எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம் : தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்களால் இதுவரை 10 ஆயிரத்து 411 பேர் சுமார் ரூ.21 கோடி மதிப்பில் பயனடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறன் கொண்ட மாற்றுத்திறனாளிகளின் நலனை மேம்படுத்திடும் விதமாகவும்,அவர்கள் சுயமாக தன்னம்பிக்கையுடன் சமுதாயத்தில் முத்திரை பதித்திட ஊக்குவித்திடும் வகையிலும் தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களின் கீழ் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் வருவாய்த்துறையின் மூலம்; 10ஆயிரத்து 411 மாற்றுத்திறனாளிகள் மொத்தம் ரூ.21.30 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளைப் பெற்று பயனடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் 6 மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளிகளும், 2 மனநல காப்பகங்களும், ஒரு மனவளர்ச்சி குன்றியோருக்கான ஆரம்பகால பயிற்சி மையமும், ஒரு உடல் ஊனமுற்றோருக்கான இல்லமும், ஒரு 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான இல்லமும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதுதவிர, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் அரசு சிறப்பு மருத்துவர்கள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட்டு இதுவரை மொத்தம் 26ஆயிரத்து 721 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட 40 சதவீதம் மற்றும் 40 சதவீதத்திற்கும் அதிகமான மாற்றுத்திறன் கொண்ட மாற்றுத்திறனாளிகள், வருவாய்த்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மாதந்தோறும் ரூ.ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியானவர்கள் ஆவார்கள். இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் தற்போது ஆயிரத்து 158 பயனாளிகள் மாதந்தோறும் ரூ.ஆயிரம் பெற்று பயனடைந்து வருகின்றனர்.
மேலும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்களான மனவளர்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2ஆயிரத்து 940 பயனாளிகளுக்கு ரூ.5கோடியே 42லட்சத்து 52ஆயிரம் மதிப்பிலும், கடும் உடல் ஊனமுற்றோருக்கான பராமரிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் 848 பயனாளிகளுக்கு ரூ.ஒரு கோடியே 55லட்சத்து 34ஆயிரம் மதிப்பிலும், தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் 60 பயனாளிகளுக்கு ரூ.9லட்சத்து 90ஆயிரம் மதிப்பிலும், தொழுநோயினால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் 62 பயனாளிகளுக்கு ரூ.7லட்சத்து 68ஆயிரம் மதிப்பிலும், கை,கால் பாதிக்கப்பட்டோர், பார்வையற்றோர், காது கேளாதோருக்கான திருமண உதவித்தொகை மற்றும் 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 12 பயனாளிகளுக்கு ரூ.4லட்சம் மதிப்பிலும், கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 372 பயனாளிகளுக்கு 10லட்சத்து 25ஆயிரம் மதிப்பிலும், வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.17ஆயிரம் மதிப்பிலும், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று நிலைகளைப் பெற்ற காது கேளாத மற்றும் பார்வையற்ற மாணவ, மாணவியருக்கான பரிசுத்தொகை வழங்கும் திட்டத்;தின் கீழ் 6 பயனாளிகளுக்கு ரூ.65ஆயிரத்து 550 மதிப்பிலும், மீட்புத்திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.15ஆயிரம் மதிப்பிலும் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல வேலையில்லா படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.16ஆயிரம் மதிப்பிலும், பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.20ஆயிரம் மதிப்பிலும், சுயதொழில் புரிவோருக்கான வங்கிக்கடன் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 47 பயனாளிகளுக்கு ரூ.4லட்சத்து 70ஆயிரம் மதிப்பிலும், இலவச பேருந்து பயணச் சலுகை திட்டத்தின் கீழ் 373 பயனாளிகளுக்கு ரூ.4லட்சத்து 16ஆயிரத்து 410 மதிப்பிலும், இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் 35 பயனாளிகளுக்கு ரூ.20லட்சத்து 54ஆயிரத்து 150 மதிப்பிலும், மூன்று சக்கர வண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.32ஆயிரம் மதிப்பிலும், சக்கர நாற்காலி வழங்கும் திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு ரூ.81ஆயிரம் மதிப்பிலும், சிறப்பு சக்கர நாற்காலி வழங்கும் திட்டத்தின் கீழ் 30 பயனாளிகளுக்கு ரூ.6லட்சம் மதிப்பிலும், நவீன செயற்கை அவயம் வழங்கும் திட்டத்தின் கீழ் 6 பயனாளிகளுக்கு ரூ.1லட்சத்து 80ஆயிரம் மதிப்பிலும், கால்தாங்கி