எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, "தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம் மற்றும் மராட்டிய மொழிகளில் வெளியாகின்ற தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் "செம்மொழி இலக்கிய விருது" என்ற தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்படும். விருதுடன், தலா ரூ.5 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படும்" என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவின் நிறைவு விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மனித இனம் தன்னுடைய சிந்தனைகளை, தான் சேர்த்த அறிவுச் செல்வத்தை, பிறருக்கும், அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு சேர்க்கும் கருவிதான், புத்தகங்கள்.
வாசிப்பு மூலமாக, தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும் என்று, ஏராளமான முன்னெடுப்புகளை நம்முடைய திராவிட மாடல் அரசு சார்பில் எடுத்து செய்து கொண்டிருக்கிறோம். அதில் முக்கியமானது தான், புத்தகத் திருவிழாக்கள். எழுத்தாளர்கள் - பதிப்பாளர்கள் - விற்பனையாளர்கள் – வாசகர்கள் என்று எல்லோருக்குமான உறவுப் பாலமாக, இந்த புத்தகத் திருவிழாக்களை சிறப்பாக நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.
தலைநகரான சென்னையில் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழாக்களை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம். இதன் தொடர்ச்சியாகதான், இந்த நான்காவது சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 102 நாடுகளின் பங்கேற்போடு சிந்தனையின் ஊற்றாக, பண்பாட்டின் கருவூலமாக, அறிவுப் பரிமாற்றத்தின் அடித்தளமாக, இந்த பன்னாட்டு புத்தகத் திருவிழா நிறைவடைந்ததில் தமிழ்நாடு முதல்வராக மட்டுமல்லாமல், புத்தக ஆர்வலனாகவும் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அதுவும் சர்வதேச புக்கர் பரிசை வென்ற கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக், இந்த மேடையில் இருப்பது என்னுடைய மகிழ்ச்சியை மேலும் கூட்டுகிறது.
“ஏற்கனவே, ஒய்.எம்.சி.ஏ. திடலில், ஒரு புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறதே, அப்படியானால், இந்த பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவின் மைய நோக்கம் என்ன?” என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கலாம். அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது, இந்தப் புத்தகத் திருவிழாவில் - மொழிபெயர்ப்புகள், பதிப்புரிமை பரிமாற்றம் ஆகியவற்றில்தான் மிகுந்த முக்கியத்துவம் செலுத்தியிருக்கிறோம். அது எவ்வளவு அவசியம் என்பதற்கு இங்கே வந்திருக்கக்கூடிய பானு முஷ்டாக் அவர்களின் வெற்றியே ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டதால்தான் அவருடைய “ஹார்ட் லேம்ப்” நூலும், தென்னிந்தியப் பெண்களின் வாழ்வுரிமை வாழ்க்கையும், உலக அளவில் கவனம் பெற்றிருக்கிறது.
நம்முடைய திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த, பிற்போக்குத்தனங்களை எதிர்க்கின்ற, சமூகநீதிப் பார்வை கொண்ட, ஒரு பெண் எழுத்தாளரின் வருகையால் நம்முடைய புத்தகத் திருவிழா இன்றைக்கு மிகுந்த சிறப்படைந்திருக்கிறது. எதையும் கேள்விகேட்டு, விமர்சனப் பார்வையுடன் அணுகி, பழமைகளை பொசுக்கிய திராவிட இயக்கம் தமிழ்நாட்டை பண்படுத்தியது. அதேபோல, கர்நாடகத்தில், கன்னட புரட்சி இலக்கிய மரபில் இயங்கி வருகின்ற பானு முஷ்டாக், நம்முடைய அழைப்பை ஏற்று வருகை தந்தமைக்காக என்னுடைய நன்றியை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி, அமீரகம் - இப்படி, உலகத்தின் பல பகுதிகளில், இது போன்ற பன்னாட்டு புத்தகத் திருவிழாக்கள் நடைபெறுகின்ற செய்திகளை நான் பார்ப்பதுண்டு. அப்போதெல்லாம் இப்படிப்பட்ட முன்னெடுப்புகள், தமிழ்நாட்டிலும் நடைபெற வேண்டும் என்று நான் நினைப்பேன். அந்த எண்ணத்தை இப்போது நம்முடைய திராவிட மாடல் அரசில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.
