எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதிக மார்க் எடுத்தால் மட்டும் பிரதமராகி விட முடியுமா? புரிந்து படித்தால் மட்டுமே சாதிக்க முடியும்
நாளைய உலகம் மாணவர்கள் கையில்தான் உள்ளது. நாளைய தலைவர்கள், எதிர்கால நட்சத்திரங்கள் என்று மாணவர்கள் போற்றப்படுகின்றார்கள்.
நாட்டிற்கும் வீட்டிற்கும் செய்ய வேண்டிய கடமைகள் மாணவர்களுக்கு உள்ளது. மாணவர்களால் எதிர்கால உலகம் வளம் பெற வேண்டும் எனில் இன்றைய மாணவர்கள் சிறந்தவர்களாக உருவாக வேண்டும். இதற்கு நல்ல உடல் நலம், மன நலம், நல்ல சமூக நோக்கு ஆன்மீக பார்வை இவையும் நலமாக இருக்க வேண்டும்.
சிறந்த மாணவர்களுக்கு அடிப்படை நல்ல கல்வி. இன்றைய இந்திய கல்வி முறை உலக மாற்றங்களுக்கு ஏற்ற கல்வி முறையாக இல்லை. நம் கல்வி முறை அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் இல்லை. தற்போதைய போட்டி உலகினை எதிர் கொள்ள மாணவர்களின் திறமைகளை வளர்க்க அவர்களிடம் கலந்துரையாடும் சிந்தனையை உருவாக்க வேண்டும். கலந்துரையாடும் தன்மை அவர்களை சிறந்த எதிர்கால தலைவர்களாகவும் தொழில் துறை வல்லுநர்களாகவும் ஆக்க உதவும்.
மாணவர்கள் நல்ல உணவு பழக்கங்களை கைக்கொள்ள வேண்டும். சத்தான இயற்கை உணவுகளை மட்டும் உண்ணும் பழக்கம் அவர்களை சிறந்த உடல் நலத்துடன் வாழ உதவும். துரித உணவுகள் உள்ளிட்டவைகள் இளம் வயதிலேயே அதிக எடை ஏற்பட்டு விளையாட்டு போன்றவற்றில் சாதிக்க தடையாக இருக்கும்.
வன்முறை கலாச்சாரங்கள் தற்போது தலைதூக்கி வரும் இந்த நிலையில் மாணவர்கள் இளம் பருவத்திலேயே நல்ல சகிப்புத்தன்மை, பொறுமையை கற்றுக் கொள்ள வேண்டும். என் சமூகம் என் நாடு என்று பற்றுடன் இருந்தால் வன்முறை கலாச்சார சிந்தனை தடுக்கப்படும். பாலியல் வன்முறைகளை தடுக்க பாலியல் பற்றிய முறையான அறிவு மாணவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே தேசிய மாணவர் படை, என்.எஸ்.எஸ் போன்றவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
மாணவர்கள் தற்போதைய போட்டி உலகினை வெல்ல கணிணி கல்வியும் கற்க வேண்டும். மாணவர்கள் விளையாட்டு, கல்வி, சமூக அக்கரை உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்தி முறையான பயிற்சிகள் செய்து வந்தால் எதிர்கால உலகை சிறப்பாக ஆள்வது திண்ணம். எப்போதும், செல்போன்களை கையில் வைத்துக் கொண்டு, அதிலேயே கவனம் செலுத்தக் கூடாது. "பிச்சை புகினும் கற்கை நன்றே" என்று சொல்லிவிட்டு சென்றார்கள் நமது முன்னோர்கள். எனவே, மாணவர்களின் சிந்தனை எல்லாம் இளம் பருவத்தில் படிப்பிலேயே இருக்க வேண்டுமே தவிர, செல்போன் போன்றவற்றில் அதிக ஈடுபாடு கூடாது. மேலும், காதல் கத்திரிக்காய் போன்றவற்றில் மனதை அலைபாய விடக்கூடாது. படிக்கும் காலத்தில் படிப்புதான் முக்கியமே தவிர, காதல் போன்ற தேவையற்ற விஷயங்களில் மனதை செலுத்துவது வாழ்க்கை பாதையையே மாற்றிவிடும்.
