எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஓழுங்கு சிறப்பாக இருக்கிறது என்றும், தமிழகம் தீவிரவாதிகளின் பயிற்சிகளமாக இருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா பேரவையின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் அ.தி.மு.க. தலைமைக்கழக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், அமைச்சர் உதயகுமார், கடம்பூர் ராஜூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு பின்னர் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
கே: தமிழகம் தீவிரவாதிகளின் பயிற்சி மையமாகதிகழ்ந்து வருவதாக பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
ப: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. இந்தியாவில் உள்ள மற்றமாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது இதை நாம் அறிந்து கொள்ள முடியும். பொன்.ராதா கிருஷ்ணன் கூறியுள்ள கருத்து ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்.
கே: அ.தி.மு.க.வில் நீக்கப்பட்டு வருபவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகிகள் எப்போது நியமிக்கப்படுவார்கள்.
ப: ஜெயலலிதா பிறந்தநாளுக்கு முன்பாகவே புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவார்கள்.
கே: சரியான வருவாய் இல்லாத காரணத்தால் அம்மா உணவகங்கள் சரியாக செயல்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளதே.
ப: வருவாய் நோக்கத்திற்காக அம்மா உணவகம் தொடங்கப்படவில்லை. ஏழை எளிய நலிவடைந்த மக்களுக்கு தரமான உணவு, குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்றநோக்கத்தில் தான் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. அது தொடர்ந்து நல்லமுறையில் செயல்படுத்தப்படும்.
கே: அனிதா குப்புசாமி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி அ.தி.மு.க.விலிருந்து விலகுவதாக கூறியுள்ளார்?
ப: அவரவர் மனதில் தோன்றுவதை அவரர் பேசி வருவார்கள். பொது மக்கள் எண்ணம் அதுவல்ல.
கே:சட்டப்பேரவையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்தை திறக்க பிரதமர் வருகைதராததற்கான காரணம் என்ன?
ப: பிரதமருக்கு நேரமின்மை காரணமாக இந்த விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை.
கே: போக்குவரத்து துறையை சீரமைக்க எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆய்வறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளாரே அதை செயல்படுத்துவீர்களா?
ப: 2006 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தின் போது அப்போதைய முதல்வர், போக்குவரத்து துறை அமைச்சரிடம் கூறி அப்போதே இதனை செயல்படுத்தி இருந்தால் போக்குவரத்து துறையில் நஷ்டங்களை தவிர்த்திருக்க முடியும். ஆனால் தற்போதுதான் ஸ்டாலினுக்கு ஞானோதயம் வந்துள்ளது.13-வது, 14-வது நிதிகுழுவில் தமிழத்திற்கு தருவதாக கூறிய தொகையே இன்னும் நிலுவையில் உள்ளது. வளர்ச்சியடைந்த மாநிலம் என்ற ஒரே காரணத்திற்காக தமிழகம் புறக்கணிப்படுவது முறையல்ல. 15-வது நிதிக்குழுவில் தமிழகத்திற்கு உரிய நிதியினை வழங்கி மற்றும் பழைய நிலுவைத்தொகைகளையும் வழங்கவேண்டும் என்றும். தமிழகத்தில் நடைபெறும், முன்னோடித் திட்டத்திற்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
இதைத்தொடந்து தினகரன் குறித்தகேள்வியொன்றை நிருபர்கள் எழுப்பினர். அதற்கு பதிலளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தினகரன் உள்பட எதிர்கட்சிகள் யாராக இருந்தாலும் அ.தி.மு.கவிற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது. அழகான, உறுதியான அஸ்திவாரத்தை ஜெயலலிதா எங்களுக்கு ஏற்படுத்தியுள்ளார் என்று பன்னீர்செல்வம் பதிலளித்தார். இதனை தொடந்து நிருபர்கள், முதல்வர் பதவியிலிருந்து விலகி ஒரு வருடம் ஆனதில் வருத்தம் உள்ளதா என்ற கேள்விக்கு “எதைக் கொண்டுவந்தோம் இழப்பதற்கு‘ என பன்னீர் செல்வம் பளிச் என்று பதில் அளித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்று தி.மு.க. முப்பெரும் விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் வருகை
16 Sep 2025கரூர் : தி.மு.க.வின் முப்பெரும் விழா இன்று (புதன்கிழமை) கரூர் கோடங்கிபட்டியில் நடைபெற உள்ளது. விழாவில் முதல்வரும், தி.மு.க.
-
மதுரையில் பயங்கரம்: கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை
16 Sep 2025மதுரை : மதுரையில் கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை செய்யப்பட்டதை அடுத்து பங்குதாரர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
முதலில் கச்சா எண்ணெய், தற்போது சோளம்: இந்தியாவை அடிபணிய வைக்க அமெரிக்காவின் புதிய தந்திரம்
16 Sep 2025டெல்லி : அமெரிக்காவிடம் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி செய்ய இந்தியா மறுப்பு தெரிவித்தால் அமெரிக்க சந்தையை இந்தியா அணுகுவதை இழக்க நேரிடும் என அமெரிக்க வர்த்த செயலாளர் ஹ
-
தீபாவளி சிறப்பு ரயில்களுக்கு இன்று முன்பதிவு தொடக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
16 Sep 2025சென்னை, : தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக்கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (செப். 17) தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் ஹமாஸ் தலைவா்களை தாக்குவோம் : இஸ்ரேல் பிரதமா் திட்டவட்டம்
16 Sep 2025ஜெருசலேம் : உலகின் ஹமாஸ் தலைவா்கள் எந்த நாட்டில் இருந்தாலும் தாக்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.
