எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதாவை நேற்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். முதல்வர் தாக்கல் செய்த இந்த சட்ட மசோதா நேற்று தமிழக சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியது.
முதல்வரின் பதில் உரைக்குப் பின் சட்ட மசோதா சட்டமாக நிறைவேறியது. அப்போது உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த சட்டத்தின் மூலம் காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும் காவிரி டெல்டா பகுதிகளில் வேளாண் மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்ட பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் தலைவாசலில் நடந்த கால்நடை பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக விரைவில் சட்டம் கொண்டு வரப்படும் எனவும் கூறியிருந்தார். மேலும் விவசாயிகளுக்கு விரைவில் நல்ல செய்தி வெளியிடப்படும் என அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து முதல்வர் தலைமையில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சிறப்பு வேளாண் மண்டல திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த நிலையில் பாதுகாக்கப்பட்ட காவிரி டெல்டா வேளாண் மண்டலம் தொடர்பான சட்ட மசோதா நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
நான் ஒரு விவசாயியாக இருந்து இந்த சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த சட்ட முன்வடிவை அவையில் தாக்கல் செய்வதை மிகவும் பெருமையாக கருதுகிறேன். இந்த வாய்ப்பு இறைவனாக காட்சியளிக்கிற ஜெயலலிதா தந்த பாக்கியமாக நான் கருதுகிறேன். 2020-ம் ஆண்டு தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் மேம்படுத்தப்பட்ட சட்ட முன்வடிவை அறிமுகம் செய்ய அனுமதி கோருகிறேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த சட்ட மசோதாவில் கூறியிருப்பதாவது:-
காவிரி ஆற்றுப்படுகை மண்டலமானது தமிழகத்தின் நெற்களஞ்சியமாக கருதப்படுகிறது. இது மாநிலத்தில் உணவு தானிய மற்றும் பிற வேளாண் விளைபொருட்களின் உற்பத்தியில் பெரும் பங்கு வகிப்பதுடன் மாநிலத்திற்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்கிறது. பல்வேறு வகைப்பட்ட வேளாண் நடவடிக்கைகளானது விவசாயிகளுக்கும், பண்ணை தொழிலாளர்களுக்கும் நாகரீகமான வாழ்க்கை தரத்தை உறுதி செய்கிறது. சமீப ஆண்டுகளில் சில வேளாண்மை சாராத நடவடிக்கைகள் இம்மண்டலத்தில் வேளாண்மையை எதிர்விளைவாக பாதித்து மாநில உணவு பாதுகாப்பை அச்சுறுத்துகிறது என்பது கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இம்மண்டலத்தில் வேளாண்மையை பாதுகாக்கும் பொருட்டு சில நடவடிக்கைகளை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக விவசாயிகளின் நலனுக்காக சேவை செய்வதற்கும், பண்ணை உற்பத்தி மற்றும் பண்ணை உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கும் பண்ணை நடவடிக்கைகளை பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்கும் உயர்மட்ட குழு ஒன்றினை இந்த சட்ட முன்வடிவு அமைக்க விழைகிறது. எந்த ஒரு நபரும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் எந்தவொரு புதிய திட்டத்தையோ, புதிய செயல்பாட்டையோ மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. துத்தநாக உருக்கு ஆலை, இரும்பு தாது செயல்முறை ஆலை, ஒருங்கிணைந்த எஃகு ஆலை அல்லது இலகு இரும்பு ஆலை, செம்பு உருக்கு ஆலை, அலுமினியம் உருக்கு ஆலை, விலங்குகளின் எலும்பு, கொம்பு, குளம்பு மற்றும் பிற உடல் பாகங்களை பதப்படுத்துதல், தோல் பதனிடுதல், எண்ணை மற்றும் நிலக்கரி படுகை மீத்தேன், மென்களிக்கல் எரிவாயு