முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.258 கோடிக்கு மது விற்பனை: சென்னையில் அதிகபட்சம்

ஞாயிற்றுக்கிழமை, 25 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.258 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ.58.37 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.  

தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை காரணமாக கொரோனா தொற்றின் பரவும் வேகம் அதிகரித்துள்ளது. இதனால், தமிழக அரசு இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ஆகியவற்றை அறிவித்துள்ளது. 

நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு மார்ச் 25-ம் தேதி சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. எனினும், கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், கடந்த  20-ம் தேதி முதல் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

அதன்படி தற்போது, இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முழு ஊரடங்கை தொடர்ந்து, நேற்று முன்தினம் தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.252 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக நேற்று முன்தினம் மது விற்பனை உச்சத்தில் இருந்தது. மதுரை மண்டலத்தில் ரூ. 49.43 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.48.47 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ.48.32 கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ.47.43 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து