-
ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் : அக்டோபர் 1 முதல் அமல்
16 Sep 2025டெல்லி : ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
-
நாளை மறுநாள் வெளியாகும் தண்டகாரண்யம்
16 Sep 2025Learn&Teach புரொடக்ஷன் S.சாய் தேவானந்த், S.சாய் வெங்கடேஸ்வரன், நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில், இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில், தினேஷ், கலையரசன், ஷபீர், பால
-
ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர்: மதுரை ஐகோர்ட் கருத்து
16 Sep 2025சென்னை : மதுரை ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர் என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-09-2025.
16 Sep 2025 -
தமிழகத்தில் இன்று தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை
16 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இரு நாள்களுக்கு இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்
-
எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் அர்ஜூன் தாஸ்
16 Sep 2025’கைதி’ மற்றும் ‘மாஸ்டர்’ படங்களின் மூலம் வில்லத்தனத்தில் மிரட்டியவர் அர்ஜுன் தாஸ், ‘போர்’, ‘ரசாவதி’, ‘அநீதி’ போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் ஹீரோவாக நடித்த
-
இன்று முதல் திருச்சியில்-டெல்லி நேரடி விமான சேவை தொடக்கம்
16 Sep 2025திருச்சி : திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை இன்று முதல் தொடங்கப்படவுள்ளது.
-
உத்தரகாண்டில் மேகவெடிப்பு: நிலச்சரிவு சாலைகள் துண்டிப்பு
16 Sep 2025உத்தரகாண்ட் : உத்தரகாண்டில் மேகவெடிப்பு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் சாலைகள் துண்டிக்கப்பட்டது 5 பேர் மாயமாகி உள்ளனர்.
-
அதிபர் ட்ரம்ப் இங்கிலாந்து பயணம்
16 Sep 2025லண்டன் : இங்கிலாந்துக்கு 3 நாள் பயணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புறப்படுகிறார்.
-
யோலோ திரைவிமர்சனம்
16 Sep 2025யுடியூப் சேனல் நடத்தும் நாயகன் தேவுக்கும், நாயகி தேவிகாவுக்கும் திருமணம் நடந்ததாக சிலர் கூறுகிறார்கள்.
-
பூஜையுடன் தொடங்கிய காட்ஸ்ஜில்லா
16 Sep 2025சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும
-
தமிழக முழு நேர டி.ஜி.பி. தோ்வு செய்ய செப்.26 டெல்லியில் யு.பி.எஸ்.சி. கூட்டம்
16 Sep 2025சென்னை : தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் மற்றும் மாநில காவல்படைத் தலைவா் பதவிக்கு முழு நேர ஐ.பி.எஸ்.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்தது இந்தியா
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்துள்ளது இந்திய அணி.
8 அணிகள்...
-
உருட்டு உருட்டு திரைவிமர்சனம்
16 Sep 2025எந்நேரமும் குடி குடி அலையும் நாயகன் கஜேஷ் நாகேஷ்.
-
தலைநகர் டெல்லியில் துணை ஜனாதிபதியை நேரில் சந்தித்து இ.பி.எஸ். வாழ்த்து
16 Sep 2025புதுடெல்லி : டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, அங்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
-
இந்தியா-அமெரிக்கா இடையே டெல்லியில் வா்த்தகப் பேச்சு
16 Sep 2025புதுதில்லி : இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நேற்று டெல்லியில் மீண்டும் நடைபெற்றது.
-
திருவள்ளுர், நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரூ. 28.33 கோடி மதிப்பீட்டில் 4 புதிய தொழிற்பேட்டைகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
16 Sep 2025சென்னை : திருவள்ளுர், திருநெல்வேலி, திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் சுமார் 5,400 பேர் வேலைவாய்ப்பு பெற்றிடும், ரூ.
-
படுக்கை, தலையணை வேண்டும்: சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷன் மனு
16 Sep 2025பெங்களூரு : சிறையில் படுக்கை, தலையணை கேட்டு நடிகர் தர்ஷன் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
ரயில் டிக்கெட் முன்பதிவு: ஆதாா் பயனா்களுக்கு முன்னுரிமை
16 Sep 2025புதுதில்லி : ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் பயனர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
-
அ.தி.மு.க.வை யாராலும் ஒன்று செய்ய முடியாது : சென்னை பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். ஆவேசம்
16 Sep 2025சென்னை : அ.தி.மு.க.வை யாராலும் ஒன்று செய்ய முடியாது என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.