மற்றும் பிற ஒத்த ஹைட்ரோ கார்பன்கள் உள்ளடங்களான இயற்கை வாயுக்களின் ஆய்வு, துளைத்தல் மற்றும் பிரித்தெடுத்தல், கப்பல் உடைக்கும் தொழிற்சாலை போன்றவற்றிற்கு தடை விதிக்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டம், திருவாரூர் மாவட்டம், நாகை மாவட்டம், கடலூர் மாவட்டத்தின் காட்டுமன்னார்கோயில், மேல்புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை மற்றும் குமராட்சி வட்டாரங்கள், புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, திருவரங்குளம், மற்றும் கறம்பக்குடி வட்டாரங்கள், பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. இந்த சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பு என்ற பெயரில் ஒரு அதிகார அமைப்பு இருத்தல் வேண்டும் என்ற அடிப்படையில் முதல்வரை தலைவராகவும், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அரசு செயலாளர்கள் உள்ளிட்ட 24 பேர் கொண்ட அதிகார அமைப்பு ஒன்று உருவாக்கப்படுகிறது. அதே போல் இந்த அதிகார அமைப்புக்கு உதவுவதற்காக மாவட்ட அளவில் ஒரு குழு இருக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட கலெக்டர் தலைமையில் 13 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்படுகிறது. இதில் மாவட்ட கலெக்டரால் பரிந்துரை செய்யப்பட்ட 2 விவசாயிகளின் பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள். வேளாண்மையின் நிலையான வளர்ச்சிக்கு இருக்கிற வேளாண் நிலங்களை பயன்படுத்தவும், மற்றும் வேளாண் அற்ற பயன்பாடு அல்லது பிற வளர்ச்சி தேவையற்ற முறையில் வேளாண் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதில்லை என இந்த சட்ட முன்வடிவு தெரிவித்துள்ளது. மேலும் பயிர் மற்றும் பண்கைளின் உற்பத்தி, உற்பத்தி திறனை அதிகரிக்கும் தொழில்நுட்பங்களை மேம்படுத்தி ஒருங்கிணைந்த வேளாண்மை மற்றும் மேம்பட்ட சாகுபடி முறைகள் மூலம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை மேம்படுத்தவும், வேளாண் துறையில் வெள்ளநீர் மேலாண்மை, பிற இடுபொருட்கள் உள்ளடங்கலான நீரின் உகந்த பயன்பாட்டின் வளர்ச்சிக்காவும் நிலையான வேளாண் மேம்பாட்டிற்காக வேளாண் சார்ந்த மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்களை மேம்படுத்தவும், வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் திறன் மேம்பாடு உள்ளிட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வளர்ச்சிக்காகவும் இந்த சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல சட்டத்தை செயல்படுத்துவதற்காக வருவாய் கோட்டாட்சியர் பதவிக்கு குறையாத எந்தவொரு அலுவலரும், இதுதொடர்பாக அரசால் அதிகாரம் அளிக்கப்பட்ட எவரும் அல்லது துணை கண்காணிப்பாளர் பதவிக்கு குறையாத காவல் அலுவலர் எவரும் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலத்தில் சட்டத்தின் வரைமுறைகளுக்கு முரணான சட்டத்தின் வகை முறைகளில் இணக்கத்தை உறுதி செய்யும் நோக்கில் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது என நம்புவதற்கான காரணத்தை கொண்டிருந்தால் அவர் எந்தவொரு வளாகத்திலும் நுழைந்து தேடலாம். மற்றும் அத்தகைய செயலுக்காக பயன்படுத்தியதாக கருதப்படும் எந்த ஒரு பொருள், இயந்திரங்கள், உபகணரங்கள் போன்றவற்றையும் கைப்பற்றலாம். மற்றும் அத்தகைய கைப்பற்றுதல் தொடர்பான ஒரு அறிக்கையை நடவடிக்கை தொடங்கப்பட்டிருந்தாலும், இல்லாவிட்டாலும் அத்தகைய கைப்பற்றுகை செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் அந்த பகுதியின் அதிகார வரம்பை கொண்டுள்ள மாவட்ட அளவிலான குழுவிற்கு அறிவிப்பு செய்ய வேண்டும். இந்த சட்டத்தின் கீழ் செய்யப்படும் அனைத்து தேடுதல்களும் 1972-ம் ஆண்டு குற்றவியல் நடைமுறை தொகுப்பு சட்டத்தின் வரைமுறைகளுக்கு இணைங்கிய வகையில் செயல்படுத்தப்பட வேண்டும். கைப்பற்றுகை தொடர்பான அறிக்கை பெறப்பட்ட பின் மாவட்ட அளவிலான குழுவானது பொருத்தம் என கருதினால் கைப்பற்றுதல் செய்த பொருட்களை பறிமுதல் செய்ய ஆணையிடலாம். இச்சட்டத்தை மீறுபவர்களுக்கு குறைந்தபட்சம் 6 மாதம் முதல் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், குறைந்த பட்சம் ரூ. 