முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விலை கிடுகிடு உயர்வு : மின்சார ஸ்கூட்டரில் சென்ற மம்தா

வியாழக்கிழமை, 25 பெப்ரவரி 2021      இந்தியா
Image Unavailable

பிப்.26 பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்வை கண்டித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மின்சார வாகனத்தில் பயணம் மேற்கொண்டார்

நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து அம்மாநில முதல்வரும் திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி ஆர்பாட்டம் நடத்தினார். பெட்ரோல் விலையுயர்வைக் கண்டிக்கும் வகையில் மம்தா பானர்ஜி பேட்டரி பொருத்தப்பட்ட மின்சார இரு சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலை இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளது. பிரதமர் மோடி அரசின் செயல்பாடு இது தான். இது மக்களை வஞ்சிக்கும் அரசு. மோடி அரசு நாட்டில் உள்ள அனைத்தையும் விற்பனை செய்கிறது. பி.எஸ்.என்.எல்., முதல் நிலக்கரி வரை நாட்டில் உள்ள அனைத்தும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த அரசு இளைஞர்களுக்கு எதிரானது, விவசாயிகளுக்கு எதிரானது, மக்களுக்கு எதிரானது. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து