முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லையில் அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக ராகுல்காந்தி மீது புகார்

திங்கட்கிழமை, 1 மார்ச் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

நெல்லை : நெல்லை டவுன் பகுதியில் அனுமதியின்றி பிரசாரம் மேற்கொண்டதாக ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., தமிழகத்தில் தனது 3-வது கட்ட பிரசாரத்தை தென் மாவட்டங்களில் தொடங்கினார். பின்னர் நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

இதனை தொடர்ந்து நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரியில் பேராசிரியர்களுடன் நடந்த கலந்துரையாரல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் நெல்லை டவுண் பகுதியில் உள்ள புகழ்பெற்ற நெல்லையப்பர் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து தென்காசி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் நெல்லை டவுன் பகுதியில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி அனுமதியின்றி பிரசாரம் மேற்கொண்டதாக துணை வட்டாட்சியர் விஜயா புகார் தெரிவித்துள்ளார். மேலும் நெல்லை மாநகர காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து