எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, 132 ஆண்டு பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி அடுத்த மாதம் பொறுப்பேற்க உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொள்வதற்கான அனைத்து கதவுகளும் திறக்கப்பட்டு விட்டன. கட்சித் தலைவர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது, இதில் போட்டியின்றி ஒரு மனதாக ராகுல் தேர்ந்தெடுக்கப்படவே வாய்ப்புகள் உள்ளன. 1885ல் தொடங்கப்பட்ட காங்கிரஸ் கட்சி இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சி. காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் சுதந்திரத்துக்கு முந்தைய காங்கிரஸில் திரும்பிய திசையெங்கும் பெருந்தலைவர்களாக வலம் வந்தனர். நாடு விடுதலை அடைந்த பின்னர் நேரு மறைவைத் தொடர்ந்து காமராஜர் காங்கிரஸ் தலைவராக இருந்தார். காமராஜர் தாம் பிரதமர் நாற்காலியில் அமராமல் லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமராக்கினார். தமிழகத்தில் காமராஜர் தோல்வியை சந்திக்க தொடங்கிய காலத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை இந்திராவின் பிடிக்குள் போனது. காங்கிரஸ் பிளவுகளை சந்தித்த போதும் இந்திராவின் காங்கிரஸாகவே அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இருந்தது.
இந்திரா படுகொலைக்குப் பின்னர் பிரணாப் முகர்ஜி போன்றவர்கள் தலைதூக்க பார்த்தனர். ஆனால் இந்திராவின் மகன் ராஜீவ் காந்தி வசமே காங்கிரஸ் போனது. ராஜீவ் படுகொலைக்குப் பின்னர் சோனியா காந்தி உடனே தலைமை ஏற்கவில்லை. ஆனாலும் மெல்ல மெல்ல மீண்டும் இந்திரா குடும்பத்தின் கைகளுக்கே காங்கிரஸ் சென்றது. கடந்த 19 ஆண்டுகாலமாக சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராக இருந்து வருகிறார். தலைவராகிறார் ராகுல்காந்தி
இந்நிலையில் தான் நேரு குடும்பத்து மற்றொரு வாரிசான ராகுல்காந்தி மிகப்பெரும் தலைவர்கள் வகித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை அடுத்த மாதத்தில் ஏற்க உள்ளார். அண்மையில் ராகுல்காந்தி அமெரிக்காவிற்கு மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து 2019 நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கத் தயாராக உள்ளதாக கூறினார்.
ஆனால் நிஜத்தில் ராகுல் காந்திக்கு அது ஒரு சவாலான விஷயமே ஏனெனில் 18 மாதங்களுக்குள்ளாக நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஏற்ப கட்சியின் கட்டமைப்பை அவர் மாற்றியமைக்க வேண்டும். 2014ம் ஆண்டு முதலே காங்கிரஸ் கட்சி சரிவான பாதையில் தான் இருக்கிறது. எனினும் காங்கிரஸ் கட்சி மீதான நம்பகத்தன்மையை கொண்டு வர ராகுலுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி வாய்ப்பு அளித்திருக்கிறது. ஏனெனில் வளர்ச்சி மந்தநிலை, பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை மற்றும் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு விவகாரம் உள்ளிட்டவற்றால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டால் கட்சி வாக்கு விகிதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
மற்றொரு புறம் சோனியாகாந்தி 19 ஆண்டுகள் கட்சியை வழிநடத்திய போது சுமார் 10 ஆண்டுகள் அந்தக் கட்சி ஆட்சியில் இருந்துள்ளது. எனவே தலைவராக பொறுப்பேற்கும் ராகுல்காந்திக்கு அந்த நெருக்கடியும் உள்ளது. கடந்த 2004ம் ஆண்டு முதல் ராகுல்காந்தி அரசியலில் இருக்கிறார். 2013 முதல் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி தன்னை எப்படி பிரதமர் நரேந்திர மோடிக்கான மாற்று சக்தி என்பதை மக்களுக்கு நிரூபிப்பார் என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. தலைவராகும் ராகுலுக்கு உடனடியாக இருக்கும் அடுத்தடுத்த 2 தேர்தல்கள் என்றால் அது இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் மற்றும் குஜராத் சட்டசபை தேர்தல். இது மட்டுமின்றி அடுத்த ஆண்டில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், கர்நாடகா உள்ளிட்ட 8 மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த மாநிலங்களில் எல்லாம் பல ஆண்டுகளாகவே காங்கிரஸ், பாஜகவிற்கு நேரடி போட்டி உள்ளது. இதைத் தொடர்ந்து தான் 2019ல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