10 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.50 லட்சம் வரை அபராதமும், தொடர்ச்சியான அத்துமீறல் ஈடுபடுபவர்களுக்கு ஒவ்வொரு நாளும் ரூ. 50 ஆயிரம் கூடுதல் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அந்த சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த இந்த சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் ஒரு மனதாக தமிழக சட்டசபையில் நிறைவேறியது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெல்லையில் உற்சாக வரவேற்பு
20 Dec 2025சென்னை, 2 நாள் பயணமாக நெல்லை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
-
எங்களிடம் இருப்பது மக்கள் சக்தி விஜய் மீது அமைச்சர் ரகுபதி விமர்சனம்
20 Dec 2025சென்னை, ஆறு மாதம் நடித்துவிட்டு முதல்வராவது எல்லாம் சினிமாவில் நடக்கும், அரசியலில் உண்மையில் நடக்காது என விஜய்யை விமர்சித்துள்ள அமைச்சர் ரகுபதி, நாங்கள் தீய சக்தி இல்லை
-
கீழடி, நம் தாய்மடி - பொருநை, தமிழரின் பெருமை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு பெருமிதம்
20 Dec 2025சென்னை, நம்முடைய பெருமையையும் வரலாற்றையும் நாம் முதலில் தெரிந்து கொண்டால் தான், உலகத்திற்கு அதை எடுத்துச் சொல்ல முடியும் என மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையில் 62 கோடி ரூபாய் மதிப்பிலான பொருநை அருங்காட்சியகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
20 Dec 2025நெல்லை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையில் ரூ.62 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை நேற்று திறந்து வைத்து பார்வையிட
-
தமிழருவி மணியன் கட்சி த.மா.கா.வில் இணைந்தது
20 Dec 2025சென்னை, தமிழருவி மணியன் தனது கட்சியை ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைத்தார்.
-
தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்திற்கு இடமே இல்லை: அமைச்சர் சேகர்பாபு
20 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கின்ற வரையில் தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்திற்கு இடமே இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
அப்டேட் இல்லாமல் இருக்கிறார்: விஜய் மீது அமைச்சர் விமர்சனம்
20 Dec 2025திருச்சி, த.வெ.க. தலைவர் விஜய் அப்டேட் இல்லாமல் இருக்கிறார் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
-
தெலுங்கானாவில் 41 மாவோயிஸ்டுகள் சரண்
20 Dec 2025ஐதராபாத், தெலுங்கானாவில் 41 மாவோயிஸ்டுகள் போலீசில் சரண் அடைந்தனர்.
-
தமிழகம் மதநல்லிணத்துக்கு எடுத்துகாட்டான மாநிலம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
20 Dec 2025நாகப்பட்டினம், சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.
-
மேற்கு வங்கத்தில் பா.ஜ.வுக்கு வாய்ப்பு ஒன்றை தாருங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்
20 Dec 2025கொல்கத்தா, பீகார் தேர்தல் முடிவுகள் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. கூட்டணி வெற்றிக்கான கதவுகளைத் திறந்து விட்டுள்ளன என்று பிரதமர் மோடி கூறினார்.
