எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்த செய்தியாளர் பயணம் ஆலத்தூர் வட்டாரத்திற்குப்பட்ட மங்கூன், பெரம்பலூர் வட்டாரத்திற்குட்பட்ட நெடுவாசல், செங்குணம்;; உள்ளிட்ட பகுதிகளில் வேளாண்துறை இணை இயக்குநர் சுதர்சன் தலைமையில் நேற்று (26.04.17) மேற்கொள்ளப்பட்டது.
சமச்சீர் வளர்ச்சி
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப்பெருக்கும் வகையில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கும் திட்டத்தின்கீழ் ஆலத்தூர் வட்டம் செங்குணம் பகுதியில் ரூ.1.61 லட்சம் மதிப்பில் ரூ.80,500 அரசு மானிய உதவித்தொகையுடன் பயனடைந்த ஜெகன்மோகன் என்ற விவசாயி தனது நிலத்தில் அமைத்திருந்த ஒருங்கிணைந்த பண்ணையையும், பெரம்பலூர் வட்டத்தில் நெடுவாசல் பகுதியில்; சுரேஸ் என்பவரது வயலில் 100 சதவீத மானிய உதவியுடன் சொட்டுநீர் பாசன அமைப்பு உதவியுடன் அமைக்கப்பட்டிருந்த மக்காச்சோள வயலினையும், செங்குணம் பகுதியில் நாகராஜன் என்பவரது வயலில் அமைக்கப்பட்டிருந்த உளுந்து விதைப்பண்ணையையும் செய்தியாளர்களுடன் சென்று வேளாண் இணைஇயக்குநர் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து விளக்கினார்.
அதனை தொடர்ந்து வேளாண்த்துறை இணை இயக்குநர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் வேப்பந்தட்டை மற்றும் ஆலத்தூர் வட்டாரத்தில்; தலா 25 விவசாயிகள் வீதம் 50 விவசாயிகளுக்கு மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் தலா ஒருங்கிணைந்த பண்ணையம் என்ற திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் ஒரு விவசாயிக்கு 50 சதவீத மானியத்தில் ரூ.66,000 மதிப்புடைய இரண்டு ஜெர்சி மாடுகள், ரூ.30,000 மதிப்புடைய 11 வெள்ளாடுகள், ரூ.5,000 மதிப்புடைய 30 நாட்டுக்கோழிகள், ரூ.20,000 மதிப்பில் அமைக்கப்பட்ட சாணஎரிவாயுக்கலன், ரூ.25,000 மதிப்பிலான மண்புழு தயாரிக்கும் அமைப்புகள்,ரூ.15,000 மதிப்புடைய தீவனப்புல் வளர்ப்பு திட்டம் என மொத்தம் ரூ.1,61,000 மதிப்பிலான இத்திட்டத்தை அரசின் 50 சதவீத மானிய உதவித்தொகையான ரூ.80,500 மதிப்பிலான ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்திற்கென ஒரு வட்டாரத்திற்கு ரூ.20.12 லட்சம் வீதம் இரண்டு வட்டாரங்களுக்கு 40.24 லட்சம் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் ஒரு விவசாயி தனது தொழில் சார்ந்து தன்னிறைவு அடைவதுடன், அங்கு உருவாக்கப்படும் பயோ கேஸ் மூலம் வீட்டிற்குத்தேவையான எரிவாயுவையும் உற்பத்திசெய்துகொள்ள முடிகின்றது.
விவசாய பணிகளுக்காக தேவைப்படும் நீரின் அளவினை குறைக்கும் வகையில் விவசாய நிலங்களில் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன அமைப்புகள் ஏற்ப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்திற்கு நுண்ணீர் பாசன அமைப்பு ஏற்ப்படுத்திட 2015 முதல் நடப்பாண்டுவரை மொத்தம் 444 விவசாயிகளுக்கு 453.77 ஹெக்டேர் பரப்பிலான வயல்களுக்கு அரசின் மானிய உதவியுடன் சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசன வசதிகள் செய்துதரப்பட்டுள்ளது.
சொட்டுநீர் பாசன அமைப்புகளை ஏற்ப்படுத்திட சிறு, குறு மற்றும் ஆதிதிராவிடர்ஃபழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீதம் மான்யமாக ரூ.1,00,000- வரையும், பெரு விவசாயிக்கு 75 சதவீதம் மான்யமாக ரூ.75,000- வரையும், தெளிப்புநீர் பாசன கருவி சிறு, குறு மற்றும் ஆதிதிராவிடர்ஃபழங்குடியினர் விவசாயிகளுக்கு 100 சதவீதம் மான்யமாக ரூ.19,600ஃ- வரையிலும், பெரு விவசாயிக்கு 75 சதவீதம மான்யம் ரூபாய் 14,700- வரையிலும் வழங்கப்பட்டு வருகிறது.
பெரம்பலூர் வட்டம் செங்குணம் பகுதியில் விவசாயிகளுக்கு தரமான விதை வினியோகம் செய்யும் பொருட்டு விதைப்பெருக்குத்திட்டத்தின் கீழ் உளுந்து விதைப்பண்ணையம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் உளுந்து பயிர் செய்துள்ள விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் விதைப்பண்ணை விவசாயிகளுக்கு கிலோவிற்கு ரூ.25 வீதம் உற்பத்தி மானியம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நடப்பாண்டில் 248 மெட்ரிக் டன் சான்று பெற்ற நெல்விதைகள் கொள்முதல் செய்யப்பட்டு, 223 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. வரகு 3.94 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. பயறு வகை பயிர்களான உளுந்து மற்றும் துவரை 23.11 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு 20.1 மெட்ரிக் டன் விதை விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நிலக்கடலை 17.55 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு 13.79 மெட்ரிக் டன் விதை விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில், விநியோகம் செய்ய நெல் 39.86, வரகு 3.94, உளுந்து 4.50, துவரை 1.15 மற்றும் நிலக்கடலை 7.12 மெட்ரிக் டன் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைப்பதுடன், விதை உற்பத்தி விவசாயிகளுக்கு உரிய விலையும் கிடைக்கின்றது. இவ்வாறு தெரிவித்தார்.
இப்பயணத்தின்போது ஆலத்தூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர்கள் ராஜசேகரன்(ஆலத்தூர்), கீதா(பெரம்பலூர்), வேளாண்மை அலுவலர் கண்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 6 hours ago |
ஸ்வீட் பால்.4 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 11 hours ago |
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
மொபைல் செயலிகள் மூலம் மோசடி: நாடு முழுவதும் சி.பி.ஐ. சோதனை
01 May 2024புதுடில்லி : மொபைல் செயலிகள் மூலம் முதலீடு திட்டங்கள் என்ற பெயரில் நடைபெற்று வரும் மோசடி குறித்து நாடு முழுவதும் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் சி.பி.ஐ.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பா? - மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
01 May 2024புதுடெல்லி : கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்க
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தானம் அனுமதி
01 May 2024திருமலை : ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய பெங்களூரு மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தான அனுமதி வழங்கியுள்ளது.