ராம்குமாரின் விவகாரமே அதற்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டு. வலுவான பொருளாதாரம் இல்லாத வெட்டிதனமான காதல் எதுவும் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. எனவே, மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனத்தை செலுத்த வேண்டும். அதையும் மார்பில் குத்தி குத்தி மனப்பாடம் செய்தல் கூடாது. ஆசிரியர் கற்றுதரும் பாடங்களை நன்கு உள்வாங்கி அவற்றை புரிந்து படித்தலே நலம் பயக்கும். மனப்பாடம் செய்து வெற்றி பெரும் மாணவர்கள் வேலைக்கான நேர்காணலுக்கு செல்லும் போது, வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை. நன்கு புரிந்து படிக்கும் மாணவர்களே வேலைக்கான நேர்காணலில் வெற்றி பெறுகிறார்கள். புரிந்து படிக்காத மாணவர்கள் நேர்முக தேர்வில் வெற்றி பெறுவதில்லை. இன்றைய நமது கல்விமுறை பல மாணவர்களுக்கு உருப்படியான தமிழையும் கற்றுதருவதில்லை. உருப்படியான ஆங்கிலத்தையும் கற்றுத்தருவதில்லை. அதனால்தான் அவர்கள் சில சமயங்களில் தோல்வியை தழுவ நேரிடுகிறது.
பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகளில் சாதனை படைக்கும் மாணவிகள் பேட்டி கொடுக்கும்போது, நான் பிரதமர் ஆவேன். நான் ஜனாதிபதி ஆவேன். என்று சொல்கிறார்கள். அதை படிக்கும் போது நமக்கு சிரிப்புதான் வருகிறது. மனப்பாடம் செய்து மார்க் எடுத்துவிட்டால் எல்லோரும் மோடி ஆகிவிடமுடியாது. எல்லோரும் அப்துல் கலாம் ஆகிவிடமுடியாது. எனவே, நமது மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாம் சொன்னதை போல, மாணவ - மாணவிகள் கனவுகாண வேண்டும். அதோடு நிறுத்திக்கொள்ள கூடாது. நன்கு புரிந்து படித்து அந்த கனவை நனவாக்க வேண்டும். விளையாட்டு, விண்வெளி ஆராய்ச்சி போன்று துறைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். அப்போதுதான் ஒரு சிந்துவை போல் வெள்ளி பதக்கத்தை பெறமுடியும். சாக்சிமாலிக்கை போல வெங்கல பதக்கம் பெற முடியும். மாற்றுத்திறனாளியாக இருந்த போதிலும், தன்னம்பிக்கையோடு விளையாடியதால்தான் தமிழக வீரர் மாரியப்பனால் தங்க பதக்கத்தை வெல்ல முடிந்தது. ஆக சாதிப்பதற்கு ஊனம் அவருக்கு தடையாக இருக்கவில்லை. அவரது நம்பிக்கை அவருக்கு கைகொடுத்திருக்கிறது. ஆகவே, மாணவ - மாணவிகள் குருட்டு மனப்பாடம் செய்யாமல் புரிந்து படித்து வெற்றி பெற வேண்டும். பல்வேறு துறைகளிலும் மேற்கண்ட சாதனையாளர்களை பார்த்து வெற்றி பெற சபதம் எடுக்க வேண்டும். சுருக்கமாக சொன்னால் நமது முன்னாள் மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாம் சொன்னதை போல, கனவு கண்டு அவற்றை நனவாக்க கடின முயற்சி எடுக்க வேண்டும். என்பதே நமது எதிர்பார்ப்பு.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 7 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-05-2025
23 May 2025 -
தங்கம் விலை சற்று சரிவு
23 May 2025சென்னை: சென்னையில் நேற்று (மே 23) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,520க்கு விற்பனையானது.
-
அவசரமாக தரையிறங்க இந்திய விமானி கோரிக்கையை நிராகரித்த பாகிஸ்தான்
23 May 2025புதுடெல்லி, சேதமடைந்த விமானத்தை தரையிறக்க இந்திய விமானி கோரிக்கையை நிராகரித்த பாகிஸ்தான்.
-
நகைக்கடனுக்கான புதிய விதிகளை திரும்பப் பெற இ.பி.எஸ். வலியுறுத்தல்
23 May 2025சென்னை: நகைக்கடனுக்கான புதிய விதிகளை ரிசர்வ் வங்கி உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
த.வெ.க.வின் சின்னத்தை தேர்வு செய்வதில் தலைவர் விஜய் தீவிரம்
23 May 2025சென்னை, தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னத்தை தேர்வு செய்ய அக்கட்சியின் தலைவர் விஜய் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இனி இனிப்பிலும் கூட 'பாக்' இல்லை: 'மைசூர் ஸ்ரீ’ என மாறிய மைசூர் பாக்
23 May 2025ஜெய்ப்பூர்; இனிப்புகளில் அதிகளவிலான விரும்பிகளைக் கொண்ட மைசூர் பாகின் பெயரை, ராஜஸ்தானின் இனிப்புக்கடைகள் பெயர் மாற்றம் செய்துள்ளது.
