எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலூர் கற்பகம் கூட்டுறவு அங்காடி ராஐhகோபால் நிலைய வளாகத்தில் வேலூர் மாவட்டத்தில் பொதுவிநியோக திட்டத்தில் பயன்பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை கலெக்டர் சி.அ.ராமன், வழங்கினார். இந்த விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் மரு.தா.செங்கோட்டையன் அவர்கள் முன்னிலை வகித்தார்.விழாவில் கலெக்டர் அவர்கள் மின்னணு அட்டைகளை வழங்கி பேசியதாவது. நியாயவிலை கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு குறைவான விலையில் உணவு பொருள் வழங்கும் முறை என்பது இரண்டாம் உலகபோரின் போது ஏற்பட்ட உணவு தட்டுப்பாட்டின் காரணமாக நாட்டின் ஒரு சில பகுதிகளில் அரசு பொதுமக்களுக்கு உணவு பொருட்களை வழங்க ஏற்பாடுகளை செய்தது. அதன்படி இந்தியாவிலேயே முதன்முதலாக மும்பையில் 1939 ஆம்ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர் இந்தியா சுதந்திரத்திற்கு பிறகு இந்த திட்டத்தை நிறுத்தி விட அரசு முற்பட்டபோது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இத்திட்டம் தொடர்ந்து நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய அரசின் முதல் 5 ஆண்டு திட்டத்தில் அரிசி மற்றும் கோதுமைகளை வழங்கலாம் என்று முடிவு செய்து அவ்வாறே நாடு முழுவதும் வழங்கப்பட்டு வந்தது. தற்போது கடந்த 2013 ஆம் ஆண்டு உணவு பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டு ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 5 கிலோ அரிசி என நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகள் 2005 ஆம் ஆண்டு வழங்கப்பட்டு ஏறக்குறைய 11 ஆண்டுகள் பயன்பாட்டில் உள்ளது. மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்கள் இந்த குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக நவீன காலத்திற்கு ஏற்றார் போல மின்னணு குடும்ப அட்டைகளை வழங்க ஆணை பிறப்பித்து அவற்றின் மீது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்த சிறப்பான திட்டத்தினை செயல்படுத்தி உள்ளார்கள். அதனடிப்படையில் கடந்த 2016 செப்டம்பர் முதல் குடும்ப அட்டைகள் குறித்தும் பொருட்கள் வழங்குவது குறித்தும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு அவைகள் வெற்றிகரமாக நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. மேலும் தற்போது குடும்ப அட்டைகளை மின்னணு குடும்ப அட்டை (ளுஆயுசுவு ஊயுசுனு) எனும் கையடக்க அட்டையாக மாற்றப்பட்டு நமது வேலூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக வேலூர் வட்டத்தில் 7703ம் ,வாலாஐh வட்டத்தில் 15838ம் அரக்கோணம் வட்டத்தில் 11215ம் மின்னணு அட்டைகளும் இன்று முதல் வழங்கப்படுகிறது மேலும் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள 8,87,933 குடும்ப அட்டைகளுக்கும் படிப்படியாக இரண்டு மாதத்தில் வழங்கப்படும். இந்த மின்னணு குடும்ப அட்டையில் குடும்ப தலைவரின் புகைபடம் அச்சடிக்கப்பட்டிருக்கும். இந்த அட்டை தொலைந்து போனாலும் அரசின் பொது சேவை கணினி மையங்களில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் பெயர் சேர்த்தல் நீக்கல் மேலும் குடும்ப தலைவரின் புகைப்படத்தை மாற்றுதல் போன்றவைகளை அட்டைதாரர்களே இணைய தளத்தின் வழியே தற்போது செய்து கொள்ள எளிமையாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மின்னணு குடும்ப அட்டைகள் பொதுமக்கள் பொருட்கள் வாங்கும் அந்தந்த நியாவிலை கடைகளிலே வழங்கப்படும். புதிய மின்னணு குடும்ப அட்டை அச்சடிக்கப்பட்டு விநியோகிக்க தயார் நிலையில் உள்ளபோது குடும்ப அட்டைதாரின் கைபேசிக்கு குறுஞ்செய்தி வழியாக அடையாள எண் அனுப்பி வைக்கப்படும். இந்த அடையாள எண்ணினை வரபெற்ற 7 நாட்களுக்குள் நியாய விலை கடை விற்பனையாளரிடம் காண்பித்து புதிய குடும்ப அட்டையை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம். புதிய மின்னணு குடும்ப அட்டை கிடைக்க பெறாதவர்கள் பழைய குடும்ப அட்டையை கொண்டே இன்னும் இரண்டு மாதங்களுக்கு உணவு பொருட்களை நியாயவிலை கடைகளில் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தி பயனடையுமாறு கலெக்டர் சி.