முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யாருக்கும் சொல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து டோனி ஓய்வு பெற்று விடுவார்: கவாஸ்கர் கருத்து

சனிக்கிழமை, 21 மார்ச் 2020      விளையாட்டு
Image Unavailable

மும்பை : டோனி பொதுவாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை மதிக்க மாட்டார், ஆனால் ஊடகங்களை அவர் அவ்வளவாக மதித்ததில்லை. இந்நிலையில் எந்த ஒரு அறிவிப்பும் இன்றி சைலண்ட் ஆக அவர் ஓய்வு பெறுவார் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்தார். தைனிக் ஜாக்ரன் என்ற பத்திரிகைக்கு கவாஸ்கர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் டோனி இருப்பதையே நான் விரும்புகிறேன். ஆனால் இது நடக்கும் என்று எனக்கு நம்பிக்கையில்லை. அணி நகர்ந்து விட்டது. டோனியும் பெரிய அறிவிப்புகளை வெளியிடுபவர் இல்லை. எனவே நான் நினைக்கிறேன் அவர் அமைதியாக அறிவிப்பில்லாமல் ஓய்வு பெறுவார் என்று. இவ்வாறு கவாஸ்கர் கூறினார். கவாஸ்கர் கூறுவதுதான் சரி போல் தோன்றுகிறது. அவர் பெரிய அறிவிப்பில்லாமல்தான் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார், அதன் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பு எதையும் அவர் அது தொடர்பாக மேற்கொள்ளவில்லை. ஆனால் பி.சி.சி.ஐ. தொடர்ந்து டோனி ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நன்றாக ஆடினால் மீண்டும் அணிக்குத் திரும்பலாம் என்ற ஹேஷ்யங்களை வெளியிட்டு வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து