எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையதாக நாடு முழுவதும் 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
டெல்லியில் நேற்று உயர் போலீஸ் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. பயங்கரவாதத்தை ஒடுக்குவது குறித்து அந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் மத்திய உள்துறை ராஜாங்க அமைச்சர் கிஷன்ரெட்டி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தேசிய புலனாய்வு அமைப்பின் ஒய்.சி.மோடி, முன்னாள் உளவுத்துறை இயக்குனர் ஆர்.என்.ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இதுவரை நாடு முழுவதும் பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகள் பேசினர். அப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் கூறியதாவது:-
பயங்கரவாதத்திற்கு எதிராக பண பரிமாற்ற நடவடிக்கைகள் குறித்து நிதி நடவடிக்கை கண்காணிப்பு குழு என்ற சர்வதேச அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு ஏற்கனவே பாகிஸ்தானை பல்வேறு தடவை எச்சரித்துள்ளது. பாகிஸ்தான் மண்ணில் செயல்படும் பயங்கரவாதிகளை ஒடுக்குமாறு அந்த அமைப்பு கேட்டுக் கொண்டது. தற்போது அந்த சர்வதேச அமைப்பு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கூடி பயங்கரவாதிகளுக்கு பண பரிமாற்றம் செய்யும் நாடுகள் பற்றி ஆய்வு செய்து வருகிறது. இது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது.
பாகிஸ்தான் அரசு எப்போதும் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்வதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறது. பாகிஸ்தானின் இந்த செயல் நம் அனைவருக்கும் நன்றாக தெரியும். அதை சர்வதேச நாடுகளிடம் நிரூபிக்க இன்னும் போதுமான ஆதாரங்கள் தேவைப்படுகிறது. காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு வங்கிகள் மூலம் உதவி செய்வதை தேசிய புலனாய்வு அமைப்பு மிக திறமையாக கண்டறிந்துள்ளது. இதைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பயங்கரவாதிகளுக்கு செயல்பட முடியாத அளவுக்கு நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது. பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தேவையான அளவுக்கு நிதி கொடுக்கிறது. இதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
பயங்கரவாதிகள் பற்றி தகவல் தரும் உளவுத்துறையால் மட்டுமே பயங்கரவாதத்தை ஒழித்து விட முடியாது. அவர்களுக்கு உதவும் பண பரிமாற்றம் உள்பட அனைத்தையும் வேரறுக்கும் உங்களைப் போன்றவர்களால்தான் பயங்கரவாதிகளை ஒழிக்க முடியும். போர் வந்தால் அனைவருக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும். எனவே பயங்கரவாதத்திற்கு நாம் அனைத்து வகையிலும் முடிவு கட்ட வேண்டும். இத்தகைய வழிகாட்டுதல்களின் மூலம் பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் வெற்றி பெற முடியும். இவ்வாறு அஜித்தோவல் கூறினார்.
அவரை தொடர்ந்து தேசிய புலனாய்வு அமைப்பின் ஐ.ஜி. அலோக்மிட்டல் பேசினார். அவர் கூறியதாவது:-
தேசிய புலனாய்வு அமைப்பு மேற்கொண்ட திட்டமிட்ட நடவடிக்கைகள் காரணமாக பல்வேறு சதி திட்டங்கள் முன்னதாக முறியடிக்கப்பட்டன. காலிஸ்தான் சதி முழுமையாக தகர்க்கப்பட்டது. ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்ட 127 பேர் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டனர். பெங்களூரில் அவர்கள் 22 இடங்களில் முகாம்கள் அமைத்து இருந்தனர். அவர்கள் பதுங்கி இருந்த இடங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. அந்த இடத்தில் இருந்து கண்ணிவெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த செயல்பாடுகள் மூலம் தென்னிந்தியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளும், வங்கதேச பயங்கரவாதிகளும் காலூன்ற முயற்சி செய்தது தெரிய வந்தது.
