முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக இரானி கோப்பை உள்ளிட்ட உள்ளூர் போட்டிகள் நிறுத்தம்: பி.சி.சி.ஐ.

சனிக்கிழமை, 14 மார்ச் 2020      விளையாட்டு
Image Unavailable

புது டெல்லி : கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை காரணமாக இரானி கோப்பை உள்ளிட்ட உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இந்த வைரசால் 84-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகரான டெல்லியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மிகப்பெரிய அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மக்கள் அதிக அளவில் கூடும் நிகழ்ச்சிகளை ரத்துசெய்ய வேண்டும் என உலக சுகாதார மையம் அறிவுரை வழங்கியுள்ளது. இதை இந்திய அரசும், மாநில அரசுகளும் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளன. இதனால் திரையரங்குகள், நீச்சல் குளங்கள் போன்றவற்றை டெல்லி அரசு மூடியது. தொடர்ந்து  டெல்லியில் நடைபெற இருந்த ஐ.பி.எல். போட்டிகளுக்கும் அனுமதி அளிக்க இயலாது என தெரிவித்தது. இதற்கிடையே, மார்ச் 29-ம் தேதி தொடங்க இருந்த ஐ.பி.எல். 2020 சீசன் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை காரணமாக ஏப்ரல் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. தெரிவித்தது. இந்நிலையில், கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை காரணமாக இரானி கோப்பை உள்ளிட்ட உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து