எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சேலம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையில் சார்பில் வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மண்வள இயக்கம் குறித்து கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், காவேரிபுரம் பகுதிகளில் செய்தியாளர் பயணம் கலெக்டர் வா.சம்பத், தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் கலெக்டர் தெரிவித்ததாவது.
தமிழக அரசு விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் விவசாய பெருமக்கள் உற்பத்தி அதிகரித்து அதிக லாபம் பெற வேண்டும் என்ற நோக்கில் மண் இயக்கம் என்ற திட்டம் வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பயிர் வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவைகளாக மண்வளமும், நீர்வளமும் அமைகிறது. மண்ணில் உள்ள சத்துக்களின் அளவையும், மண்ணின் இரசாயனத் தன்மைககளயும் மண் ஆய்வின் மூலமே அறிய முடியும். மண்ணில் உள்ள சத்துக்களின் அளவு வயலுக்கு வயல் மாறுபடுவதாலும், தேவைப்படும் சத்துக்களின் அளவு பயிருக்கு பயிர் மாறுபடுவதாலும் மண் ஆய்வின் மூலமே பயிருக்கு ஏற்ற மிகச் சரியான உரப்பரிந்துரை வழங்க முடியும்.
மண்ணில் உள்ள தழை, மணி, சாம்பல் போன்ற பேரூட்டச் சத்துக்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களின் அளவை அறிந்திடவும், பயிருக்கு தேவையான உர அளவை அறிந்திடவும், மண்ணில் களர், உவர், அமிலம் மற்றும் சுண்ணாம்பு தன்மையை அறிந்து நிலச் சீர்திருத்தம் செய்திடவும், அங்ககச் சத்தின் அளவினை அறிந்து நிலத்தின் நிலையான வளத்தை காத்திடவும், மண்ணின் தன்மைக்கேற்ப பயிரை தேர்ந்தெடுத்து அதிக மகசூல் பெற்றிடவும் மண் பரிசோதனை மிக மிக அவசியம் ஆகும்.
அறுவடை செய்த பின்பும், அடுத்த பயிருக்கு நிலத்தை தயார் செய்வதற்கு முன்பும் உள்ள இடைப்பட்ட காலத்தில் மண் மாதிரிகள் எடுக்க வேண்டும், மண்ணின் நிறம், சரிவு மண் வகை (மணல், களி, செம்மண்) ஆகியவற்றை பொறுத்து மண் மாதிரிகளின் எண்ணிக்கையை கணக்கில் கொள்ள வேண்டும், வரப்பு ஓரங்கள், குப்பை குழிகளுக்கு அருகாமையில் பாசன வாய்க்காலுக்கு அருகாமை, மரத்தடி, உலர்களம், சாலை மற்றும் பள்ளங்களில் மண் மாதிரிகள் எடுக்கக் கூடாது.
மண் மாதிரியானது நெல், கேழ்வரகு, நிலக்கடலை, கம்பு மற்றும் சிறுதானிய பயிர்களுக்கு 6 அங்குலம், 15 செ,மீட்டர் என்ற அளவிலும், பருத்தி, கரும்பு, வாழை, மரவள்ளி மற்றும் காய்கறிகளுக்கு 9 அங்குலம், 22.5 செ.மீட்டர் என்ற அளவிலும் மாதிரிகள் எடுக்க வேண்டும். மா, தென்னை போன்ற மிக ஆழமாக வேர்கள் செல்லும் பழவகை மற்றும் மரப்பயிர்களுக்கு 12, 24, 36 அங்குல ஆழங்களில் மூன்று மாதிரிகளும் எடுக்க வேண்டும். மூன்று அடி ஆழமுள்ள குழி தோண்டி அதில் முதல் ஒரு மண் மாதிரியும், இரண்டாவது அடியில் ஒரு மண் மாதிரியும், மூன்றாவது அடியில் ஒரு மண் மாதிரியும் தனித்தனியாக எடுக்க வேண்டும்.
