எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, 2018-19 ஆம் ஆண்டில் 133 கூட்டுறவு நிறுவனங்களில் ரூ.7.01 கோடி மதிப்பீட்டில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் அலகுகள் நிறுவப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் கூட்டுறவு துறை குறித்த மானியக்கோரிக்கை விவாதம் நேற்று நடைபெற்றது. இந்த விவாதங்களுக்கு பதிலளித்து அமைச்சர் செல்லூர் கே.ராஜூ 12 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார், அதன் விபரம் வருமாறு:-
தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சேவையினை நவீன வசதிகள் வழங்க 14 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் தற்போதைய அலுவலகக் கட்டிடங்கள் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கப்படும். கூட்டுறவு நிறுவனங்களில் பாதுகாப்பு வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு 10 கூட்டுறவு நிறுவனங்களில் வாடிக்கையாளர் பாதுகாப்பு பெட்டகங்கள் ரூ.32.70 லட்சம் மதிப்பீட்டிலும், 9 கூட்டுறவு நிறுவனங்களில் நவீன உயர்தர பாதுகாப்புப் பெட்டகங்கள் ரூ.37.53 லட்சம் மதிப்பீட்டிலும், 13 கூட்டுறவு நிறுவனங்களில் பாதுகாப்பு பெட்டகங்கள் ரூ.28.21 லட்சம் மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் 32 கூட்டுறவு நிறுவனங்களில் ரூ.98.44 லட்சம் மதிப்பீட்டில் பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களின் உறுப்பினர்களுக்கான சேவையை மேம்படுத்தும் பொருட்டு, கல்குளம் விளவங்கோடு மற்றும் திண்டுக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மற்றும் சின்னகல்ராயன் பெரும்பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றிற்கு ரூ.61.70 லட்சம் மதிப்பில் புதிய அலுவலகக் கட்டிடங்கள் கட்டுதல், திருப்பூர், தாராபுரம், பல்லடம், திருச்செங்கோடு மற்றும் பழனி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களின் அலுவலகக் கட்டிடங்கள் ரூ.49.60 லட்சம் மதிப்பில் நவீனமயமாக்குதல், சத்தியமங்கலம் மற்றும் கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் ரூ.35.00 லட்சம் மதிப்பில் ஏலக்களத்திற்கு மேற்கூரை அமைத்தல், ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் திண்டல் கிளையில் ரூ.11.40 லட்சம் மதிப்பில் பாதுகாப்புக் கதவுடன் கூடிய பாதுகாப்பு அறை அமைத்தல், திருப்பெரும்புதூர் மற்றும் மதுராந்தகம் தாலுக்கா வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களுக்கு ரூ.39.லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் கட்டுதல் ஆகிய பணிகள் மொத்தம் ரூ.1.97 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் உற்பத்தி செய்யப்படும் பசுமை சமையல் கடலை எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் ஆகியவற்றை பிற கூட்டுறவுச் சங்கங்களுக்கு விநியோகம் செய்வதற்கும், பொது விநியோகத்திட்ட பொருட்களை நியாயவிலைக் கடைகளுக்கு நகர்வு செய்யவும் இரண்டு வாகனங்கள் மற்றும் சத்தியமங்கலம் மற்றும் பவானி ஆகிய வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களுக்கு பொது விநியோகத்திட்ட பொருட்களை நியாயவிலைக் கடைகளுக்கு நகர்வு செய்திட தலா ஒரு வாகனம் என மொத்தம் ரூ.69.41 லட்சம் மதிப்பீட்டில் 4 வாகனங்கள் வாங்கப்படும். தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்திற்கு சொந்தமாக திருவாரூர் மாவட்டம், பாமணி என்ற இடத்தில் செயல்படும் உரத்தயாரிப்பு ஆலை பாமணி 17:17:17 என்ற குருணை வடிவிலான உரத்தினை உற்பத்தி செய்து வருகிறது. மேற்படி உர ஆலையின் செயல்பாட்டினை மேம்படுத்தும் பொருட்டு ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
பெரும்பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களில் வேளாண் விளைப்பொருட்களைப் பதப்படுத்தி, மதிப்பினைக் கூட்டி விற்பனை செய்து விவசாய பெருங்குடி மக்கள் மற்றும் மலைவாழ் மக்கள் அதிக இலாபம் பெற்று, தங்களது வாழ்வாதாரத்தினை வளமாக்கிக் கொள்ள, சத்தியமங்கலம் பெரும்பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில், சிறுதானியங்களில் உமி, தூசி நீக்கும் அலகு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்படும். கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும், கடலூர் மாவட்ட சரவணபவா நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைக்கு, கட்டுப்பாடற்ற பொருட்களை கொள்முதல் செய்து, நுகர்வோருக்கு விற்பனை செய்ய ஏதுவாகவும், நுகர்வோர் சேவைகளை மென்மேலும் பெருக்கவும் நடைமுறை மூலதனக் கடன் ரூ.50 லட்சம் வழங்கப்படும். திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைக்கு சொந்தமான இடத்தில் பண்டகசாலையின் வியாபார வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக, 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு ரூ.50 லட்சம் மதிப்பீட்டிலும், சுற்றுச்சுவர் ரூ.5 லட்சம் மதிப்பீட்டிலும், ஆக மொத்தம் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.
காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் கேழ்வரகு மற்றும் கோதுமை மாவு அரைக்கும் இயந்திரம், பேக்கிங் மெஷின் கன்வேயர் மற்றும் அரவைக்கூடத்தினை நவீனமயமாக்கும் பணிகள் ரூ.23.94 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். நுகர்வோர்களுக்கு தரமான நுகர்பொருட்களை நியாயமான விலையில் வழங்குவதற்கு ஏதுவாக, காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில், கேழ்வரகு மாவு அரைக்கும் இயந்திரம் ரூ.1.48 லட்சம் மதிப்பீட்டிலும், அதற்கான மாவு பேக்கிங் மெஷின் மற்றும் கன்வேயர் ரூ.7.15 லட்சம் மதிப்பீட்டிலும், கோதுமை அரைக்கும் இயந்திரம் ரூ.1.48 லட்சம் மதிப்பீட்டிலும், அதற்கான மாவு பேக்கிங் மெஷின் மற்றும் கன்வேயர் ரூ.7.15 லட்சம் மதிப்பீட்டிலும், மேற்படி அரவைக்கூடத்தினை நவீனமயமாக்கும் பணிகளை ரூ.6.68 லட்சம் மதிப்பீட்டிலும், ஆக மொத்தம் மேற்படி பணிகள் அனைத்தும் ரூ.23.94 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் செயல்படும், மயிலாடுதுறை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் உறுப்பினர்களுக்கான சேவையை மேம்படுத்தும் பொருட்டு, புதிய அலுவலகக் கட்டிடம் மற்றும் வணிக வளாகம் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.
பொதுமக்களுக்கும், நுகர்வோர்களுக்கும் தரமான நுகர்பொருள்களை நியாயமான விலையில் வழங்கி, விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்காற்றி வரும் கூட்டுறவு பண்டகசாலையின் சேவையினை மேலும் மேம்படுத்திட ஏதுவாக, திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் உள்ள சுயசேவைப் பிரிவினை ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் நவீனமயமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். திருவாரூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைக்குச் சொந்தமான இடத்தில், புதிய கிடங்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும். மேலும் பண்டகசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாக ரூ.1.20 லட்சம் மதிப்பீட்டில் நீர்சுத்திகரிப்பு கருவி அமைக்கவும் மற்றும் கண்காணிப்புக் கேமிரா ரூ.1.20 லட்சம் மதிப்பீட்டில் பொருத்தவும் ஆக மொத்தம் ரூ.12.40 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
வாடிக்கையாளர்களின் சேவையை மேம்படுத்தும் விதமாக, விருதுநகர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைக்குச் சொந்தமான இடத்தில், புதிய சுயசேவைப்பிரிவு ரூ.9.86 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும். சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் அண்ணா நகர் இரண்டாவது அவென்யூ கிளையில் வாடிக்கையாளர்களின் மதிப்பு மிக்க பொருட்களை பாதுகாக்கும் பொருட்டு, நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட தானியங்கி வாடிக்கையாளர் பாதுகாப்பு பெட்டகம் ரூ.4.00 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் 24 மணிநேரமும் கடவுச் சொல்லினை பதிவு செய்து பாதுகாப்பு பெட்டக வசதியைபயன்படுத்த இயலும். இந்த தானியங்கி பாதுகாப்பு பெட்டகம் உயர்தர பாதுகாப்பும், துல்லிய சேவையையும் வழங்கக் கூடியவை. கூட்டுறவு நிறுவன வாடிக்கையாளர்களுக்கு வங்கிச் சேவையினை தடையின்றி வழங்கவும், கூட்டுறவு நிறுவனங்களில் மின் செலவினத்தைக் குறைக்கவும், 2018-19 ஆம் ஆண்டில் 133 கூட்டுறவு நிறுவனங்களில் ரூ. 7.01 கோடி மதிப்பீட்டில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் அலகுகள் நிறுவப்படும்.
