எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, அ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் 2-ம் கட்ட சைக்கிள் பிரச்சார பேரணி இன்று மாலை தேவகோட்டையில் துவங்குகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறும் வண்ணம் வருகிற நாடாளுமன்ற தேர்தலை முன்னுறுத்தி தமிழகத்தில் உள்ள 32 வருவாய் மாவட்டங்களில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. அம்மா பேரவை சார்பில் பேரவையின் மாநில செயலாளரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் தலைமையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சைக்கிள் பிரச்சார பேரணி மேற்கொள்கிறார்கள். இந்த சைக்கிள் பேரணியை மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் கடந்த 15-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அம்மா திடலில் இருந்து சைக்கிள் பிரச்சார பேரணியாக புறப்பட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள மதுரை கிழக்கு, மேலூர், சோழவந்தான், திருமங்கலம், உசிலம்பட்டி, மதுரை மேற்கு, மதுரை மத்தி, மதுரை தெற்கு, மதுரை வடக்கு ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகளிலும், கிராமம் கிராமமாக சென்று பொதுமக்களை சந்தித்து அ.தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி மீண்டும் துவங்கிய இடமான அம்மா திடலை அடைந்து நிறைவு பெற்றது. இந்த சாதனை விளக்க சைக்கிள் பயணத்தின் போது தொகுதி வாரியாக நடைபெற்ற அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள், அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களில் சைக்கிள் பிரச்சார பேரணிக்கு தலைமையேற்று சென்ற அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு பல்லாயிரக்கணக்கான பயனாளிகளுக்கு கோடிக்கணக்கான மதிப்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் சைக்கிள் பிரச்சார பேரணி செல்லும் வழியில் பல இடங்களில் குடிமராமத்து பணி, கோவில் குளங்கள் தூர்வாறும் பணியிலும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்று தூய்மைப் பணியை மேற்கொண்டனர். இந்த சைக்கிள் பேரணிக்கு மதுரை மாவட்ட மக்கள் மகத்தான வரவேற்பு கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து 2-வது கட்ட சைக்கிள் பிரச்சார பேரணி இன்று 4 - ம் தேதி மாலை 5 மணியளவில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ஆயிரம் இளைஞர்களுடன் அம்மா பேரவை மாநில செயலாளரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் தலைமையில் துவங்குகிறது. சைக்கிள் பேரணி துவக்க விழாவில் அமைச்சர் பாஸ்கரன், சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க செயலாளர் செந்தில்நாதன் எம்.பி, மாவட்ட பேரவை செயலாளர் அசோகன் மற்றும் முன்னணி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். அன்று இரவு பேரணியில் கலந்து கொள்ளும் ஆயிரம் இளைஞர்களும் தேவகோட்டையில் தங்குகிறார்கள்.
மறுநாள் ஆகஸ்ட் 5 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் தேவகோட்டையில் இருந்து சைக்கிள் பிரச்சார பேரணி அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் புறப்பட்டு கண்டதேவி, சண்முகநாதபுரம், ஆராவயல், அமராவதி புதூர், ரஸ்தா வழியாக காரைக்குடி நகரை நண்பகலில் சென்றடைகிறது. காரைக்குடி அண்ணாசிலை அருகில் அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க பிரச்சார கூட்டம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெறுகிறது. இதில் சைக்கிள் பேரணியாக செல்லும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அன்று இரவு காரைக்குடியில் தங்குகிறார்கள். பின்னர் மாலையில் காரைக்குடியில் இருந்து புறப்பட்டு சைக்கிள் பிரச்சார பேரணி திருப்பத்தூர் நகரை மாலையில் வந்தடைகிறது. அங்கு இரவில் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பில் வரவேற்பு கொடுக்கப்படுகிறது. அங்கு அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இதில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு பேசுகிறார். அன்று இரவில் திருப்பத்தூரில் தங்குகிறார்கள்.