அ.ராமன், பேசினார். இந்த விழாவில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன், மண்டல கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைபதிவாளர் திருகுணஐயப்பத்துரை, வேலூர் வருவாய் கோட்டாட்சியர் அஐய்சீனிவாசன், வேலூர் மாவட்ட மொத்த கூட்டுறவு பண்டக சாலை தலைவர் டி.ராஐh, துணை தலைவர் மணி, மாவட்ட பதிவாளர் பொது விநியோக திட்டம் முனிராஐ;, வேலூர் வட்டாட்சியர் பழனி, தனிவட்டாட்சியர் குடிமை பொருள் இளஞ்செழியன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.இந்த விழாவில் மாவட்ட வழங்கல் அலுவலர் வேணுசேகரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்,இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட மொத்த கூட்டுறவு பண்டக சாலை மேலாண்மை இயக்குநர் காமாட்சி அவர்கள் நன்றியுரையாற்றினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 weeks ago |
-
அணு ஆயுதங்களை பயன்படுத்த நாங்கள் திட்டமிடவில்லை : பாகிஸ்தான் அமைச்சர் தகவல்
13 May 2025இஸ்லாமாபாத் : காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இல்லை.
-
பாகிஸ்தானுக்கு ஆயுதங்களுடன் விமானம் அனுப்பப்படவில்லை: சீனா திட்டவட்டம்
13 May 2025பீஜிங் : பாகிஸ்தானுக்கு ஆயுதங்களுடன் விமானம் அனுப்பப்படவில்லை என்று சீனா திட்டவட்டமாக தெரிவித்தது.
-
9 ஆயிரம் இடங்களில் முகாம்கள் நடைபெறுகிறது: மகளிர் உரிமைத் திட்டத்தில் வரும் ஜூன் 4-ம் தேதி விண்ணப்பிக்கலாம்
13 May 2025சென்னை : மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுப்பட்ட பெண்கள் வரும் ஜூன் 4-ம் தேதி விண்ணப்பிக்கலாம்.
-
மேற்கு ஆப்பிரிக்காவில் பயங்கரவாதிகள் தாக்குதலில்100-க்கும் மேற்பட்டோர் பலி
13 May 2025பமாகோ : மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : கோவை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
13 May 2025கோவை : பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
-
ஜம்மு-காஷ்மீரில் பள்ளிகள் மீண்டும் திறப்பு
13 May 2025பாகிஸ்தான் : இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, எல்லையில் அமைதி நிலவுகிறது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினின் பல்வேறு திட்டங்களால் மகளிர் நலன்களை மேம்படுத்துவதில் இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டி : தமிழக அரசு பெருமிதம்
13 May 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினின் பல்வேறு திட்டங்களால் மகளிர் நலன்களை மேம்படுத்துவதில் இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டியாக உள்ளது என்று தமிழக அரசு பெருமிதம் தெரிவித்து
-
சவுதி பட்டத்து இளவரசருடன் அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திப்பு
13 May 2025ரியாத் : அமெரிக்க ஜனாதிபதியாக 2வது முறையாக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார்.
-
லிபியா தலைநகரில் கடும் மோதல்: 6 பேர் உயிரிழப்பு
13 May 2025வட ஆப்பிரிக்க, வட ஆப்பிரிக்க நாடான லிபியாவின் தலைநகர் திரிப்பொலியில் இரண்டு ஆயுதப் படைகளுக்கு இடையிலான மோதலில் 6 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
-
பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு பிரதமர் மோடி திடீர் விசிட் : வீரர்களுடன் கலந்துரையாடி பாராட்டு
13 May 2025புதுடெல்லி : பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்துக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, வீரர்களுடன் கலந்துரையாடி அவர்களின் துணிச்சலை பாராட்டினார்.
