முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி பரிசோதனை தொடங்குகிறது

செவ்வாய்க்கிழமை, 2 ஜூன் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

மாஸ்கோ : ரஷ்யாவில் இந்த மாதம் கொரோனா தடுப்பூசி பரிசோதனை தொடங்கும் என ரஷ்ய தொழில், வர்த்தக அமைச்சர் டெனிஸ் மாண்டுரோவ் தெரிவித்தார்.

உலகை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடித்து பரிசோதனைகள் முடித்து சந்தைக்கு கொண்டு வருவதில் பல நாடுகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. அந்த வகையில் ரஷ்யாவில் உள்ள பிரபல மருந்து நிறுவனங்களான பயோகாட் மற்றும் ஜெனிரியம் ஆகியவை கூட்டாக தடுப்பூசிகளை உருவாக்கி உள்ளன. இந்த தடுப்பூசிகளை பரிசோதிப்பது இந்த மாதம் தொடங்கி விடும்.

இந்த தகவலை மாஸ்கோவில் நேற்று முன்தினம் கொரோனா வைரஸ் தொற்று பதிலளிப்பு கவுன்சில் கூட்டத்தில் ரஷ்ய தொழில், வர்த்தக அமைச்சர் டெனிஸ் மாண்டுரோவ் கலந்து கொண்டு பேசும்போது தெரிவித்தார். இது அங்கு பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து