக்கை
01 May 2025புதுடில்லி, பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு தியாகி அந்தஸ்து வழங்குமாறு ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
-
ஓரிரு நாட்களில் வெளியாகிறது: 10, பிளஸ் 2 சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு முடிவுகள்
01 May 2025சென்னை, 10, பிளஸ் 2 சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு முடிவுகள் ஓரிரு நாட்களில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
பஹல்காம் தாக்குதலில் தொடர்பில்லை: பாகிஸ்தான் மீண்டும் மறுப்பு
01 May 2025இஸ்லாமாபாத், பஹல்காம் தாக்குதலில் எங்களுக்கு தொடர்பில்லை என்று பாகிஸ்தான் மீண்டும் மறுத்துள்ளது.
-
சாதிவாரி கணக்கெடுப்புக்கு காலவரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும்: ராகுல் காந்தி
01 May 2025புதுடெல்லி, சாதிவாரி கணக்கெடுப்புஅறிவிப்பை வரவேற்றுள்ள, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அதற்கு காலவரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
-
ஜெருசலேம் அருகே பயங்கர காட்டுத்தீ: இஸ்ரேலில் தேசிய அவசர நிலை
01 May 2025ஜெருசலேம், ஜெருசலேம் அருகே பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டதால் இஸ்ரேலில் தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பஹல்காம் தாக்குதல்: விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க பாக்.கிற்கு அமெரிக்கா அறிவுறுத்தல்
01 May 2025வாஷிங்டன், பஹல்காம் தாக்குதல் விசாரணைக்கு பாகிஸ்தான் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என அமெரிக்கா அறிவுறுத்தியது.
-
4 நாட்கள் அரசு முறைப் பயணமாக அங்கோலா அதிபர் இந்தியா வருகை
01 May 2025அங்கோலா: அங்கோலா நாட்டு அதிபர் 4 நாள் பயணமாக இந்தியா வந்தார். இருநாடுகளுக்கும் இடையிலான ஏராளமான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
அமலுக்கு வந்த ஏ.டி.எம். கட்டண உயர்வு
01 May 2025புதுடெல்லி, ஏ.டி.எம். கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
பிரதமர் என்னை பின்தொடர்வதால் பா.ஜ.க. தலைவர்களுக்கு பொறாமை: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
01 May 2025ஐதராபாத், பிரதமர் நரேந்திர மோடி தன்னைப் பின் தொடர்வதினால் உள்ளூர் பா.ஜ.க. தலைவர்கள் பொறாமைப் படுகிறார்கள் என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி விமர்சித்துள்ளார்.
-
பஹல்காமுக்கு முன்பு மூன்று இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்? விசாரணையில் திடுக் தகவல்
01 May 2025ஸ்ரீநகர், பஹல்காம் தாக்குதலுக்கு முன்னதாக ஜம்மு - காஷ்மீரில் 3 இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
அட்சய திருதியை நாளில் தமிழ்நாட்டில் ரூ.272.32 கோடி வருவாய் ஈட்டிய பதிவுத்துறை
01 May 2025சென்னை: அட்சய திருதியை நாளில் 27,440 பத்திரப்பதிவின் மூலம் இதுவரையில் இல்லாத அளவில் ஒரே நாளில் அரசுக்கு ரூ.272.87 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
-
சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு
01 May 2025சென்னை, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளித்துள்ள மத்திய அமைச்சரவை முடிவுக்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
கரும்புக்கு ரூ.355 ஆதாய விலை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
01 May 2025புதுடில்லி, கரும்புக்கு குவிண்டாலுக்கு ரூ.355 வீதம் 10.25 சதவீத அடிப்படை மீட்பு விகிதத்துக்கு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
-
மற்ற நாடுகளின் கலாச்சாரங்களை மதிப்பதே நமது கலாச்சாரத்தின் பலம்: வேவ்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
01 May 2025மும்பை, மற்ற நாடுகளின் கலாச்சாரங்களை மதிப்பதே நமது கலாச்சாரத்தின் பலம் என்று மும்பையில் நடைபெற்ற வேவ்ஸ் உச்சி மாநாடு 2025-இல் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
-
சென்னையில் அறநிலையத்துறை சார்பில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள்: அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு
01 May 2025சென்னை, சென்னையில் அறநிலையத்துறை சார்பில் நடைபெற்று வரும் திருமண மண்டபம், பள்ளி வகுப்பறை, கல்லூரி கட்டிட கட்டுமானப் பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
-
தமிழகத்தில் வெப்பநிலை 3 டிகிரி வரை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு எச்சரிக்கை
01 May 2025சென்னை, தமிழகத்தில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
இந்தியாவில் 17 பெண் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்கள்
01 May 2025புதுடெல்லி, இந்தியாவில் 17 பெண் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்கள் என்று தெரியவந்துள்ளது.
-
மதுரையில் விஜய்க்கு த.வெ.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
01 May 2025மதுரை, மதுரைக்கு வந்த தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.