முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனாவுக்கு சுகாதார காப்பீடு திட்டத்தில் இலவச சோதனை சிகிச்சை: மத்திய அரசு அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 5 ஏப்ரல் 2020      இந்தியா
Image Unavailable

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக தனியார் பரிசோதனை கூடங்களில் பரிசோதனையையும், அரசு அறிவித்துள்ள சிறப்பு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையையும் அரசு சுகாதார காப்பீடு திட்டத்தில் இலவசமாக பெறலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்தியில் அமைந்துள்ள பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசானது, ஏழை, எளியோருக்கும், நலிவடைந்த பிரிவினருக்கும் ‘ஆயுஷ்மான் பாரத் ஜன் ஆரோக்கிய யோஜனா’ என்ற சுகாதார காப்பீடு திட்டத்தை நிறைவேற்றி வருகிறது.இந்த திட்டத்தில் சேர்ந்து, பலன் அடைந்து வருகிறவர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக தனியார் பரிசோதனை கூடங்களில் பரிசோதனையையும், அரசு அறிவித்துள்ள சிறப்பு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையையும் இலவசமாக பெறலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதையொட்டி தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா வைரசுக்கான பரிசோதனையும், சிகிச்சையும் அரசு துறையில் இலவசமாக கிடைக்கிறது. இப்போது சுகாதார காப்பீடு திட்டத்தின் கீழ் பலன் பெறுகிற 50 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசுக்கு தனியார் பரிசோதனைக் கூடங்களில் இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம். அரசு அறிவித்துள்ள சிறப்பு தனியார் ஆஸ்பத்திரிகளில் இலவச சிகிச்சையும் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

மேலும் இது பற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்சவர்தன் கூறும் போது, முன் எப்போதும் இல்லாத வகையில் கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், தனியார் துறையை மிக முக்கிய பங்காளியாகவும், கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்குதாரராகவும் தீவிரமாக ஈடுபடுத்த உள்ளோம் என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து