எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சேலம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையில் சார்பில் வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மண்வள இயக்கம் குறித்து கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், காவேரிபுரம் பகுதிகளில் செய்தியாளர் பயணம் கலெக்டர் வா.சம்பத், தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் கலெக்டர் தெரிவித்ததாவது.
தமிழக அரசு விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் விவசாய பெருமக்கள் உற்பத்தி அதிகரித்து அதிக லாபம் பெற வேண்டும் என்ற நோக்கில் மண் இயக்கம் என்ற திட்டம் வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பயிர் வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவைகளாக மண்வளமும், நீர்வளமும் அமைகிறது. மண்ணில் உள்ள சத்துக்களின் அளவையும், மண்ணின் இரசாயனத் தன்மைககளயும் மண் ஆய்வின் மூலமே அறிய முடியும். மண்ணில் உள்ள சத்துக்களின் அளவு வயலுக்கு வயல் மாறுபடுவதாலும், தேவைப்படும் சத்துக்களின் அளவு பயிருக்கு பயிர் மாறுபடுவதாலும் மண் ஆய்வின் மூலமே பயிருக்கு ஏற்ற மிகச் சரியான உரப்பரிந்துரை வழங்க முடியும்.
மண்ணில் உள்ள தழை, மணி, சாம்பல் போன்ற பேரூட்டச் சத்துக்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களின் அளவை அறிந்திடவும், பயிருக்கு தேவையான உர அளவை அறிந்திடவும், மண்ணில் களர், உவர், அமிலம் மற்றும் சுண்ணாம்பு தன்மையை அறிந்து நிலச் சீர்திருத்தம் செய்திடவும், அங்ககச் சத்தின் அளவினை அறிந்து நிலத்தின் நிலையான வளத்தை காத்திடவும், மண்ணின் தன்மைக்கேற்ப பயிரை தேர்ந்தெடுத்து அதிக மகசூல் பெற்றிடவும் மண் பரிசோதனை மிக மிக அவசியம் ஆகும்.
அறுவடை செய்த பின்பும், அடுத்த பயிருக்கு நிலத்தை தயார் செய்வதற்கு முன்பும் உள்ள இடைப்பட்ட காலத்தில் மண் மாதிரிகள் எடுக்க வேண்டும், மண்ணின் நிறம், சரிவு மண் வகை (மணல், களி, செம்மண்) ஆகியவற்றை பொறுத்து மண் மாதிரிகளின் எண்ணிக்கையை கணக்கில் கொள்ள வேண்டும், வரப்பு ஓரங்கள், குப்பை குழிகளுக்கு அருகாமையில் பாசன வாய்க்காலுக்கு அருகாமை, மரத்தடி, உலர்களம், சாலை மற்றும் பள்ளங்களில் மண் மாதிரிகள் எடுக்கக் கூடாது.
மண் மாதிரியானது நெல், கேழ்வரகு, நிலக்கடலை, கம்பு மற்றும் சிறுதானிய பயிர்களுக்கு 6 அங்குலம், 15 செ,மீட்டர் என்ற அளவிலும், பருத்தி, கரும்பு, வாழை, மரவள்ளி மற்றும் காய்கறிகளுக்கு 9 அங்குலம், 22.5 செ.மீட்டர் என்ற அளவிலும் மாதிரிகள் எடுக்க வேண்டும். மா, தென்னை போன்ற மிக ஆழமாக வேர்கள் செல்லும் பழவகை மற்றும் மரப்பயிர்களுக்கு 12, 24, 36 அங்குல ஆழங்களில் மூன்று மாதிரிகளும் எடுக்க வேண்டும். மூன்று அடி ஆழமுள்ள குழி தோண்டி அதில் முதல் ஒரு மண் மாதிரியும், இரண்டாவது அடியில் ஒரு மண் மாதிரியும், மூன்றாவது அடியில் ஒரு மண் மாதிரியும் தனித்தனியாக எடுக்க வேண்டும்.
நீடித்த நிலையான வேளாண்மை இயக்க திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் 633 வருவாய் கிராமங்களிலும் மண் மாதிரிகள் (கிரிட்) வலைச்சட்ட முறையில் சேகரம் செய்ய திட்டமிடப்பட்டு அதன்படி 2017-18ம் ஆண்டு 293 வருவாய் கிராமங்களில் 21,600 மண் மாதிரிகள் எடுக்கப்பட்டு, 1,23,345 மண் வள அட்டைகள் வழங்கப்படவும். 2018-19ம் ஆண்டு 340 வருவாய் கிராமங்களில் 22,831 மண் மாதிரிகள் சேகரம் செய்து 1,29,043 மண் வள அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டு மண் மாதிரிகள் சேகரிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.