மேலும், கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரங்கள் 11 கூட்டுறவு நிறுவனங்களில் ரூ. 66.00 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும். கூட்டுறவு நிறுவனங்களில் உள்ள காலி இடங்களில் வணிக வளாகம் மற்றும் திருமண மண்டபம் கட்டுவதன் மூலம், சங்கங்களின் வருவாயைப் பெருக்க முடியும் என்பதால், 5 கூட்டுறவு நிறுவனங்களில் வணிக வளாகமும், 1 கூட்டுறவு நிறுவனத்தில் திருமண மண்டபமும் ரூ.3.35 கோடி மதிப்பீட்டில் இவ்வாண்டில் பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக கட்டப்படும். இதனால் இச்சங்கங்களில் உள்ள காலி இடங்களை முழுமையாகப்பயன்படுத்தி, இந்த வளாகங்களை வாடகைக்கு விடுவதன் மூலமாக சங்கங்களின்நிதிநிலை உயரும். வணிக வங்கிகளுக்கு இணையாக நவீன தொழில்நுட்ப சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பொருட்டு சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் அண்ணா நகர் 2-வது அவென்யூ கிளை மற்றும் பாண்டிபஜார் கிளைகளில் வாடிக்கையாளர்கள், 24 மணி நேரமும் பணம் செலுத்த மற்றும் பணம் பெற ஏதுவாக பணம் செலுத்தும் இயந்திரம் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் மற்றும் கணக்கு புத்தக அச்சு இயந்திரம் ஆகியன ரூ.20.லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்படும்.
மேலும் வங்கியின் வாடிக்கையாளர்கள் பணம் பெற ஏதுவாக முத்தியால்பேட்டை மற்றும் இராயபுரம் கிளைகளில் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் ரூ.10.லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்படும். ஆக மொத்தம் சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு இச்சேவைகளை வழங்க ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் இப்பணிகள் மேற்கொள்ளப்படும். நகர்மயமாதல் மற்றும் தொழில்மயமாதல் காரணமாக நகர்ப்புறத்திற்கு அருகில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை, நகர மக்களின் வங்கித் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் மாற்றியமைப்பது அவசியமாகிறது. இதனை கருத்தில் கொண்டு 2018-19 ஆம் ஆண்டில் 12 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் நகர கூட்டுறவு கடன் சங்கங்களாக மாற்றியமைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 days ago |
-
நெல்லை: 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
30 Apr 2025நெல்லை : நெல்லை மாவட்டம், சிவந்திபட்டி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட கார்மேகனார் தெருவை சேர்ந்த ரத்தினபாண்டி மகன்
-
பாக்.கில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
30 Apr 2025லாகூர் : பாகிஸ்தானில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில் உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
-
நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
30 Apr 2025புதுடெல்லி, நாடு முழுவதும் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருப்பதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித
-
புகார் அளிக்க காவல்நிலையம் வருவோரை கண்ணியத்துடன் நடத்தப்பட சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
30 Apr 2025புது டெல்லி, ஏதேனும் ஒரு குற்றச்சம்பவம் தொடர்பாக புகார் அளிக்க காவல்நிலையம் வரும் ஒவ்வொருவரும் மிகவும் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட
-
தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழுவுக்கு புதிய அதிகாரிகள் நியமனம்: மத்திய அரசு
30 Apr 2025புதுடெல்லி : தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழுவுக்கு புதிய அதிகாரிகளை நியமனம் மத்திய அரசு உத்தரவிட்டது.
-
தமிழகத்தல் 60,000 பேருக்கு வேலை வழங்கும் மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டத்தை முதல்வர் வெளியிட்டார்
30 Apr 2025சென்னை, முதல்வர் ஸ்டாலின் நேற்று (ஏப். 30) மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்திக்கான தமிழ்நாடு மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்பு திட்டத்தினை வெளியிட்டார்.