நீடித்த நிலையான வேளாண்மை இயக்க திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் 633 வருவாய் கிராமங்களிலும் மண் மாதிரிகள் (கிரிட்) வலைச்சட்ட முறையில் சேகரம் செய்ய திட்டமிடப்பட்டு அதன்படி 2017-18ம் ஆண்டு 293 வருவாய் கிராமங்களில் 21,600 மண் மாதிரிகள் எடுக்கப்பட்டு, 1,23,345 மண் வள அட்டைகள் வழங்கப்படவும். 2018-19ம் ஆண்டு 340 வருவாய் கிராமங்களில் 22,831 மண் மாதிரிகள் சேகரம் செய்து 1,29,043 மண் வள அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டு மண் மாதிரிகள் சேகரிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.
நீடித்த நிலையான வேளாண்மை இயக்க திட்டத்தின் மூலம் கிராம வரைபடம் மூலம் இறவை நிலங்களில் 2.5 எக்டருக்கு ஒரு மண் மாதிரியும், மானாவாரி நிலங்களில் 10 எக்டருக்கு 1 மண் மாதிரியும் சேகரம் செய்யப்பட உள்ளது. சேகரம் செய்யப்பட்ட மண் மாதிரியின் கார, அமில நிலை, உப்பின் நிலை, சுண்ணாம்பு நிலை, மண் நயம், பேரூட்ட சத்துக்களான தழை, மணி, சாம்பல் சத்துக்கள் மற்றும் இரண்டாம் நிலை சத்துக்களான கால்சியம், மக்னிசியம், கந்தகம் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களான இரும்பு, மாங்கனிசு, துத்தநாகம், தாமிரம், போரான், அங்கக கார்பன் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு ஆய்வு முடிவுகள் மண்ணின் தன்மை மற்றும் சாகுபடி பயிருக்கு ஏற்ப உரப் பரிந்துரை வழங்கப்படுகிறது.
மண்வள பரிசோதனை செய்ய விரும்புபவர்கள் அந்தந்த வட்டத்தில் உள்ள உதவி வேளாண் அலுவலர்களை அனுகி பயன்பெறலாம். இந்த மண்வள பரிசோதனை ஆய்வு முடிவுகள் மண்வள அட்டையில் பதிவு செய்து வழங்கப்படும். மேலும் கிரிட்டில் (வலைச்சட்டம்) உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் மண்வள அட்டை வழங்கப்படும். மண்வள அட்டைக்கு எவ்வித கட்டணமும் வசூலிப்பதில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் அனைத்து விவசாயிகளுக்கும் மண்வள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதே கிரிட்டில் இரண்டு வருடங்களிலும் மண் மாதிரி சேகரம் செய்து மண் வளத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் கணக்கிடப்பட்டு, உரப்பரிந்துரை செய்து விவசாயிகளுக்கு உர செலவினை குறைத்து உற்பத்தியை பெருக்க மண்வள அட்டை விநியோகம் செய்யப்பட உள்ளது. இவ்வாறு கலெக்டர் வா.சம்பத்., தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் பயணத்தில், மேட்டூர் சார் கலெக்டர் மேகநாதரெட்டி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்கநர் கே.கவிதா, இணை இயக்குநர் (வேளாண்மை) சௌந்தரராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.சுவாமிநாதன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) செ.கு.ப.சதீஸ்குமார், பத்திரிக்கையாளர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
ஆஸி.க்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? - இன்று 3-வது டி-20 போட்டியில் மோதல்
01 Nov 2025ஹோபர்ட் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்று நடைபெறும் 3-வது டி20 போட்டியில் வெற்றிப்பெற்று இந்திய அணி பதிலடி கொடுக்குமா என்று ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-11-2025.
02 Nov 2025 -
எஸ்.ஐ.ஆர். தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது ஏன்? - முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
02 Nov 2025சென்னை : எஸ்.ஐ.ஆர். தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது ஏன்? என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
-
எஸ்.ஐ.ஆர். தொடர்பான கூட்டத்தில் பங்கேற்ற 49 கட்சிகளின் தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி
02 Nov 2025சென்னை : எஸ்.ஐ.ஆர். தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற 49 கட்சிகளின் தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
-
சிவகங்கை மாவட்ட பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து நீர் திறப்பு
02 Nov 2025ஆண்டிபட்டி : வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பூர்வீக பாசனப் பகுதிகளுக்காக 2 ஆயிரம் கன அடி வீதம் நேற்று (நவ.2) தண்ணீர் திறக்கப்பட்டது.