-
பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு: முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்துக்கு இ.பி.எஸ். பதில்
13 May 2025சென்னை : பொள்ளாச்சி தீர்ப்பு குறித்த முதல்வர் மு.க. ஸ்டாலினின் கருத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் கருத்து கூறியுள்ளார்.
-
ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாட கொடி யாத்திரை நடத்த பா.ஜ.க. முடிவு
13 May 2025புதுடெல்லி, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியை பாஜக கொண்டாடும் வகையில் நாடு முழுவதிலும் ‘திரங்கா யாத்ரா நடத்துகிறது.
-
பாகிஸ்தான் ராணுவத்தின் 51 இடங்களை தாக்கினோம்: பலுசிஸ்தான் விடுதலைப்படை தகவல்
13 May 2025குவெட்டா, பாகிஸ்தானின் தென்மேற்கில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க கோரி பலுசிஸ்தான் விடுதலைப்படை (பிஎல்ஏ) என்ற பெயரில் கிளர்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக
-
மக்களின் சட்டப்பூர்வ உரிமைகளை தி.மு.க. அரசு நிலைநாட்டி வருகிறது : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவு
13 May 2025சென்னை : மக்களின் சட்டப்பூர்வ உரிமைகளை தி.மு.க. அரசு நிலைநாட்டி வருகிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
சி.பி.எஸ்.இ. +2 தேர்வில் 83.39 சதவீதம் பேர் தேர்ச்சி
13 May 2025புதுடெல்லி : சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 83.39 சதவீத மாணவர்க்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
ரூ.586.94 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 13 பகுதிகளில் 5,180 அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறப்பு : அமைச்சர் தா. மோ. அன்பரசன் தகவல்
13 May 2025சென்னை : 13 திட்டப்பகுதிகளில் 5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறக்கப்படவுள்ளதாக குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ.
-
ஜம்மு -காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
13 May 2025ஜம்மு : ஜம்மு -காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நேற்று (செவ்வாய்கிழமை) காலை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
-
எல்லை வான் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த ரஷ்யாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை
13 May 2025புதுடில்லி : சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் வான் பாதுகாப்பை வலுப்படுத்த, ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகளை வாங்குவதற்கான பேச்சுவார
-
கேரளாவில் ரூ.9 கோடி கஞ்சா பறிமுதல்
13 May 2025திருவனந்தபுரம் : அபுதாபியில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.9 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா கோழிக்கோடு விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
-
பஹல்காம் பயங்கரவாதிகள் பற்றி தகவல் அளித்தால் ரூ.20 லட்சம் சன்மானம்
13 May 2025புதுடெல்லி, பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 3 பேர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு, ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும்.
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
13 May 2025சென்னை : பொல்லாத அதிமுக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது.
-
மலர் கண்காட்சியை முன்னிட்டு ஊட்டிக்கு மே 15-ல் உள்ளூர் விடுமுறை
13 May 2025உதகை : உதகையில் மலர்க் கண்காட்சியையொட்டி, வருகிற மே 15 ஆம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்கப் பொருட்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதிக்க இந்தியா முடிவு
13 May 2025புதுடெல்லி : அமெரிக்க தயாரிப்புகளுக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க இந்தியா முடிவெடுத்துள்ளது.
-
எல்லைப் பகுதிகளில் அமைதி திரும்பியது
13 May 2025ஸ்ரீநகர் : சர்வதேச எல்லையில் போர்நிறுத்த மீறல்கள் எதுவும் நடக்கவில்லை. எல்லைப் பகுதிகளில் அதிமையான சூழ்நிலை நிலவுகிறது என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
-
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்ச்சியில் சென்னை மண்டலம் 4-ம் இடம்
13 May 2025புதுடெல்லி : சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று பிற்பகல் வெளியிடப்பட்ட நிலையில், மொத்தம் 93.66 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.