முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு மாதத்திற்குள் 44 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்படும்: கெஜ்ரிவால்

செவ்வாய்க்கிழமை, 27 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

டெல்லியில் புதிதாக 44 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை உருவாக்கவுள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டிஜிட்டல் முறையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- டெல்லியில் அடுத்த ஒரு மாதத்திற்குள் 44 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை உருவாக்க உள்ளோம்.  அதில் மத்திய அரசு 8 நிலையங்களும், மாநில அரசு 36 நிலையங்களும் உருவாக்க உள்ளது. 21 ஆக்சிஜன் நிலையத்திற்கான உபகரணங்களை பிரான்ஸ் நாட்டிலிருந்தும், 15 ஆக்சிஜன் நிலையத்திற்கான உபகரணங்கள் இந்தியா கம்பெனிகளிடம் வாங்கப்பட உள்ளது. பேங்காங்கில் இருந்து 18 ஆக்சிஜன் டேங்கர்கள் இறக்குமதி செய்யப்படுகின்றது என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து