முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேசத்தில் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

வியாழக்கிழமை, 2 ஜூலை 2020      உலகம்
Image Unavailable

ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஆகஸ்டு 3-ம் தேதி வரை நீட்டித்து வங்காளதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்திலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அங்கு இதுவரை ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 483 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆயிரத்து 847 பேர் உயிரிழந்துள்ளனர். நோய் தொற்றை குறைப்பதற்காக கொண்டு வரப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடந்த செவ்வாயன்று நிறைவடைந்தது. இதனையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஆகஸ்டு 3-ம் தேதி வரை நீட்டித்து வங்காளதேச அரசு உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி பொதுமக்கள் மருத்துவ தேவைகளை தவிர இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை வெளியில் நடமாட அனுமதி இல்லை. முககவசம் அணிதல், சமூகஇடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற கட்டுப்பாடுகளை பொதுஇடங்களில் கடைப்பிடிக்க வேண்டும். தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. மார்க்கெட்டுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் இரவு 7 மணிக்குள் மூடப்பட வேண்டும் என்றும், கல்வி நிறுவனங்கள் திறக்க அனுமதி இல்லை என்றும் அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து