இதே போன்று ராகுல்காந்தி ஏற்கனவே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுடன் எந்த மாதிரியான அணுகுமுறையை கையாளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. ஏனெனில் ராகுலின் நடவடிக்கையால் ஏற்கனவே சில மாநிலத்தில் கூட்டணி கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர். குறிப்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சரத்பவார், திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த மம்தா பானர்ஜி, லல்லு பிரசாத் யாதவ் உள்ளிட்டோரெல்லாம் ராகுலைவிட வயதிலும் அரசியல் அனுபவத்திலும் மூத்தவர்கள். சோனியா தலைமையின் கீழ் செயல்பட இவர்கள் தயங்கியதில்லை ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை இவர்கள் ஏற்பார்களா என்ற கேள்வியும் உள்ளது. இதற்கான பதில்கள் எல்லாமே ராகுல் தலைமையில் சந்திக்கப் போகும் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளே இறுதி செய்யும் என்று தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக தமிழக அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களின் கருத்துகள்
02 Nov 2025சென்னை : தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்காவிட்டால் சுப்ரீம் கோர்ட்டில் அனைத்துக் கட்சிகள் சார்பில் வழக்கு தொடர த
-
வங்கக்கடலில் உருவானது புயல் சின்னம்
02 Nov 2025சென்னை : வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை 5.30 மணிக்கு உருவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
02 Nov 2025ராமேசுவரம் : வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 2 வாரங்களாக பரவலாக நல்ல மழை பெய்தது.
-
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
02 Nov 2025சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவ. 8 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
எஸ்.ஐ.ஆர். தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது ஏன்? - முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
02 Nov 2025சென்னை : எஸ்.ஐ.ஆர். தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது ஏன்? என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
-
எஸ்.ஐ.ஆர். தொடர்பான கூட்டத்தில் பங்கேற்ற 49 கட்சிகளின் தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி
02 Nov 2025சென்னை : எஸ்.ஐ.ஆர். தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற 49 கட்சிகளின் தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-11-2025.
02 Nov 2025 -
சூடு பிடித்த பீகார் தேர்தல் களம்: ஒரேநாளில் பிரதமர் மோடி, ராகுல், அமித்ஷா பிரச்சாரம்
02 Nov 2025பீகார் : பீகார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு நேற்று ஒரேநாளில் பிரதமர் மோடி, ராகுல், அமித்ஷா பிரச்சாரம் செய்த நிலையில் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
-
சி.எம்.எஸ்.-03 செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த எல்.வி.எம். 3 ராக்கெட்
02 Nov 2025ஸ்ரீஹரிகோட்டா : கடலோர எல்லைகளைக் கண்காணிப்பதற்கான சி.எம்.எஸ்.-03 செயற்கைக்கோளுடன் எல்விஎம் -3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
-
மெக்சிகோவில் சூப்பர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து: 23 பேர் உயிரிழப்பு
02 Nov 2025மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் சூப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 23 பேர் பலியாகினர்.
-
கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 2 குழந்தைகளின் பெற்றோருக்கு நிதியுதவி அறிவித்தார் முதல்வர்
02 Nov 2025சென்னை : திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டம், அயனம்பாக்கம் கிராமத்தில் கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 2 குழந்தைகளின் பெற்றோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி
-
சிவகங்கை மாவட்ட பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து நீர் திறப்பு
02 Nov 2025ஆண்டிபட்டி : வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பூர்வீக பாசனப் பகுதிகளுக்காக 2 ஆயிரம் கன அடி வீதம் நேற்று (நவ.2) தண்ணீர் திறக்கப்பட்டது.