நம்முடைய மண்ணின் சிந்தனைகளும், எழுத்துகளும் உலகம் முழுக்கப் பரவவேண்டும்; உலகின் உயரிய சிந்தனைகள் நம்முடைய மக்களிடம் வந்தடைய வேண்டும் என்ற கனவு இந்த நிகழ்ச்சியால் நனவாகியிருக்கிறது. மொத்தத்தில் இப்படியொரு அறிவுச் சங்கமத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்கின்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
இலக்கியத்திற்கு எல்லைகள் கிடையாது. திருவள்ளுவரின் அறமும், இளங்கோ அடிகளின் காப்பியமும், பாரதியின் கவிதைகளும், பாரதிதாசனின் கருத்துக்களும் உலகமெல்லாம் ஒலிக்கவேண்டும். அதே வேளையில், உலகத்தரம் வாய்ந்த அறிவியல் மற்றும் இலக்கியப் படைப்புகள், எளிய தமிழில், நம்முடைய கிராமத்து மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும். இதற்காகவே நம்முடைய அரசு, 'தமிழ்நாடு மொழிபெயர்ப்பு முகமை' மூலம் பல கோடி ரூபாய் நிதியை ஒதுக்கித் தந்து, கடந்த 3 ஆண்டுகளில், நூற்றுக்கணக்கான நூல்கள் இதன் மூலமாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
இந்தப் புத்தகத் திருவிழாவில் நடைபெறும் 'பதிப்புரிமைப் பரிமாற்றம்' வெறும் வணிகம் கிடையாது; இரு மொழிகளுக்கு இடையே நடைபெறுகின்ற பண்பாட்டுக் கைக்குலுக்கல். செம்மொழியான தமிழின் சங்க இலக்கியங்கள் முதல் நவீன இலக்கியங்கள் வரை உலக மக்களுக்கு சென்று சேரவேண்டும். இந்த நிலப்பரப்பிலிருந்து எவ்வளவு ஆழமான, பரந்த சிந்தனை கொண்ட கருத்துக்கள், இலக்கிய, இலக்கண மரபுகள் உருவாகியிருக்கிறது என்று நாம் உணர்த்த வேண்டும்.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மூலமாக, சிறந்த தமிழ்ப் படைப்புகளை ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன் மற்றும் ஸ்பானிஷ் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மொழிகளில், மொழிபெயர்க்க நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறோம். ஏ.ஐ. கோலோச்சும் இந்த காலத்தில், புத்தகங்களையும், நவீனத் தொழில்நுட்பத்தையும் இணைக்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துகாட்டுவதாக இந்த அரங்கம் சிறப்பாக அமைந்திருக்கிறது.
இங்கே வந்திருக்கின்ற உலகப் பிரதிநிதிகளுக்கு நான் ஒரு செய்தியை அழுத்தமாக சொல்ல விரும்புகிறேன். தமிழ்நாடு என்பது நீங்கள் தொழில் முதலீடு செய்ய மட்டும் உகந்த மாநிலம் இல்லை; அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கும் மிகச் சிறந்த மாநிலம். கீழடி முதல் பொருநை வரை கண்டெடுத்த தொல்லியல் சான்றுகளை பாருங்கள்; தமிழ்ச் சமூகத்தின் அறிவு மரபு எப்படிப்பட்டது என்பது அப்போது புரியும்.
உலக நாடுகளின் சிறந்த படைப்புகளைத் தமிழில் கொண்டு வாருங்கள்; அதேபோல, மனிதநேயத்தையும், சமூகநீதியையும் பேசுகின்ற எங்கள் திராவிடக் கருத்தியல் இலக்கியங்களையும் உங்கள் நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்; எழுத்தாளர்கள் உலகை வெல்வதை பெருமிதத்தோடு எதிர்நோக்கி அனைவரும் காத்திருப்போம். மொழி என்பது பிரிக்கக்கூடிய சுவர் இல்லை, அது உலக மக்களை இணைக்கும் பாலம். புத்தகங்கள் வெறும் பேப்பர் கிடையாது. அவை ஒரு தலைமுறை, மற்றொரு தலைமுறைக்கு விட்டுச் செல்லும் அறிவுச் சொத்து.
