முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா வருகிறது மேலும் 3 ரபேல் விமானங்கள்

புதன்கிழமை, 5 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பிரான்ஸ் நாட்டிலிருந்து ஆறாவது தவணையாக 3 ரபேல் போா் விமானங்கள் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. 

பிரான்ஸ் நாட்டின் டிசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து 36 அதிநவீன ரபேல் போா் விமானங்களை வாங்க கடந்த 2016-ம் ஆண்டு இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது.

ரூ.59 ஆயிரம் கோடியில் இந்த விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, இதுவரை 18 ரபேல் போா் விமானங்களை அந்த நிறுவனம் இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது.

இப்போது மேலும் 3 விமானங்கள் நேற்று இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விமானங்கள் வந்து சோ்வதன் மூலம், இந்தியா வசம் இருக்கும் அதிநவீன ரபேல் போா் விமானங்களின் எண்ணிக்கை 21-ஆக அதிகரிக்க உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து