வழங்கும் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.18,400 மதிப்பிலும், காதொலிக்கருவி வழங்கும் திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளுக்கு ரூ.15லட்சம் மதிப்பிலும், மோட்டார் பொருந்திய தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 50 பயனாளிகளுக்கு ரூ.2லட்சம் மதிப்பிலும், ஊன்றுகோல் வழங்கும் திட்டத்தின் கீழ் 35 பயனாளிகளுக்கு ரூ.10ஆயிரத்து 10 மதிப்பிலும், வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 5ஆயிரத்து 396 பயனாளிகளுக்கு ரூ.13கோடியே 62லட்சத்து 96ஆயிரம் மதிப்பிலும் என மொத்தம் 10ஆயிரத்து 411 பயனாளிகளுக்கு ரூ.21கோடியே 49லட்சத்து 60ஆயிரத்து 520 மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் வழங்கும் ஏற்றம் பெறும் விதமாக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் இத்தகைய நலத்திட்டங்களை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தை அனுகி முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 3 weeks ago |
-
ஈரானின் உச்ச தலைவரை குறிவைத்தால்...ஈராக் ஷியா மதகுரு எச்சரிக்கை
19 Jun 2025ஈரான்: ஈரானில் உயர் தவைர் அயதுல்லா அலி கமேனியை குறிவைப்பதற்கு எதிராக ஈராக்கின் ஷியா பிரிவின் மதகுரு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தங்கம் விலை ரூ.520 உயர்வு
19 Jun 2025சென்னை, தமிழகத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 9,200 ரூபாய்க்கும்; சவரன், 73,600 ரூபாய்க்கும் விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-06-2025.
19 Jun 2025 -
எனது கருத்தியல் உடன்பிறப்புக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்: முதல்வர்
19 Jun 2025சென்னை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டின் மீது உலக நாடுகள் அதிக நம்பிக்கை: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
19 Jun 2025சென்னை, திராவிட மாடல் ஆட்சியில் தொழில்துறை மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது என்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச இயந்திர கண்காட்சியை தொடங்கி வைத்து பெருமி
-
ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு மின்சாரம், குடிநீர் இணைப்பு கொடுத்தது எப்படி? சென்னை ஐகோர்ட் கேள்வி
19 Jun 2025சென்னை, நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு கொடுத்தது எப்படி என விளக்கம் அளிக்க தாம்பரம் மாநகராட்சி ஆணையர், மின்சார வாரியத
-
பா.ம.க. எம்.எல்.ஏ.,க்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வோம்: பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி பேச்சு
19 Jun 2025சேலம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் 2 பேர் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் குணமடைய பிரார்த்தனை செய்வோம்' என பா.ம.க., தலைவர் அன்புமணி
-
இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்: 47 பேர் காயம்
19 Jun 2025டெல் அவிவ்: இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் ஏவுகணைகள் தாக்கியதில் 47 பேர் காயமடைந்தனர்.
-
ஈரான்-இஸ்ரேல் மோதலில் மத்தியஸ்தம் செய்ய தயார் ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு
19 Jun 2025மாஸ்கோ: ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பரஸ்பர தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இரு தரப்பினருக்கும் இடையே மத்தியஸ்தம் செய்துவைக்கத் தயாராக இருப்பதாக புதின்
-
சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் பலி
19 Jun 2025திருச்சி, திருச்சி முக்கொம்பு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆராவமுத தேவசேனா உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்திய அணியில் ஹர்ஷித் ராணா
19 Jun 2025இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
-
அமராவதி அணையிலிருந்து நீர் திறப்பு
19 Jun 2025கோவை: அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
-
தி.மு.க.வில் கூடுதலாக உறுப்பினர் சேர்க்கும் பணி: வருகிற 25 - ம் தேதி தொடங்கி வைகிறார் முதல்வர் ஸ்டாலின்
19 Jun 2025சென்னை, தி.மு.க.வில் 30 சதவீதம் கூடுதல் உறுப்பினர் சேர்க்கும் பணியை வருகிற 25-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
-
த.வெ.க. மருத்துவர் அணி புதிய பொறுப்பாளர்கள் நியமனம்
19 Jun 2025சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் மருத்துவர் அணிக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.