மனதுக்கு நெருடலாக ஒரு செய்தி தலைநகர் டெல்லியில் இருந்து சில நாட்களுக்கு முன்பு வந்தது. உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். 2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதுகள் இறுதி செய்யப்பட்டு, அறிவிக்கப்பட இருந்த நிலையில், மத்திய அரசின் கலாச்சாரத் துறை தலையீட்டால், விருது அறிவிக்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இனி, அது நடக்குமா? என்றும் தெரியவில்லை. கலை இலக்கிய விருதுகளில் கூட அரசியல் குறுக்கீடுகள் செய்வது ஆபத்தானது. இப்படி ஒரு சூழலில், தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமான, உரிய எதிர்வினையை ஆற்றவேண்டும் என்று, பல்வேறு எழுத்தாளர்களும், கலை இலக்கிய அமைப்புகளைச் சார்ந்தோரும் என்னிடம் கோரிக்கை விடுத்திருந்தார்கள். இது, காலத்தின் தேவை என்று நாங்களும் உணர்ந்தே இருக்கிறோம்.
அதன்படி, உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கின்ற ஒரு அறிவிப்பை இந்த மேடையில் வெளியிட விரும்புகிறேன். குறிப்பிட்ட இந்திய மொழிகளில் வெளியாகின்ற, தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், ஆண்டுதோறும் தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்படும். இதனை அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். முதல்கட்டமாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம் மற்றும் மராட்டிய மொழிகளில் வெளியாகின்ற தலைசிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் "செம்மொழி இலக்கிய விருது" என்ற பெயரில் அந்த விருது வழங்கப்படும். விருதுடன், தலா 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.
படைப்புகளின் இலக்கிய தரத்தையும், வெளிப்படையான தேர்வு முறையையும் உறுதி செய்யும் விதமாக புகழ்பெற்ற எழுத்தாளர்கள், விருதாளர்கள் அடங்கிய குழு ஒவ்வொரு மொழிக்கும் தனியே அமைக்கப்படும். புரவலர் பணியை தமிழ்நாடு அரசு மனநிறைவோடு மேற்கொள்ளும் என தெரிவித்தார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், பானு முஸ்தாக், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லியோனி, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வரும் மார்ச் 9-ம் தேதி விவாதம்
12 Feb 2026புதுடெல்லி, மக்களவை சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மார்ச் 9-ம் தேதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மக்களவை வட்டாரங்கள் தெரிவித்தன.
-
தங்கம் விலை குறைவு
12 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 1,520 குறைந்து ரூ. 1,16,800-க்கு விற்பனையானது.
-
டெல்லியில் புதிய பிரதமர் அலுவலம்: பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
12 Feb 2026டெல்லி, தலைநகர் புது தில்லியில் பிரதமர் அலுவலகத்தின் புதிய கட்டிடமான சேவா தீர்த் மற்றும் கர்த்தவ்ய பவன் 1 மற்றும் 2ஐ பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 13-ம் தேதி (இன்று) த
-
இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் உற்பத்தி வளர்ச்சி மூன்று மடங்கு அதிகம்: முதல்வர்
12 Feb 2026சென்னை, இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியை விட தமிழ்நாட்டின உற்பத்தி வளர்ச்சி 3 மடங்கு அதிகம் என்றும், . 5 ஆண்டுகளில் 12.37 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
-
வங்கக்கடல் பகுதியில் பிப்.15-ல் உருவாகிறது புதிய புயல் சின்னம்
12 Feb 2026சென்னை, வங்கக்கடல் பகுதியில் வருகிற 15-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்: தமிழ்நாட்டில் பெரியளவில் பாதிப்பில்லை
12 Feb 2026சென்னை, மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நேற்று காலை முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றன.