நீடித்த நிலையான வேளாண்மை இயக்க திட்டத்தின் மூலம் கிராம வரைபடம் மூலம் இறவை நிலங்களில் 2.5 எக்டருக்கு ஒரு மண் மாதிரியும், மானாவாரி நிலங்களில் 10 எக்டருக்கு 1 மண் மாதிரியும் சேகரம் செய்யப்பட உள்ளது. சேகரம் செய்யப்பட்ட மண் மாதிரியின் கார, அமில நிலை, உப்பின் நிலை, சுண்ணாம்பு நிலை, மண் நயம், பேரூட்ட சத்துக்களான தழை, மணி, சாம்பல் சத்துக்கள் மற்றும் இரண்டாம் நிலை சத்துக்களான கால்சியம், மக்னிசியம், கந்தகம் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களான இரும்பு, மாங்கனிசு, துத்தநாகம், தாமிரம், போரான், அங்கக கார்பன் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு ஆய்வு முடிவுகள் மண்ணின் தன்மை மற்றும் சாகுபடி பயிருக்கு ஏற்ப உரப் பரிந்துரை வழங்கப்படுகிறது.
மண்வள பரிசோதனை செய்ய விரும்புபவர்கள் அந்தந்த வட்டத்தில் உள்ள உதவி வேளாண் அலுவலர்களை அனுகி பயன்பெறலாம். இந்த மண்வள பரிசோதனை ஆய்வு முடிவுகள் மண்வள அட்டையில் பதிவு செய்து வழங்கப்படும். மேலும் கிரிட்டில் (வலைச்சட்டம்) உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் மண்வள அட்டை வழங்கப்படும். மண்வள அட்டைக்கு எவ்வித கட்டணமும் வசூலிப்பதில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் அனைத்து விவசாயிகளுக்கும் மண்வள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதே கிரிட்டில் இரண்டு வருடங்களிலும் மண் மாதிரி சேகரம் செய்து மண் வளத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் கணக்கிடப்பட்டு, உரப்பரிந்துரை செய்து விவசாயிகளுக்கு உர செலவினை குறைத்து உற்பத்தியை பெருக்க மண்வள அட்டை விநியோகம் செய்யப்பட உள்ளது. இவ்வாறு கலெக்டர் வா.சம்பத்., தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் பயணத்தில், மேட்டூர் சார் கலெக்டர் மேகநாதரெட்டி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்கநர் கே.கவிதா, இணை இயக்குநர் (வேளாண்மை) சௌந்தரராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.சுவாமிநாதன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) செ.கு.ப.சதீஸ்குமார், பத்திரிக்கையாளர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு நாளை ஆலோசனைக் கூட்டம்
18 Jan 2026சென்னை, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கைக் குழு நாளை (20.01.2026) செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு, சென்னையில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில்
-
டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகிறார் விஜய்
18 Jan 2026சென்னை, கரூர் கூட்ட நெரிசல் விசாரணை தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் இன்று மீண்டும் நேரில் ஆஜராகிறார்.
-
ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் காலிங்கராயரின் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
18 Jan 2026ஈரோடு, ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் நதிநீர் இணைப்பின் முன்னோடி என போற்றப்படும் காலிங்கராயர் சிலையை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
ஓசூர் விமான நிலைய திட்டம்: ஒப்புதல் அளிக்க மத்திய அரசு மறுப்பு
18 Jan 2026டெல்லி, ஓசூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளது, இது, தமிழக அரசியல் மற்றும் தொழில் வட்டாரத்தில் பெரு
-
அசாமில் ரூ.6,957 கோடி மதிப்பிலான மேம்பாலப்பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல்
18 Jan 2026அசாம் மாநிலத்தின் நாகோன் மாவட்டத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, 6 ஆயிரத்து 957 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள சாலை மேம்பாலப்பணிகளுக்கு பிரதமர
-
அமெரிக்க படைகள் தாக்குதல்: சிரியாவில் அல் கொய்தா முக்கிய தலைவர் கொலை
18 Jan 2026டமாஸ்கஸ், சிரியாவின் வடமேற்குப் பகுதியில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில், டிசம்பர் மாதம் அமெரிக்க வீரர்களை கொன்ற ஐ.எஸ் பயங்கரவாதியுடன் தொடர்புடைய அல்-கொய்தாவின் ம
-
தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வரும் 24-ம் தேதி மழைக்கு வாய்ப்பு
18 Jan 2026தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வரும் 24-ம் தேதி மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
நீலகிரியில் சோக சம்பவம்: மண் சரிவில் சிக்கிய 3 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக பலி
18 Jan 2026நீலகிரி, நீலகிரியில் மண் சரிவில் சிக்கிய 3 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக பலியானதை அடுத்து 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி: அமைச்சர் துரைமுருகனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர்
18 Jan 2026சென்னை, உடல்நல குறைவு ஏற்பட்டதால் அமைச்சர் துரைமுருகன், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –18-01-2026
18 Jan 2026 -
யாரையும் கஷ்டப்படுத்த சொல்லவில்லை: தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்த ஏ.ஆர்.ரஹ்மான்
18 Jan 2026சென்னை, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தன் மீதான சமீபத்திய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
-
மக்கள் நலத்திட்டங்களுக்கு எப்பவுமே ஒரிஜினல் சொந்தக்காரங்க நாங்கதான்: அ.இ.அ.தி.மு.க. அறிக்கை
18 Jan 2026சென்னை, மக்கள் நலத்திட்டங்களுக்கு எப்பவுமே ஒரிஜினல் சொந்தக்காரங்க நாங்கதான் என்று தி.மு.க. அமைச்சர்களின் விமர்சனங்களுக்கு பதிலளக்கும் விதமாக அ.இ.அ.தி.மு.க.
