முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியலமைப்பை இழிவுபடுத்துகிறார் மம்தா : பிரதமர் மோடி கடும் தாக்கு

வியாழக்கிழமை, 9 மே 2019      அரசியல்
Image Unavailable

பன்குரா, என்னை பிரதமராக ஏற்றுக் கொள்ள மாட்டேன் என கூறியதன் மூலம் இந்திய அரசியலமைப்பை மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி இழிவுபடுத்துகிறார் என்று பிரதமர் மோடி விமர்சித்தார்.

மேற்கு வங்காளத்தில் உள்ள பன்குரா பகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி பேசியதாவது,

நாட்டின் தலைவராக பிரதமரை நான் ஏற்க மாட்டேன் என்று வெளிப்படையாக மம்தா பானர்ஜி அறிவிக்கிறார். ஆனால், இம்ரான்கானை பாகிஸ்தான் பிரதமராக பெருமையுடன் ஏற்றுக் கொள்கிறார். பொதுத் தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற வெறுப்பில், இந்திய அரசியலமைப்பை மம்தா பானர்ஜி இழிவுபடுத்துகிறார்.

புயலின் போது எனது தொலைபேசி அழைப்பை மம்தா பானர்ஜி ஏற்றுக் கொள்ளவில்லை. அதிகாரிகளுடன் இணைந்து புயல் பாதிப்புகள் பற்றி விவாதிக்க மத்திய அரசு விரும்பியது. ஆனால், இதற்கு கூட சகோதரி அனுமதிக்கவில்லை. மாநிலத்தை மேம்படுத்த வேண்டும் என்ற அக்கறை மம்தாவுக்கு இல்லை. ஆனால், தனது குடும்பத்தினரை வளப்படுத்த வேண்டும் என்ற விருப்பம் மட்டுமே அவரிடம் உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி கடுமையாக சாடினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து