-
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக அஜித் தெரிவித்தது அவரது சொந்த கருத்து: துணை முதல்வர் உதயநிதி
02 Nov 2025சென்னை: கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக நடிகர் அஜித் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
-
குப்பை கிடங்குகளில் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை விற்க மாநகராட்சி புதிய திட்டம்
02 Nov 2025சென்னை : சென்னையில் ஒவ்வொரு மண்டலங்களிலும் உள்ள குப்பை சேமிப்பு கிடங்குகளில் தேங்கி கிடக்கின்ற மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை விற்பனை செய்ய சென்னை மாநகராட்சி திட்டமி
-
எஸ்.ஐ.ஆர். குடியுரிமை மீதான தாக்குதல்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் திருமாவளவன் பேச்சு
02 Nov 2025சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், குடியுரிமை மீது நடத்தப்படும் தாக்குதல் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தொடர்பான சிறப்பு திருத்த பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்
02 Nov 2025சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
லாலு ஹாலோவீன் கொண்டாட்டம்: பாரதிய ஜனதா கட்சி கடும் விமர்சனம்
02 Nov 2025புதுடெல்லி: ஆர்.ஜே.டி. நிறுவனர் லாலு பிரசாத் யாதவ் தனது பேரப்பிள்ளைகளுடன் ‘ஹாலோவீன்’ திருவிழாவைக் கொண்டாடியதை பா.ஜ.க. கடுமையாக விமர்சித்துள்ளது.
-
லண்டனில் ஓடும் ரயிலில் கத்திக்குத்து: இருவர் கைது
02 Nov 2025புதுடெல்லி: லண்டன் செல்லும் ரயிலில் (சனிக்கிழமை) நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் பத்து பேர் காயமடைந்தனர்.
-
எஸ்.ஐ.ஆர்.குறித்து மக்களுக்கு விளக்கமளிக்க தமிழ்நாடு முழுவதும் த.வெ.க. சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம், முகாம்கள் விஜய் பரபரப்பு அறிக்கை
02 Nov 2025சென்னை: சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்து மக்களுக்குத் தெளிவாக விளக்குவதற்காக, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விழிப்புணர்வுக் கருத்தரங்கம் மற்றும் தமிழகம் முழுவதும
-
வாக்காளர்களை நீக்கும் நோக்கத்தோடு எஸ்.ஐ.ஆர்.: ஜோதிமணி எம்.பி. கருத்து
02 Nov 2025கரூர்: “வாக்காளர்களை நீக்கும் நோக்கத்தோடு எஸ்.ஐ.ஆர். மேற்கொள்ளப்படுகிறது.
-
எஸ்.ஐ.ஆர். குடியுரிமை மீதான தாக்குதல்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் திருமாவளவன் பேச்சு
02 Nov 2025சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், குடியுரிமை மீது நடத்தப்படும் தாக்குதல் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் த.வெ.க. தொண்டரணிக்கு பயிற்சி
02 Nov 2025சென்னை: சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் தொண்டரணியினருக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.
-
சபரிமலை மண்டல பூஜை: சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்
02 Nov 2025சென்னை: சபரிமலை மண்டல பூஜையையொட்டி சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து கொல்லத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
-
உத்தரகாண்ட் சட்டசபையில் இன்று ஜனாதிபதி திரெளபதி முர்மு உரை
02 Nov 2025டெராடூன் : உத்தரகாண்ட் சட்டசபையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று சிறப்பு உரையாற்றுகிறார்.
-
ஆபரேஷன் சிந்தூர் 2.0 நடவடிக்கை: பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ தளபதி எச்சரிக்கை
02 Nov 2025டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் 2.0 நடவடிக்கைக்கு தயார் என்று ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாகிஸ்தானை எச்சரித்துள்ளார்.