-
ரூ. 31,934 கோடி முதலீட்டில் முடிவுற்ற 52 திட்டப்பணிகள்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
12 Feb 2026சென்னை, தமிழகத்தில் புதிதாக 82,664 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் ரூ.31,934 கோடி முதலீட்டில்
-
கீழடியில் ரூ.22 கோடி செலவில் திறந்தவெளி அருங்காட்சியகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
12 Feb 2026மானாமதுரை,இந்தியாவிலேயே முதன் முறையாக கீழடியில் ரூ.22 கோடி செலவில் திறந்தவெளி அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
-
2 நாட்கள் பயணமாக அமித்ஷா இன்று திருச்சி வருகை
12 Feb 2026சென்னை, தமிழகம் மற்றும் காரைக்காலில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா இன்று (பிப்.13) திருச்சிக்கு வருகிறாா்.
-
ஐ.பி.எஸ். அதிகாரிக்கு எதிரான வழக்கு: ரூ. 10 லட்சம் செலுத்த தோனிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
12 Feb 2026சென்னை, ஐ.பி.எஸ். அதிகாரிக்கு எதிராக தொடர்ந்த மானநஷ்ட ஈடு வழக்கில், ரூ.
-
சென்னையில் ரூ.96.04 கோடியில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
12 Feb 2026சென்னை, சென்னையில் ரூ.96.04 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
அகமதாபாத் விமான விபத்து: இத்தாலி நாளிதழ் வெளியிட்ட செய்தி அறிக்கையால் பரபரப்பு
12 Feb 2026ரோம், அகமதாபாத் விமான விபத்து ஒரு தொழில்நுட்பக் கோளாறு அல்ல, மாறாக விமானியின் திட்டமிட்டச் செயல் என்று இத்தாலிய நாளிதழான 'கொரியர் டெல்லா செரா' வெளியிட்டுள்ள செய்தி அறிக
-
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான் மீது தாக்குதல்: அதிபர் ட்ரம்ப்
12 Feb 2026நியூயார்க், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் பிரதமரை சந்தித்த பின் அதிபர் ட்ரம்ப் எச்சரி
-
கராச்சி: துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி
12 Feb 2026கராச்சி, கராச்சியின் வெவ்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு நடந்த நான்கு தனித்தனி துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் நான்கு பேர் பலியாகினர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்
-
அமெரிக்காவில் விபத்தில் பலியான ஆந்திரா பெண் குடும்பத்துக்கு 265 கோடி ரூபாய் இழப்பீடு
12 Feb 2026நியூயார்க், அமெரிக்காவில் விபத்தில் பலியான ஆந்திராவை சேர்ந்த பெண் குடும்பத்துக்கு 265 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க சியாட்டில் நகர நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
-
மகாசிவராத்திரி, வார இறுதி நாட்கள்: தமிழ்நாடு முழுவதும் 1,360 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
12 Feb 2026சென்னை, மகாசிவராத்திரி (பிப்.15) மற்றும் வார இறுதி தினங்களை முன்னிட்டு 1,360 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ள
-
ராகுலுடன் பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு
12 Feb 2026டெல்லி, டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன், காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி நேற்று சந்தித்துப் பேசினார்.
-
ரஷ்யாவில் வாட்ஸ்-ஆப், டெலிகிராம் திடீர் நீக்கம் 10 கோடி மக்கள் அவதி
12 Feb 2026மாஸ்கோ, ரஷ்யாவில் வாட்ஸ்-ஆப் நீக்கக்கப்பட்டதால் 10 கோடி பேர் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.
-
தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்: ராகுலை பதவி நீக்கக்கோரி தனிநபர் தீர்மானம் தாக்கல்
12 Feb 2026டெல்லி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி தனிநபர் தீர்மான நோட்டீஸை பா.ஜ.க. எம்.பி.
-
இந்தியா, ஜப்பான், கொரியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் சிறப்புமிக்கது: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கருத்து
12 Feb 2026நியூயார்க், இந்தியா, ஜப்பான், கொரியா மற்றும் பிற நாடுகளுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்துள்ளோம் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
பிரான்சிடம் ரூ.3.25 லட்சம் கோடியில் 114 ரஃபேல் விமானங்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
12 Feb 2026புதுடெல்லி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 114 ரஃபேல் விமானங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்
-
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு ரூ.462.58 கோடி..! பார்லி.யில் மத்திய அரசு தகவல்
12 Feb 2026புதுடெல்லி, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, கடந்த 5 ஆண்டுகளில் (2021-2025) பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக மத்திய அரசு ர