ஆகஸ்ட் 6 - ம் தேதி திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில் திருப்பத்தூரில் இருந்து சைக்கிள் பிரச்சார பேரணி புறப்பட்டு திருக்கோஷ்டியூர், ஏரியூர் விளக்கு,மதகுபட்டி, ஓக்கூர், சோழபுரம், காஞ்சிரங்காள் வழியாக சிவகங்கை நகரை நண்பகலில் சென்றடைகிறது . அங்கு சிவகங்கை சட்டமன்ற தொகுதியின் சார்பில் சைக்கிள் பயண இளைஞர்களுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் நிர்வாகத்தின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இதில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இதனை தொடர்ந்து அன்று மாலை சைக்கிள் பேரணி சிவகங்கையில் இருந்து புறப்பட்டு வாணியங்குடி, கீழக்கண்டனி, சுந்தரநடப்பு, மானாமதுரை சிப்காட் வழியாக மானாமதுரை பேரூராட்சியை வந்தடைகிறது. மானாமதுரை பழைய பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இதில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த விழாவிற்கு பின்னர் மானாமதுரையில் இருந்து சைக்கிள் பேரணி புறப்பட்டு பார்த்திபனூரை சென்றடைகிறது. அங்கு இரவில் சைக்கிள் பயண இளைஞர்களுடன் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தங்குகிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு நாளை ஆலோசனைக் கூட்டம்
18 Jan 2026சென்னை, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கைக் குழு நாளை (20.01.2026) செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு, சென்னையில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில்
-
டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகிறார் விஜய்
18 Jan 2026சென்னை, கரூர் கூட்ட நெரிசல் விசாரணை தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் இன்று மீண்டும் நேரில் ஆஜராகிறார்.
-
ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் காலிங்கராயரின் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
18 Jan 2026ஈரோடு, ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் நதிநீர் இணைப்பின் முன்னோடி என போற்றப்படும் காலிங்கராயர் சிலையை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
ஓசூர் விமான நிலைய திட்டம்: ஒப்புதல் அளிக்க மத்திய அரசு மறுப்பு
18 Jan 2026டெல்லி, ஓசூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளது, இது, தமிழக அரசியல் மற்றும் தொழில் வட்டாரத்தில் பெரு
-
அசாமில் ரூ.6,957 கோடி மதிப்பிலான மேம்பாலப்பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல்
18 Jan 2026அசாம் மாநிலத்தின் நாகோன் மாவட்டத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, 6 ஆயிரத்து 957 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள சாலை மேம்பாலப்பணிகளுக்கு பிரதமர
-
அமெரிக்க படைகள் தாக்குதல்: சிரியாவில் அல் கொய்தா முக்கிய தலைவர் கொலை
18 Jan 2026டமாஸ்கஸ், சிரியாவின் வடமேற்குப் பகுதியில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில், டிசம்பர் மாதம் அமெரிக்க வீரர்களை கொன்ற ஐ.எஸ் பயங்கரவாதியுடன் தொடர்புடைய அல்-கொய்தாவின் ம
-
தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வரும் 24-ம் தேதி மழைக்கு வாய்ப்பு
18 Jan 2026தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வரும் 24-ம் தேதி மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
நீலகிரியில் சோக சம்பவம்: மண் சரிவில் சிக்கிய 3 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக பலி
18 Jan 2026நீலகிரி, நீலகிரியில் மண் சரிவில் சிக்கிய 3 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக பலியானதை அடுத்து 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி: அமைச்சர் துரைமுருகனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர்
18 Jan 2026சென்னை, உடல்நல குறைவு ஏற்பட்டதால் அமைச்சர் துரைமுருகன், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –18-01-2026
18 Jan 2026 -
யாரையும் கஷ்டப்படுத்த சொல்லவில்லை: தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்த ஏ.ஆர்.ரஹ்மான்
18 Jan 2026சென்னை, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தன் மீதான சமீபத்திய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
-
மக்கள் நலத்திட்டங்களுக்கு எப்பவுமே ஒரிஜினல் சொந்தக்காரங்க நாங்கதான்: அ.இ.அ.தி.மு.க. அறிக்கை
18 Jan 2026சென்னை, மக்கள் நலத்திட்டங்களுக்கு எப்பவுமே ஒரிஜினல் சொந்தக்காரங்க நாங்கதான் என்று தி.மு.க. அமைச்சர்களின் விமர்சனங்களுக்கு பதிலளக்கும் விதமாக அ.இ.அ.தி.மு.க.