-
எஸ்.ஐ.ஆர். பணிகளுக்குப்பின் கேரளாவில் தலைமை தேர்தல் அதிகாரி கேல்கர் பெயர் நீக்கப்பட்டதால் அதிர்ச்சி!
18 Jan 2026திருவனந்தபுரம், கேரளாவில் எஸ்.ஐ.ஆர்.
-
தமிழகத்திற்கான உரிய நிதியை வழங்குவதில்லை: மத்திய அரசு மீது நிதியமைச்சர் : தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு
18 Jan 2026மத்திய அரசு தமிழகத்துக்கு உரிய நிதி பகிர்வு வழங்காத நிலையிலும், உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு முதல்வர் மு.க.
-
கிரீன்லாந்து விவகாரத்தில் ட்ரம்ப் முடிவு வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்: ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை
18 Jan 2026பிரஸ்ஸல்ஸ், கிரீன்லாந்து விவகாரத்தில் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக நடந்து கொள்வது ஆபத்தான வீழ்ச்சிப் பாதைக்கு வழி வகுக்கும் என்று ஐரோப்ப்பிய ஒன்றியம் அவரை எச்சரித்துள்ளது.
-
பிற இந்திய மொழிகளின் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு விருது முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
18 Jan 2026சென்னை, "தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம் மற்றும் மராட்டிய மொழிகளில் வெளியாகின்ற தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும்
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: லக்னோவில் இண்டிகோ விமானம் தரையிறக்கம்
18 Jan 2026லக்னோ, வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து இண்டிகோ விமானம் லக்னோவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்ப தமிழ்நாடு முழுவதும் 5,192 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
18 Jan 2026சென்னை, பொங்கல் விடுமுறையில் வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக நேற்று 5,192 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
-
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ஏகே-47 துப்பாக்கிகள் கண்டெடுப்பு
18 Jan 2026சண்டிகர், இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளது.
-
காற்றின் தரத்தை அறிய மாநகராட்சி நடவடிக்கை: சென்னையில் 100 இடங்களில் டிஜிட்டல் பலகைகள் அமைப்பு
18 Jan 2026சென்னை, சென்னையில் காற்றின் தரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்காக 100 முக்கிய இடங்களில் டிஜிட்டல் பலகைகளை அமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
-
தி.மு.க. கூட்டணியை யாராலும், ஒருபோதும் உடைக்க முடியாது: அமைச்சர் ரகுபதி மீண்டும் திட்டவட்டம்
18 Jan 2026புதுக்கோட்டை, தி.மு.க.
-
போட்டியின்றி தேர்வாகிறார்: பா.ஜ.க. தேசிய தலைவராக நிதின் நபினுக்கு வாய்ப்பு
18 Jan 2026டெல்லி, பா.ஜ.க. தேசிய தலைவராக போட்டியின்றி தேர்வாக நிதின் நபினுக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
11-வது நாளாக தொடர்ந்த போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை
18 Jan 2026சென்னை, “தி.மு.க.
-
1,500 குழந்தைகளை காப்பாற்றிய பெண் ரயில்வே காவல் அதிகாரிக்கு மிக உயரிய சேவை விருது அறிவிப்பு
18 Jan 2026லக்னோ, உத்தரப் பிரதேசத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் சந்தனா சின்ஹாவுக்கு இந்திய ரயில்வேயின் உயரிய சேவை விருதான 'அதி விசிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்' வழங்கி கவுரவ
-
குடியரசு தினம் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அமல்
18 Jan 2026சென்னை, இந்தியாவின் 77-வது குடியரசு தின விழாவை (ஜனவரி 26, 2026) முன்னிட்டு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.


