முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமித்ஷா, கவர்னர் பன்வாரிலால் விரைவில் குணமடைய முதல்வர் எடப்பாடி வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 2 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கவர்னர் பன்வாரிலால் புரோகித்  விரைவில் நலம்பெற வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு அறிகுறி இருந்த நிலையில் மருத்துவ பரிசோதனையில் கொரோனா உறுதியாகி உள்ளது. இந்த தகவலை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் நலம்பெற வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தனது டுவிட்டரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது, 

கொரோனா தொற்றில் இருந்து அமித்ஷா விரைவில் குணமடைய சர்வ வல்லமையுள்ள கடவுளை பிராத்திக்கிறேன். அவரது நல்ல ஆரோக்கியத்திற்கு தமிழ்நாட்டிலிருந்து வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இதே போல் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து