-
எஸ்.ஐ.ஆர். பணிகளுக்குப்பின் கேரளாவில் தலைமை தேர்தல் அதிகாரி கேல்கர் பெயர் நீக்கப்பட்டதால் அதிர்ச்சி!
18 Jan 2026திருவனந்தபுரம், கேரளாவில் எஸ்.ஐ.ஆர்.
-
தமிழகத்திற்கான உரிய நிதியை வழங்குவதில்லை: மத்திய அரசு மீது நிதியமைச்சர் : தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு
18 Jan 2026மத்திய அரசு தமிழகத்துக்கு உரிய நிதி பகிர்வு வழங்காத நிலையிலும், உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு முதல்வர் மு.க.
-
பிற இந்திய மொழிகளின் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு விருது முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
18 Jan 2026சென்னை, "தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம் மற்றும் மராட்டிய மொழிகளில் வெளியாகின்ற தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும்
-
கிரீன்லாந்து விவகாரத்தில் ட்ரம்ப் முடிவு வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்: ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை
18 Jan 2026பிரஸ்ஸல்ஸ், கிரீன்லாந்து விவகாரத்தில் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக நடந்து கொள்வது ஆபத்தான வீழ்ச்சிப் பாதைக்கு வழி வகுக்கும் என்று ஐரோப்ப்பிய ஒன்றியம் அவரை எச்சரித்துள்ளது.
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: லக்னோவில் இண்டிகோ விமானம் தரையிறக்கம்
18 Jan 2026லக்னோ, வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து இண்டிகோ விமானம் லக்னோவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்ப தமிழ்நாடு முழுவதும் 5,192 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
18 Jan 2026சென்னை, பொங்கல் விடுமுறையில் வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக நேற்று 5,192 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
-
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ஏகே-47 துப்பாக்கிகள் கண்டெடுப்பு
18 Jan 2026சண்டிகர், இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளது.
-
காற்றின் தரத்தை அறிய மாநகராட்சி நடவடிக்கை: சென்னையில் 100 இடங்களில் டிஜிட்டல் பலகைகள் அமைப்பு
18 Jan 2026சென்னை, சென்னையில் காற்றின் தரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்காக 100 முக்கிய இடங்களில் டிஜிட்டல் பலகைகளை அமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
-
தி.மு.க. கூட்டணியை யாராலும், ஒருபோதும் உடைக்க முடியாது: அமைச்சர் ரகுபதி மீண்டும் திட்டவட்டம்
18 Jan 2026புதுக்கோட்டை, தி.மு.க.
-
போட்டியின்றி தேர்வாகிறார்: பா.ஜ.க. தேசிய தலைவராக நிதின் நபினுக்கு வாய்ப்பு
18 Jan 2026டெல்லி, பா.ஜ.க. தேசிய தலைவராக போட்டியின்றி தேர்வாக நிதின் நபினுக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
11-வது நாளாக தொடர்ந்த போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை
18 Jan 2026சென்னை, “தி.மு.க.
-
1,500 குழந்தைகளை காப்பாற்றிய பெண் ரயில்வே காவல் அதிகாரிக்கு மிக உயரிய சேவை விருது அறிவிப்பு
18 Jan 2026லக்னோ, உத்தரப் பிரதேசத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் சந்தனா சின்ஹாவுக்கு இந்திய ரயில்வேயின் உயரிய சேவை விருதான 'அதி விசிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்' வழங்கி கவுரவ
-
குடியரசு தினம் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அமல்
18 Jan 2026சென்னை, இந்தியாவின் 77-வது குடியரசு தின விழாவை (ஜனவரி 26, 2026) முன்னிட்டு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.


