எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சாலைகள் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. இந்த முழு ஊரடங்கால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி விட்டனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு கடந்த 18-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் 20-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன்படி கடந்த 5 நாட்களாக இரவு 10 மணியளவில் இருந்து அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு கண்டிப்புடன் கடைபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதன் காரணமாக சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும், கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள் உள்ளிட்டவை மாநிலம் முழுவதும் திறக்கப்படவில்லை. எப்போதும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலையிலேயே மீன் மார்க்கெட்டுகளிலும், இறைச்சி கடைகளிலும் கூட்டம் அலைமோதும். நேற்று இந்த கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்ததால் மீன் மார்க்கெட் பகுதிகள் மற்றும் இறைச்சி கடைகள் ஆகியவை ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
பெரிய ஜவுளிக்கடைகள் மற்றும் சிறிய கடைகள் ஆகியவற்றில் ஞாயிற்றுக் கிழமைகளில் மக்கள் துணி எடுப்பதற்கு அலை மோதுவார்கள். இதனால் இந்த கடைகள் அனைத்தும் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணிக்கே திறக்கப்பட்டு இருக்கும். நேற்று முழு ஊரடங்கால் ஜவுளிக் கடைகள், பாத்திரக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடிக்கிடந்தன. இதேபோன்று செல்போன் கடைகள், ஹார்டுவேர்ஸ் மற்றும் பெயிண்டு கடைகள் உள்ளிட்டவையும் மூடப்பட்டு இருந்தன.
தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மளிகைக் கடைகள் மற்றும் டீக்கடைகளும் நேற்று திறக்கப்படவில்லை. மளிகை மற்றும் டீக்கடைகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை நேரத்தில் எப்போதும் வியாபாரம் சூடுபிடிக்கும். நேற்று கடைகள் மூடப்பட்டு இருந்ததால் அந்த காட்சிகளை காண முடியவில்லை.
ஞாயிற்றுக்கிழமைகளில் தி.நகர், பாரிமுனை, புரசைவாக்கம், மூலக்கடை, மாதவரம், செங்குன்றம், அரும்பாக்கம், கோயம்பேடு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையோரமாக பலர் கடைகளை போட்டு வியாபாரம் செய்வது வழக்கம். இந்த கடைகளில் பூக்கள், காய்கறிகள், மீன், கருவாடு உள்ளிட்ட உணவு வகைகளும் அதிகளவில் விற்பனையாகும். நேற்று அது போன்று எந்த கடைகளையும் காண முடியவில்லை.
தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும்பாலான இடங்களில் வாரச்சந்தைகள் நடைபெறுவது உண்டு. ஆடு, நாட்டுக்கோழி வியாபாரம் அந்த சந்தைகளில் களை கட்டும். செங்குன்றம் பகுதியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சாலையோரமாக சேவல், கோழிகளை பலர் விற்பனைக்காக வைத்திருப்பார்கள். நாட்டுக்கோழி முட்டை வியாபாரமும் அதிகமாக நடைபெறும். நேற்று இது போன்ற வியாபாரிகளை காணவில்லை.
சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் வணிக வளாகங்கள் மற்றும் மால்கள் ஆகியவற்றில் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவு கூடுவார்கள். தியேட்டர்களுடன் கூடிய மால்களில் திருவிழா போன்று கூட்டம் காணப்படும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை கழிக்க குடும்பத்தோடு மால்களுக்கு செல்வார்கள். தியேட்டர்களில் படம் பார்த்து விட்டு அங்குள்ள ஓட்டல்களில் சாப்பிட்டு விட்டு வீடு திரும்புவது வழக்கம். நேற்று இந்த மால்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன.
