எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை : களியக்காவிளையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு சிம்கார்டு வழங்கிய 7 பேர் காஞ்சிபுரத்தில் சிக்கியுள்ளனர். பயங்கரவாதிகளுக்கு உடந்தையாக இருந்தவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வரும் நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கும் கியூபிரிவு போலீசார் பதிவு செய்துள்ள வழக்கும் தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ.வுக்கு விரைவில் மாற்றப்பட உள்ளது
குமரி மாவட்டம் களியக்காவிளையில் கடந்த 8-ம் தேதி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் பயங்கரவாதிகள் அப்துல் சமீம், தவுபிக் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பயன்படுத்திய செல்போன்களை வைத்து போலீசார் துப்பு துலங்கி வருகிறார்கள். இது தொடர்பாக தமிழக கியூ பிரிவு போலீசார், தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார், தேசிய புலனாய்வு அமைப்பினர் உள்ளிட்டோர் விசாரணை நடத்தி வருகின்றனர். பயங்கரவாதிகளின் பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில் காஞ்சிபுரத்தில் இருந்து பயங்கரவாதிகளுக்கு சிம்கார்டுகளை சப்ளை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் போலீசார் திடீரென சோதனை நடத்தினர். காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து செல்போன் கடைகளிலும் இந்த சோதனை நடைபெற்றது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் கைதான அப்துல் சமீம், தவுபிக் ஆகிய இருவரும் காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில் அருகே ஒரு கடையில் இருந்து சிம்கார்டுகளை வாங்கி இருப்பது தெரியவந்தது. இதே போல மேலும் 2 கடைகளிலும் சிம்கார்டுகளை பயங்கரவாதிகள் வாங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பயங்கரவாதிகளுக்கு சிம் கார்டுகளை சப்ளை செய்தது தொடர்பாக கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் பிடிபட்டுள்ளனர். இவர்கள் 7 பேரையும் சென்னைக்கு அழைத்து வந்து கியூபிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காஞ்சிபுரம் செல்போன் கடைகளில் இருந்து பயங்கரவாதிகள் 200-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை போலி முகவரியை கொடுத்து வாங்கி இருக்கும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக தகவல்களை போலீசார் திரட்டி வருகிறார்கள்.
சென்னை அம்பத்தூரில் இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் கொலையில் தொடர்புடைய பயங்கரவாதிகளில் ஒருவரான அப்துல் சமீம் குமரி மாவட்டத்தில் பதுங்கி இருந்து சப்-இன்ஸ் பெக்டரை கொலை செய்த நிலையில் அவரது கூட்டாளிகளான காஜா மொய்தீன், சையது அலி நவாஸ் ஆகிய இருவரும் டெல்லியில் பிடிபட்டனர். இவர்களுக்கு செல்போன்களை வாங்கி கொடுத்ததாக பெங்களூரில் சில நாட்களுக்கு முன்பு 6 பேர் பிடிபட்டனர். இதன் பின்னர் பெங்களூரில் தமிழ்நாடு கியூ பிரிவு போலீசார் முகாமிட்டு பயங்கரவாதிகளுக்கு உதவி செய்த பலரை கைது செய்து வருகிறார்கள். அந்த வகையில் இதுவரையில் 10 பேர் வரை கைது செய்யப் பட்டுள்ளனர். இந்த நிலையில் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக உசேன்செரீப் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 8-ம் தேதி சப்-இன்ஸ் பெக்டர் வில்சனை கொலை செய்து விட்டு பயங்கரவாதிகள் இருவரும் கேரளா வழியாக பெங்களூருக்கு தப்பி சென்றுள்ளனர். பெங்களூர் சென்றதும் அங்கு சிவாஜி நகரில் வசித்து வரும் உசேன்செரீப் இரண்டு பேருக்கும் அடைக்கலம் கொடுத்துள்ளார். அதே போல பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் மற்றவர்களும் இவரது வீட்டிலேயே பதுங்கி இருந்துள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. நேற்று முன்தினம் பெங்களூரில் கைது செய்யப்பட்ட மெகபூப் பாட்சா, முகமது மன்சூர்கான் இருவருடன் உசேன்செரீப்பும் சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார். மூன்று பேரிடமும் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் கைதான 2 பயங்கரவாதிகளும் இன்று போலீஸ் காவலில் எடுக்கப்பட உள்ள நிலையில் இவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக பலர் கைது செய்யப்பட்டு வருவது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பயங்கரவாதிகளுக்கு உடந்தையாக இருந்தவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வரும் நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கும் கியூபிரிவு போலீசார் பதிவு செய்துள்ள வழக்கும் தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ.வுக்கு விரைவில் மாற்றப்பட உள்ளது. இதன் பிறகு என்.ஐ.ஏ. அதிகாரிகள் பயங்கரவாதிகளையும், அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். அப்போது பயங்கரவாதிகளின் சர்வதேச தொடர்பு பற்றியும் விசாரணை நடைபெற உள்ளது. இந்த விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
வரும் 16, 17-ம் தேதிகளில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
13 Jul 2025சென்னை: தமிழகத்தில் வரும் 16, 17 தேதிகளில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
இன்று கோலாகலமாக நடக்கிறது திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம்
13 Jul 2025திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (ஜூலை 14) அதிகாலை 5:25 மணி முதல் காலை 6:10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
-
ராணிப்பேட்டை அருகே சோகம்: குட்டையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
13 Jul 2025ராணிப்பேட்டை: குட்டையில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ராணிப்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
புதுச்சேரி: புதிய அமைச்சராக ஜான்குமார் இன்று பதவியேற்பு
13 Jul 2025புதுச்சேரி : புதுச்சேரியில் புதிய அமைச்சராக பா.ஜ.க.வின் ஜான்குமார் இன்று பதவியேற்கிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-07-2025.
