முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று முதல் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு

புதன்கிழமை, 5 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அமராவதி அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

 

திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள வேளாண் பெருமக்கள் அமராவதி அணையிலிருந்து, குடிநீர் மற்றும் பாசனப் பகுதியில் நிலையில் உள்ள பயிர்களைக் காப்பாற்றும் பொருட்டு, தண்ணீர் வழங்குமாறு  ஏற்று, அமராவதி அணையிலிருந்து ஆற்று மதகு வழியாக கரூர் நகரம் வரை  குடிநீர் தேவை மற்றும் 18 பழைய வாய்க்கால்களுக்கு உட்பட்ட ஆயக்கட்டுப் பகுதிகளில் நிலையில் உள்ள பயிர்களைக் காப்பாற்றும் பொருட்டு 06.08.2020 முதல் 16.08.2020 வரை 11 நாட்களுக்கு 1210 மி.க.அடி தண்ணீர் மற்றும் அமராவதி பிரதானக் கால்வாய் வழியாக புதிய ஆயக்கட்டுப் பகுதிகளில் குடிநீர் மற்றும் நிலையில் உள்ள பயிர்களைக் காப்பாற்றும் பொருட்டு,  06.08.2020 முதல் 20.08.2020 வரை 15 நாட்களுக்கு, 570 மி.க.அடி தண்ணீர், மொத்தம் 1780 மி.க.அடி தண்ணீரை திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன். பொதுமக்கள் மற்றும் வேளாண் பெருமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து