-
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தொடர்பான சிறப்பு திருத்த பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்
02 Nov 2025சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
சூடு பிடித்த பீகார் தேர்தல் களம்: ஒரேநாளில் பிரதமர் மோடி, ராகுல், அமித்ஷா பிரச்சாரம்
02 Nov 2025பீகார் : பீகார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு நேற்று ஒரேநாளில் பிரதமர் மோடி, ராகுல், அமித்ஷா பிரச்சாரம் செய்த நிலையில் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
-
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
02 Nov 2025சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவ. 8 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
வங்கக்கடலில் உருவானது புயல் சின்னம்
02 Nov 2025சென்னை : வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை 5.30 மணிக்கு உருவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக தமிழக அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களின் கருத்துகள்
02 Nov 2025சென்னை : தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்காவிட்டால் சுப்ரீம் கோர்ட்டில் அனைத்துக் கட்சிகள் சார்பில் வழக்கு தொடர த
-
சி.எம்.எஸ்.-03 செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த எல்.வி.எம். 3 ராக்கெட்
02 Nov 2025ஸ்ரீஹரிகோட்டா : கடலோர எல்லைகளைக் கண்காணிப்பதற்கான சி.எம்.எஸ்.-03 செயற்கைக்கோளுடன் எல்விஎம் -3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
-
இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
02 Nov 2025ராமேசுவரம் : வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 2 வாரங்களாக பரவலாக நல்ல மழை பெய்தது.
-
குப்பை கிடங்குகளில் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை விற்க மாநகராட்சி புதிய திட்டம்
02 Nov 2025சென்னை : சென்னையில் ஒவ்வொரு மண்டலங்களிலும் உள்ள குப்பை சேமிப்பு கிடங்குகளில் தேங்கி கிடக்கின்ற மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை விற்பனை செய்ய சென்னை மாநகராட்சி திட்டமி
-
உத்தரகாண்ட் சட்டசபையில் இன்று ஜனாதிபதி திரெளபதி முர்மு உரை
02 Nov 2025டெராடூன் : உத்தரகாண்ட் சட்டசபையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று சிறப்பு உரையாற்றுகிறார்.
-
கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 2 குழந்தைகளின் பெற்றோருக்கு நிதியுதவி அறிவித்தார் முதல்வர்
02 Nov 2025சென்னை : திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டம், அயனம்பாக்கம் கிராமத்தில் கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 2 குழந்தைகளின் பெற்றோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி
-
ஆபரேஷன் சிந்தூர் 2.0 நடவடிக்கை: பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ தளபதி எச்சரிக்கை
02 Nov 2025டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் 2.0 நடவடிக்கைக்கு தயார் என்று ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாகிஸ்தானை எச்சரித்துள்ளார்.
-
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக அஜித் தெரிவித்தது அவரது சொந்த கருத்து: துணை முதல்வர் உதயநிதி
02 Nov 2025சென்னை: கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக நடிகர் அஜித் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
-
சபரிமலை மண்டல பூஜை: சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்
02 Nov 2025சென்னை: சபரிமலை மண்டல பூஜையையொட்டி சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து கொல்லத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
-
பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் த.வெ.க. தொண்டரணிக்கு பயிற்சி
02 Nov 2025சென்னை: சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் தொண்டரணியினருக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.
-
லாலு ஹாலோவீன் கொண்டாட்டம்: பாரதிய ஜனதா கட்சி கடும் விமர்சனம்
02 Nov 2025புதுடெல்லி: ஆர்.ஜே.டி. நிறுவனர் லாலு பிரசாத் யாதவ் தனது பேரப்பிள்ளைகளுடன் ‘ஹாலோவீன்’ திருவிழாவைக் கொண்டாடியதை பா.ஜ.க. கடுமையாக விமர்சித்துள்ளது.
-
வாக்காளர்களை நீக்கும் நோக்கத்தோடு எஸ்.ஐ.ஆர்.: ஜோதிமணி எம்.பி. கருத்து
02 Nov 2025கரூர்: “வாக்காளர்களை நீக்கும் நோக்கத்தோடு எஸ்.ஐ.ஆர். மேற்கொள்ளப்படுகிறது.