13 Jul 2025 -
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் 7 மீனவர்கள் கைது
13 Jul 2025ராமேசுவரம் : எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
-
உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தம்: மேட்டூர் அணையில் பாசனத்துக்கு நீர் திறப்பு
13 Jul 2025மேட்டூர்: மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம் நேற்று காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
-
குற்றச்செயலில் ஈடுபட்டதாக அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட 8 பேர் கைது
13 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் குற்றச்செயலில் ஈடுபட்ட காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட 8 பேர் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.
-
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 7 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
13 Jul 2025சென்னை: மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.;
-
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: 9-வது முறையாக 2 அணிகளும் ஒரே ஸ்கோர்: இந்தியா சாதனை
13 Jul 2025லண்டன்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான லார்ட்ஸ் டெஸ்டில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் 387 ரன் குவித்தது.
-
விமானம் 10 மணிநேரம் தாமதம்; மும்பை விமான நிலையத்தில் பயணிகள் திடீர் போராட்டம்
13 Jul 2025மும்பை: துபாய்க்கு செல்லவிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் 10 மணிநேரத்திற்கும் மேலாக தாமதமானதால் மும்பை விமன நிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
-
இந்திய மாணவர் சேர்க்கை குறைவால் கனடா பல்கலை, கல்லுாரிகளில் வேலை இழந்த 10 ஆயிரம் பேர்..!
13 Jul 2025ஒன்டாரியோ: கனடா பல்கலை மற்றும் கல்லூரிகளில் இந்திய மாணவர்களின் சேர்க்கை வெகுவாக குறைந்ததால் நிதி நெருக்கடியில் சிக்கிய கல்வி நிறுவனங்கள் பேராசிரியர்கள், நிர்வாக பணியாளர
-
மாணவர்கள் போராட்டம்: ட்ரம்ப் மிரட்டலுக்கு அடிபணிந்த கொலம்பியா பல்கலைக்கழகம்..!
13 Jul 2025நியூயார்க்: பாலஸ்தீனத்தின் காசா முனை மீதான இஸ்ரேலின் போர் தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
-
'சாமி' பட வில்லன் கோட்டா சீனிவாச ராவ் காலமானார் பிரதமர் மோடி இரங்கல்
13 Jul 2025ஐதராபாத்: நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல் நலக்குறைவால் காலமானார். சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அதிகாலை உயிர் பிரிந்தது.
-
சுபான்ஷு சுக்லா இன்று பூமிக்கு திரும்புகிறார்..!
13 Jul 2025புதுடெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இன்று பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா.
-
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
13 Jul 2025தென்காசி: வார விடுமுறை என்பதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர்.
-
உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து ஜூலை 17-ல் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
13 Jul 2025சென்னை : உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் வரும் ஜூலை 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
-
மத்திய அமைச்சருக்கு கொலை மிரட்டல்
13 Jul 2025பாட்னா: மத்திய மந்திரி சிராக் பஸ்வானுக்கு சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
சரக்கு ரெயிலில் தீ விபத்து: உயர்மட்ட விசாரணைக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
13 Jul 2025சென்னை: சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து: உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் த.வெ.க. ஆர்ப்பாட்டம் - விஜய் பங்கேற்பு
13 Jul 2025சென்னை : திருப்புவனம் காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்றார்
-
அதிக சிக்சர்: விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை தகர்த்த ரிஷப் பண்ட்
13 Jul 2025லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 36 சிக்சர்கள் அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற விவியன் ரிச்சர்
-
நியமன எம்.பி. உஜ்வால் நிகாமுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
13 Jul 2025புதுடெல்லி : மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள உஜ்வால் நிகாமின் பணி பாராட்டத்தக்கது என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தி உள்ளார் .
-
ஆஸி.யை 225 ரன்களில் சுருட்டிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி..!
13 Jul 2025கிங்ஸ்டன்: ஆஸ்திரேலிய அணி உடனான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அந்த அணியை 225 ரன்களில் ஆல் அவுட் செய்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.
-
யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் தி.மு.க.: உதயநிதி பெருமிதம்
13 Jul 2025திருவண்ணாமலை : தேர்தல் ரேசில் யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் முதலிடத்தில் சென்று கொண்டு இருக்கிறோம் என்று துணை முதல்வர் உதயநிதி கூறி உள்ளார்.
-
2-ம் கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி
13 Jul 2025சென்னை : மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் பிரச்சார சுற்றுப்பயணத்தின் 2-ம் கட்ட சுற்றுப்பயண அட்டவணையை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.