-
பாக்.கிற்கு 1 பில்லியன் டாலர் ஏன்? சர்வதேச நாணய நிதியம் விளக்கம்
23 May 2025புதுடெல்லி, பாகிஸ்தானுககு 1 பில்லியன் டாலர் வழங்கியது தொடர்பாக நாணய நிதிக்கு விளக்கம் கேட்டுள்ளது.
-
தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்: சிங்கப்பூர் அமைச்சர் அறிவுரை
23 May 2025சிங்கப்பூர், தமிழ் மொழியை மாணவர்கள் அடுத்த 50 ஆண்டுகளுக்கு துடிப்புடன் வைத்திருக்க வேண்டும் என சிங்கப்பூர் சட்டத்துறை அமைச்சர் கே.சண்முகம் தெரிவித்துள்ளார்.
-
அதானி வழக்கையும் அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும்: சபாநாயகர் அப்பாவு
23 May 2025நெல்லை: டாஸ்மாக் விவகாரத்தை விசாரிப்பது போல், அதானி வழக்கையும் அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தியுள்ளார்.
-
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசுகிறார்
23 May 2025புதுடெல்லி: நடப்பு நிதியாண்டிற்கான நிதி ஆயோக் கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று (24ம் தேதி )நடைபெற உள்ளது.
-
வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம்: ராஜினாமா செய்ய முகமது யூனுஸ் முடிவு
23 May 2025டாக்கா, வங்கதேசத்தில் தேர்தலை விரும்பாத முகமது யூனுஸ் ராஜினாமா செய்வதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
-
கேரளாவில் கொரோனா பாதிப்பு 182 ஆக அதிகரிப்பு - 2 பேர் பலி
23 May 2025திருவனந்தபுரம்: கடந்த 2 நாட்களில் கேரள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 182 ஆக உயர்ந்துள்ளது.
-
தமிழகத்தில் ஜூன் 2-ல் பள்ளிகள் திறப்பு உறுதி தொடக்கக் கல்வி இயக்ககம் அறிக்கை
23 May 2025சென்னை: தமிழகத்தில் ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தொடக்கக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்திற்கு நிதி ஒதுக்காதது ஏன்? உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்
23 May 2025சென்னை: தமிழகத்திற்கு நிதி ஒதுக்காதது குறித்து உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
மின்சாரத்துறைக்கு ரூ.2 லட்சம் கோடி முதலீடு தேவை: அமைச்சர் சிவசங்கர்
23 May 2025பெங்களூரு: எதிர்வரும் ஐந்து முதல் ஏழாண்டுகளில் மின்சாரத் துறைக்கு ரூ.2 லட்சம் கோடி முதலீடு தேவை என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
-
டெல்லி சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சோனியா, ராகுலுடன் சந்திப்பு
23 May 2025டெல்லி: டெல்லி சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
-
சிங்கம்புணரி குவாரி விபத்து: இருவர் கைது; உரிமையாளர் தலைமறைவு
23 May 2025சிங்கம்புணரி, சிங்கம்புணரி அருகே கல் குவாரியில் பாறை சரிந்து விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவத்தில் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
-
ரெட் அலர்ட் எச்சரிக்கை: கோவை, நீலகிரிக்கு பேரிடர் மீட்புப்படை விரைவு
23 May 2025கோவை: ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
-
ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் பூங்காவுக்கான டெண்டர் வெளியீடு
23 May 2025சென்னை: ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
-
சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஓகா ஓய்வு: கடைசி வேலை நாளிலும் 10 தீர்ப்பு
23 May 2025புதுடில்லி: ஓய்வுபெறும் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏ.எஸ். ஓகா, மரபை ஒதுக்கி, கடைசி வேலை நாளிலும் 10 வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளார்.
-
வீழ்த்தவே முடியாத மாவீரர் பெரும்பிடுகு முத்தரையர் எடப்பாடி பழனிசாமி புகழாரம்
23 May 2025சென்னை: போர்க்களத்தில் எதிரிகளால் வீழ்த்தவே முடியாத வாகைப்பூ சூடிய மாவீரராக திகழ்ந்த பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
வர்த்தகம் முதல் சுற்றுலா வரை வடகிழக்கு மாநிலங்கள் பன்முகத்தன்மை கொண்டவை: பிரதமர் மோடி பெருமிதம்
23 May 2025புதுடெல்லி, வர்த்தகம் முதல் பாரம்பரியம் வரை, ஜவுளி முதல் சுற்றுலா வரை, வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் மிகவும் பன்முகத்தன்மை கொண்ட பகுதி என்று பிரதமர் நரேந்திர மோடி தெ
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் 13,000 ரன்கள்: ஜோ ரூட் புதிய சாதனை
23 May 2025நாட்டிங்காம்: டெஸ்ட் கிரிக்கெட்டில் 13,000 ரன்களை கடந்த 5வது வீரர் என்ற சாதனையை ஜோ ரூட் படைத்தார்.
முதல் டெஸ்ட்...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: நடுவர்களை அறிவித்த ஐ.சி.சி
23 May 2025லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான நடுவர்கள் விவரங்களை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.
இறுதிப்போட்டி...