-
கூட்டாட்சி மிக்க இந்தியாதான் உண்மையான தேசபக்தியாகும்: தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
30 Apr 2025சென்னை, தேசபக்தி என்பது நமக்குத் தேர்தல் அரசியல் முழக்கமல்ல.
-
பஹல்காம் தாக்குதல்: பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை குழு ஆலோசனை
30 Apr 2025புதுடெல்லி, பஹல்காம் தாக்குதலையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்றது.
-
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவாவில் குண்டு வெடிப்பில் 2 குழந்தைகள் பலி
30 Apr 2025கைபர் பக்துன்குவா : பாகிஸ்தானில் கைபர் பக்துன்குவாவில் குணடு வெடிப்பி்ல் 2 குழந்தைகள் பலியாகியுள்ளனர்.
-
உழைப்பாளர் தினத்தையொட்டி மதுக்கடைகள் அடைக்க உத்தரவு
30 Apr 2025சென்னை : உழைப்பாளர் தினத்தையொட்டி இன்று மதுக்கடைகள் அடைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
பாகிஸ்தானுக்கு ஆதரவாக யார் பேசினாலும் தவறுதான்: கர்நாடக முதல்வர் திட்டவட்டம்
30 Apr 2025பெங்களூரு, பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுவது தேச துரோகத்திற்கு சமம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
பஹல்காம் தாக்குதல் விவகாரம்: இந்தியா, பாக்., அமைச்சர்களுடன் விரைவில் அமெரிக்கா ஆலோசனை
30 Apr 2025வாஷிங்டன் : இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகளுடன் அமெரிக்கா ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவித்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2025
30 Apr 2025 -
நம்ம சென்னை நம்ம சந்தை அங்காடியில் பசுமை காய்கறி, பழங்கள் விற்பனை : தமிழக அரசு அறிவிப்பு
30 Apr 2025சென்னை : நம்ம சென்னை நம்ம சந்தை அங்காடியில் பசுமை காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
அமெரிக்காவில் மனைவி, மகனைக் கொன்று இந்திய தொழிலதிபர் தற்கொலை
30 Apr 2025நியூயார்க் : அமெரிக்காவின் நியூகாஸ்டில் பகுதியில் வசித்து வந்த கர்நாடக மாநிலம் மைசூருவைச் சேர்ந்த தொழிலதிபர் ஹர்ஷவர்தனா கிக்கேரி (45), தனது மனைவி சுவேதா (41) மற்றும் 14
-
காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக ஸ்ரீ கணேச சர்மா திராவிட் பொறுப்பேற்பு
30 Apr 2025காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக ஸ்ரீ கணேச சர்மா திராவிட் நேற்று பொறுப்பேற்றார்.
-
ஆந்திராவில் கோவில் சுவர் இடிந்து உயிரிழந்த 9 பேர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
30 Apr 2025புதுடெல்லி, கோவில் சுவர் இடிந்து 9 பேர் பலியான விவகாரத்தில் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
அட்சய திருதியை நாளில் தங்கம் விலையில் மாற்றமில்லை
30 Apr 2025சென்னை, அட்சய திருதியை தினமான நேற்று (ஏப்.30) சென்னையில் தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.8,980 ஆகவும், பவுன் ரூ.71,840 ஆகவும் விற்பனையானது.
-
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும் ஆச்சரியமில்லை: திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
30 Apr 2025சென்னை, வருமான வரித்துறை, புலனாய்வுத்துறை, சி.பி.ஐ., அமலாக்கத்துறை என எதுவாக இருந்தாலும் கவலைப்பட வேண்டாம்.
-
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ஒழுங்கு நடவடிக்கைக்குழு அமைத்து விஜய் உத்தரவு
30 Apr 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அமைத்து அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
-
சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசின் அறிவிப்புக்கு எடப்பாடி பழனிசாமி வரவேற்பு
30 Apr 2025சென்னை : சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என அறிவித்த பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
30 Apr 2025சென்னை, இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்குரிய ஹால் டிக்கெட்களை என்.டி.ஏ. தற்போது வெளியிட்டுள்ளது.
-
கொல்கத்தா ஹோட்டலில் தீ விபத்து: 3 தமிழர்கள் உள்பட 14 பேர் உயிரிழப்பு
30 Apr 2025கொல்கத்தா : மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் தனியார் ஹோட்டல் ஒன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.
-
ஜே.பி.நட்டா மே 3-ல் தமிழகம் வருகிறார்
30 Apr 2025சென்னை : பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, வரும் மே 3ம் தேதி சென்னை வருகிறார். சென்னைக்கு வரும் அவர் மாநில நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளாா்.
-
ஈரானில் உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு: இஸ்ரேல் உளவாளிக்கு மரண தண்டனை
30 Apr 2025ஈரான் : ஈரான் நாட்டில் இஸ்ரேல் புலனாய்வுப் பிரிவுக்காக உளவு பார்த்தாகக் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.