முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் 551 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி: விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்

ஞாயிற்றுக்கிழமை, 25 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 551 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க பிரதமர் மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறை மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. 

அவ்வகையில், நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 551 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க பிரதமர் மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த ஆலைகளை மிக விரைவில் செயல்படச் செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மருத்துவ தேவைக்காக இந்த ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு பி.எம். கேர்ஸ் நிதியில் இருந்து நிதி வழங்கப்படும் என்றும் அவர் கூறி உள்ளார். 

மருத்துவமனைகளுக்கு தங்கு தடையற்ற ஆக்சிஜன் விநியோகத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இந்த ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்படும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து