முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மருத்துவக் கலந்தாய்வு இன்று தொடக்கம்

திங்கட்கிழமை, 26 அக்டோபர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு இன்று (அக்.27-ம் தேதி) ஆன்லைனில் தொடங்குகிறது.

நாடுமுழுவதும் அரசு மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீத எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன.

தமிழகத்தில் உள்ள 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,650 எம்.பி.பி.எஸ் இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 பி.டி.எஸ் இடங்கள் உள்ளன.

இதில் 15 சதவீதமான 547 எம்.பி.பி.எஸ் இடங்கள் மற்றும் 15 பி.டி.எஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு கொடுக்கப்படுகிறது. இந்த இடங்கள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் இடங்களுக்கு 2020-21 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை டி.ஜி.எச்.எஸ். www.mcc.nic.in என்ற இணையதளத்தில் நடத்த உள்ளது.

நீட் தேர்வில் முதல்கட்டக் கலந்தாய்வுக்குத் தகுதிபெற்ற மாணவ, மாணவிகள் இணையதளத்தில், இன்று முதல் நவ. 2-ம் தேதி மாலை 5 மணி வரை பதிவு செய்து, கல்லூரிகளைத் தேர்வு செய்யலாம். .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து