சென்னையில் அமைந்தகரை ஸ்கைவாக், ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ, அண்ணாசாலை ஸ்பென்சர் பிளாசா, வேளச்சேரி பீனிக்ஸ் மால் உள்ளிட்ட அனைத்து மால்களும் நேற்று மூடப்பட்டு இருந்தது. காவலர்கள் மட்டுமே இந்த மால்களில் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இது தவிர சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் தியேட்டர்களும் மூடப்பட்டு இருந்தன. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமைக்கு தேவையான இறைச்சி, மீன் உள்ளிட்டவைகளை நேற்றே வாங்கி வைத்துக் கொண்ட பொதுமக்கள் நேற்று வெளியில் வரவில்லை. வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருந்தனர். அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வெளியில் வர வேண்டும் என்றும் தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்ததால் அதற்கு பயந்து மக்கள் வெளியில் வரவில்லை.
முழு ஊரடங்கின்போது அத்தியாவசிய பணிகளுக்கான வாகனங்கள் செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி பால் வண்டிகள், மருத்துவமனை வாகனங்கள், அமரர் ஊர்திகள் மற்றும் ஆம்புலன்ஸ் வண்டிகள் வழக்கம் போல் செயல்பட்டன. மருந்து கடைகள், ஆஸ்பத்திரிகள் ஆகியவை எப்போதும் போல செயல்பட்டன.
திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் வரை பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்ததால் மாநிலம் முழுவதும் திருமண நிகழ்ச்சிகளும் தடையின்றி நடைபெற்றன. சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் முழு ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்களை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
சென்னையில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. 500 வாகனங்களில் போலீசார் ரோந்து சுற்றி கண்காணித்தனர். சென்னை மாநகர் முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் காவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
முழு ஊரடங்கை மீறி வெளியில் வந்த கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை தடுத்து நிறுத்திய போலீசார் அதில் வந்தவர்களை எங்கு செல்கிறீர்கள் என்று விசாரித்தனர். அப்போது உரிய காரணங்களை தெரிவிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு சென்றவர்கள் அழைப்பிதழ்களை காட்டிய பிறகே அனுமதிக்கப்பட்டனர். தேவையில்லாமல் சுற்றியவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன்ப்ரை2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்6 days 18 hours ago |
மினி பான் கேக்1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-05-2024.
10 May 2024 -
குஜராத்தில் சர்ச்சைக்குள்ளான வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு நடக்கிறது
10 May 2024ஆமதாபாத் : குஜராத்தில் நேரலை ஒளிபரப்பால் சர்ச்சைக்குள்ளான வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
-
காங்கிரஸ் தலைவர் மர்ம மரணம்: ஜெயக்குமார் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் கத்தி மீட்பு
10 May 2024நெல்லை : காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் இறந்து கிடந்த தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து கத்தி ஒன்றை தடயவியல் நிபுணர்கள் மீட்டு சோதனை நடத்தி வருகின்றனர்.
-
கலவரத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது: இம்ரான் கான் அறிவிப்பு
10 May 2024இஸ்லாமாபாத் : கடந்த ஆண்டு மே 9-ம் தேதி நடந்த கலவர சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று இம்ரான்கான் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
23 வகை நாய்களுக்கு தடை விதித்த உத்தரவு வாபஸ் : தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை அறிவிப்பு
10 May 2024சென்னை : :23 வகையான நாய் இனங்களை வளர்க்க தடை விதித்த உத்தரவை தமிழக கால்நடை பராமரிப்பு துறை திரும்ப பெற்றுள்ளது.
-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
10 May 2024சென்னை : கல்வி எனும் அறிவாயுதம் உங்களுக்கு துணையாக அமையட்டும் என்று எஸ்.எஸ்.எல்.சி.
-
தெலுங்கானாவில் அரசு பஸ்சில் பயணம் செய்த ராகுல் காந்தி
10 May 2024ஐதராபாத் : தெலுங்கானாவில் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி அங்கு அரசு பஸ்சில் பயணம் செய்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள திட்டங்கள் குறித்து எடுத்து க
-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற இரண்டு மாணவிகள்
10 May 2024கமுதி : பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 500-க்கு 499 மதிப்பென் எடுத்து கமுதி மற்றும் திண்டுக்கல் மாணவிகள் 2 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர்.