-
பா.ம.க., பிரச்னையில் தி.மு.க. தலையீடா..? அப்பட்டமான பொய் என்கிறார் ராமதாஸ்
19 Jun 2025சென்னை, பா.ம.க., பிரச்னையில் தி.மு.க., தலையிடுவதாக அன்புமணி விமர்சனம் செய்துள்ளது அப்பட்டமான பொய் என ராமதாஸ் பதில் அளித்தார்.
-
கீவ் நகர் மீது பயங்கர தாக்குதல்: ரஷ்யாவுக்கு மேலும் அழுத்தம் கொடுக்க ஜெலன்ஸ்கி கோரிக்கை
19 Jun 2025உக்ரைன்: உக்ரைன்- ரஷ்யா இடையில் 3 வருடங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இரு பக்கமும் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-
சட்டவிரோத பணக்குவியல் விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பணிநீக்கம் செய்ய விசாரணைக்குழு பரிந்துரை
19 Jun 2025புதுடில்லி, வீட்டில் சட்டவிரோதமாக பணக்குவியல்களை மறைத்து வைத்த விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பணிநீக்கம் செய்யுமாறு விசாரணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
-
சென்னையில் லாரி ஏறி பள்ளி சிறுமி பலி: கனரக வாகனங்களுக்கு தீவிர நேரக் கட்டுப்பாடு
19 Jun 2025சென்னை: சென்னையில் லாரி ஏறி பள்ளி சிறுமி பலியான சம்பவத்தை அடுத்து அங்கு கனரக வாகனங்களுக்கு தீவிர நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
-
சட்டவிரோத குடியேற்றம்; திருப்பூரில் 26 வங்கதேசத்தினர் கைது
19 Jun 2025திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் சட்டவிரோதமாக, போலி ஆவணங்களை பயன்படுத்தி வசித்து வந்த வங்கதேசத்தினர் 26 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
ராபர்ட் புரூஸுக்கு எதிரான தேர்தல் வழக்கில் நயினார் நாகேந்திரன் ஆஜர்
19 Jun 2025சென்னை: திருநெல்வேலி தொகுதி எம்.பி ராபர்ட் புரூஸ் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில், பா.ஜ.க.
-
இஸ்ரேல் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்த போவதாக ஈரான் அறிவிப்பு
19 Jun 2025டெஹ்ரான்: இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக குற்றம்சாட்டி, கடந்த 13-ந்தேதி ஈரான் மீது இ்ஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது.
-
இந்தியா - இங்கி., முதல் டெஸ்ட் போட்டி இன்று லீட்சில் துவக்கம்
19 Jun 2025லீட்ஸ்: இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, லீட்சில் இன்று தொடங்க உள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி...
-
தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை மறைக்க முயற்சி: கீழடி விவகாரத்தில் மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
19 Jun 2025சென்னை, தமிழ் என்றால் கசப்புடனும், தமிழர்கள் என்றால் வெறுப்புடனும் பார்க்கக் கூடிய மத்திய பா.ஜ.க.
-
வரும் ஜூன் 24, 25-ம் தேதிகளில் அ.இ.அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
19 Jun 2025சென்னை: வரும் 24, 25 ஆகிய நாட்களில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
ஆங்கிலத்தில் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள்: அமித்ஷா உறுதி
19 Jun 2025புதுடில்லி, '' நமது நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படுவார்கள். இது போன்ற சமூகம் விரைவில் உருவாகும், '' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.