-
கலைஞர் பொற்கிழி விருதுகள் அறிவிப்பு
20 Dec 2025சென்னை, கலைஞர் பொற்கிழி விருதுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
ஸ்ரீனிவாசன் நல்ல நண்பர்: நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
20 Dec 2025சென்னை, ஸ்ரீனிவாசன் எனது நல்ல நண்பர் என்று நடிகர் ரஜினிகாந்த் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
அசாமில் ரயில் மோதி 8 யானைகள் பலி
20 Dec 2025கவுகாத்தி, அசாமில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 8 யானைகள் உயிரிழந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
எஸ்.ஐ.ஆர்-க்கு பிறகு குஜராத்தில் 73.73 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
20 Dec 2025ஆமதாபாத், எஸ்.ஐ.ஆர்-க்கு பிறகு குஜராத் மாநிலத்தில் 73.73 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
-
நாகூர் இ.எம்.ஹனீபா நினைவு மலர்: துணை முதல்வர் உதயநிதி வெளியிட்டார்
20 Dec 2025சென்னை, நாகூர் இ.எம்.ஹனீபா நூற்றாண்டு நினைவு மலரை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.
-
பொங்கல் பண்டிகைக்கு பிறகு த.வெ.க.வை பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன்
20 Dec 2025கோவை, பொங்கலுக்குப் பிறகு எங்களை பார்த்து நாடே வியக்கும் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க. நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை
20 Dec 2025சென்னை, த.வெ.க. நிர்வாகிகளுடன் விஜய் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
-
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் 4 பேர் நீக்கம்
20 Dec 2025சென்னை, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் நான்கு பேரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
தமிழில் பேச முடிந்தவரை முயற்சி செய்கிறேன்: கவர்னர் ஆர்.என்.ரவி
20 Dec 2025சென்னை, தமிழில் பேச முடிந்தவரை முயற்சி செய்கிறேன் என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
-
டி-20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இஷான், ரிங்கு சிங், சஞ்சு சாம்சன்
20 Dec 2025மும்பை, 10-வது டி-20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இஷான், ரிங்கு சிங், சாம்சனுக்கு இடம் கிடைத்துள்ளது. இதில் சுப்மன் கில்லுக்கு அணியில் இடம் பெறவில்லை.
-
கடும் பனிமூட்டம் எதிரொலி: தரையிறங்க முடியாமல் கொல்கத்தா திரும்பிய பிரதமரின் ஹெலிகாப்டர்
20 Dec 2025கொல்கத்தா, கடும் பனிமூட்டம் காரணமாக தரையிறங்க முடியாமல் பிரதமர் ஹெலிகாப்டர் கொல்கத்தாவுக்கே மீண்டும் திரும்பியது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-12-2025.
21 Dec 2025 -
சென்னையில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் திடீர் தீ விபத்து: தொலை தொடர்பு சேவை பாதிப்பு
20 Dec 2025சென்னை, சென்னையில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் தீ விபத்து எதிரொலியால் 108 ஆம்புலன்ஸ் சேவை பாதிக்கப்பட்டது. மேலும் தொலை தொடர்பு சேவை வெகுவாக பாதிக்கப்பட்டது.
-
எஸ்.ஐ.ஆர். பணி எதிரொலி: தமிழகத்தில் 11 ஆண்டுகள் பின்நோக்கி சென்ற வாக்காளர்களின் எண்ணிக்கை
20 Dec 2025சென்னை, எஸ்.ஐ.ஆர். பணியால் தமிழகத்தில் 11 ஆண்டுகள் மீண்டும் வாக்காளர்கள் எண்ணிக்கை பின்நோக்கி சென்றுள்ளது.
-
ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் இணைப்பு கட்டாயம்: ஜனவரி 12-ம் தேதி முதல் அமல்
20 Dec 2025சென்னை, ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் இணைப்பு கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 12-ம் தேதி முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.