-
இந்திய மக்களவை தேர்தலில் நாங்கள் தலையிடவில்லை : ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு
10 May 2024வாஷிங்டன் : நாங்கள் இந்திய மக்களவைத் தேர்தலில் தலையிடவில்லை என்று ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது.
-
அனைத்து அனுமதிகளையும் பெற்ற பிறகே வள்ளலார் சர்வதேச மையம் : உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு உறுதி
10 May 2024சென்னை : வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அனைத்து அனுமதிகளையும் பெற்ற பிறகே கட்டப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
-
சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புதிய வழக்குப்பதிவு
10 May 2024சென்னை : கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து அவதூறு பரப்பியதாக சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புதிய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
யானை வழித்தட வரைவு அறிக்கை: தமிழக அரசுக்கு எடப்பாடி கண்டனம்
10 May 2024சென்னை : யானை வழித்தட வரைவு அறிக்கையை செயல்படுத்த முனைப்பு காட்ட கூடாது என்று அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு
10 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் : நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது சுப்ரீம் கோர்ட்
10 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது சுப்ரீம் கோர்ட்.
-
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: புதுச்சேரியில் 89.14 சதவீதம் தேர்ச்சி
10 May 2024புதுச்சேரி : 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் புதுச்சேரியில் 89.14 சதவீதம் தேர்ச்சி பேர் பெற்றுள்ளனர்.
-
பாராளுமன்ற 4-ம் கட்ட தேர்தல்: 10 மாநிலங்களில் இன்று மாலை ஓய்கிறது பிரசாரம் : இறுதிக்கட்ட பணிகளில் தேர்தல் ஆணையம் மும்மூரம்
10 May 2024புதுடெல்லி : பாராளுமன்ற 4-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட 10 மாநிலங்களில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது.
-
வரும் திங்கட்கிழமை முதல் அரசுப் பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை துவக்கம்
10 May 2024சென்னை : வரும் திங்கட்கிழமை முதல் அரசுப் பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்குகிறது.
-
காலக்கெடுவுக்கு முன்பே இந்திய வீரர்கள் வெளியேறி விட்டனர் : மாலத்தீவு அரசு தகவல்
10 May 2024மாலே : கெடு முடியும் முன்பே மாலத்தீவில் நிலை நிறுத்தப்பட்டு இருந்த இந்திய ராணுவ படைகள் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டதாக அதிபர் முகமது முய்சுவின் செய்தி தொடர்பாளர் தெரிவித
-
செனகல் நாட்டில் ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்த விமானம்
10 May 2024டக்கார் : செனகல் நாட்டில் ஓடுபாதையில் இருந்து திடீரென தவறி விழுந்த விமான விபத்தில் 11 பேருக்கு காயம் ஏற்பட்டது.
-
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 800 கனஅடியாக அதிகரிப்பு
10 May 2024சேலம் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து 800 கனஅடியாக அதிகரித்தது.
-
அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை ஒரே நாளில் 3-வது முறை அதிகரித்தது
10 May 2024சென்னை : அட்சய திருதியை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் தங்கம் விலை 3-வது முறை அதிகரித்து விற்பனையானது.
-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 91.55 சதவீத மாணவர்கள் தேர்ச்சி : அரியலூர் மாவட்டம் முதலிடம் - தமிழ் பாடத்தில் 8 பேர் 100-க்கு 100
10 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் 91.55 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
பாகிஸ்தான் குறித்த மணிசங்கர் ஐயரின் பேச்சு: உடன்பாடு இல்லை என காங்கிரஸ் கட்சி விளக்கம்
10 May 2024புதுடெல்லி : முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மணிசங்கர் ஐயர், பாகிஸ்தான் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
-
ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி தொடங்கியது : கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
10 May 2024ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்காவில் நேற்று மலர் கண்காட்சி தொடங்கியதை தொடர்ந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அதனை கண்டு ரசித்தனர்.
-
சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
10 May 2024சென்னை : திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஏலரப்பட்டி பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற