முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பாதிப்பு; நேபாள முன்னாள் அரசர், அரசிக்கு சிகிச்சை

ஞாயிற்றுக்கிழமை, 25 ஏப்ரல் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

காத்மண்டு : நேபாள நாட்டு முன்னாள் அரசர் மற்றும் அரசி கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர்.

நேபாள நாட்டின் முன்னாள் அரசர் ஞானேந்திர ஷா.  அந்நாட்டின் முன்னாள் அரசி கோமல் ஷா.  இவர்களுடைய மகள் பிரேரணா ஷா.  கடந்த சில நாட்களுக்கு முன் அரசர் மற்றும் அரசிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 

இந்த நிலையில், தனிமைப்படுத்தி கொண்ட அவர்கள் காத்மண்டுவில் உள்ள நார்விக் சர்வதேச மருத்துவமனையில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) மதியம் ஒரு மணியளவில் தங்களுடைய மகளுடன் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். 

இதில் அவர்கள் 3 பேரின் உடல்நலம் சீராக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம்  அறிக்கை வெளியிட்டுள்ளது.  இந்தியாவுக்கு புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய நிலையில், முன்னாள் அரசருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து