இந்த பயங்கரவாதிகள் அனைவரும் இஸ்லாமிய மதகுரு ஜாகீர்நாயக் பேச்சால் கவரப்பட்டு பயங்கரவாத இயக்கத்துக்கு வந்தது தெரிய வந்தது. நாடு முழுவதும் இவர்கள் மிகப்பெரிய நெட் வொர்க்கை ஏற்படுத்தி செயல்பட்டு வந்தனர். அந்த நெட்வொர்க்கை பலப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டனர். இதையடுத்து நாடு முழுவதும் அதிரடி வேட்டைகள் நடத்தப்பட்டன. கைதான 127 பேரில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 33 பேர் பிடிபட்டனர். உத்தரபிரதேசத்தில் 19 பேர், கேரளாவில் 17 பேர், தெலுங்கானாவில் 14 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஏராளமான திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் கைதான பயங்கரவாத ஆதரவாளர்கள் தாங்கள் இலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதி ஜக்ரன் ஹசீம் பேச்சால் கவரப்பட்டோம் என்று வாக்குமூலம் அளித்தனர். அவர்களுக்கும், சர்வதேச பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. குறிப்பாக இந்த பயங்கரவாதிகள் வங்கதேசத்தில் செயல்படும் ஜமாத் உல் முஜாகிதீன் (ஜெஎம்பி) என்ற அமைப்புடனும் தொடர்பில் இருந்தனர்.
வங்கதேசத்தில் ஷரியத் சட்டப்படி ஆட்சியை உருவாக்க ஜமாத் உல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் பெரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது நடமாட்டம் இந்தியாவில் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பீகார் ஆகிய 4 மாநிலங்களில் அதிகரித்துள்ளது. ஜமாத் உல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் இந்தியாவில் உள்ள புத்த மத வழிபாட்டு தலங்களை குண்டு வைத்து தகர்க்க ரகசிய திட்டம் தீட்டி இருந்தனர். இதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டனர். பர்மாவில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த தாக்குதலை நடத்த அவர்கள் நினைத்தனர். இதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் தேசிய புலனாய்வு அமைப்பு எச்சரித்தது. இதன் காரணமாக பல பயங்கரவாத செயல்கள் தொடக்கத்திலேயே கிள்ளி எறியப்பட்டன.
பஞ்சாபில் மீண்டும் காலிஸ்தான் மூலம் பயங்கரவாத செயல்களை உருவாக்க பாகிஸ்தான் சதி திட்டம் தீட்டியது. அந்த சதியும் முறியடிக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் 8 இடங்களில் காலிஸ்தான் குழுக்கள் படுகொலைகளை செய்தது. இதன் மூலம் கலவரங்களை உருவாக்க நினைத்தனர். இதற்காக பாகிஸ்தான் பெரிய அளவில் பண உதவியை செய்தது. பாகிஸ்தானில் இருந்து இந்திய ரூபாய் நோட்டுகளை போல கள்ள நோட்டுகளை அச்சடித்து பல கோடிக்கு விநியோகித்தனர். இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்தும் கூட காலிஸ்தான் விடுதலை அமைப்புக்கு பண உதவிகள் வந்தன. இது தொடர்பாக 16 பேரை கைது செய்து காலிஸ்தான் பயங்கரவாதிகளின் செயல்பாடுகளை முடக்கி உள்ளோம்.
அமெரிக்காவில் இயங்கும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் சமூக வலைதளங்கள் மூலம் இந்தியாவில் சீக்கிய இளைஞர்களின் செயல்பாடுகளை மாற்ற முயற்சி செய்தனர். அதையும் தடுத்து நிறுத்தி உள்ளோம். இது தொடர்பாக உத்தரபிரதேசத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 2020-ம் ஆண்டுக்குள் தங்களது இலக்கை அடைய பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருந்தது தெரிந்தது. அதுபோன்று காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதிகளுக்கும் பாகிஸ்தான் ஏராளமாக பணம் கொடுத்து உதவுகிறது. இந்தியாவுக்கான தூதர் மூலம் இந்த பணம் வினியோகிக்கப்படுகிறது. காஷ்மீரில் பண பரிமாற்றத்தில் ஈடுபட்ட பிரிவினைவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மூத்த பிரிவினைவாதிகள் பலர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் யாரும் இதுவரை ஜாமீனில் விடுபடவில்லை. அவர்கள் அனைவரும் ஹவாலா அடிப்படையில் பாகிஸ்தான் தூதரிடம் இருந்து பணம் பெற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கள்ள ரூபாய் நோட்டுகளை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு பாகிஸ்தான் அச்சடித்து இந்தியாவுக்குள் பரவ விடுவதையும் இவர்கள் மூலம் கண்டு அறிந்துள்ளோம். இவ்வாறு தேசிய புலனாய்வு அமைப்பின் ஐ.ஜி. அலோக் மிட்டல் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.