எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள முழு ஊரடங்கின் போது தொழிற்துறையினர் மற்றும் வணிகர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளார். அதில் ஆட்டோ-ரிக்ஷா மற்றும் கால்டேக்ஸி கள் சாலைவரி கட்டணங்கள் செலுத்த 3 மாதங்கள் அவகாசத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பழக்கடைகள் செயல்படவும் அனமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள முழு ஊரடங்கை செயல்படுத்துவது குறித்து தொழில் மற்றும் வணிக சங்க அமைப்புகளுடன் கடந்த 9-5-2021 அன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் கலந்தாலோசனைக் கூட்டம் நடந்தது. அந்தக் கலந்தாலோசனைக் கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் பின்வரும் முடிவுகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
1. சுயமுதலீட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியம் வழங்க இந்த நிதியாண்டில் முதலீட்டு மானியத்திற்கான திட்டமதிப்பீடு ரூ.280 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 60 விழுக்காடு தொகை (ரூ.168 கோடி) நிறுவனங்களுக்கு உடனடியாக விடுவிக்கப்படும். இதன் மூலம் நிலுவையில் உள்ள தகுதியானஅனைத்து நிறுவனங்களுக்கும் மானியம் கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது.
2. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் உதவி பெறும்போது செலுத்தவேண்டிய (MOD) முத்திரைத் தாள் பதிவுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து 31-3-2021 வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது டிசம்பர் 2021 வரை நீட்டிக்கப்படுகிறது. மே 2021 முதல் செப்டம்பர் 2021 வரை காலாவதியாக உள்ள மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்புத் துறை, தொழிலாளர் துறை, தொழில் பாதுகாப்புத் துறை, வணிக உரிமம் உள்ளிட்ட அனைத்து சட்டபூர்வமான உரிமங்கள், டிசம்பர் 2021 வரைநீட்டிக்கப்படுகின்றன.
4. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் விரிவாக்கத்திற்கான முதலீட்டு மானியம் பெறுவதற்கு விற்றுமுதல் 25 விழுக்காடு அதிகரிக்க வேண்டுமென்ற விதிமுறையிலிருந்து ஏற்கெனவே 31-3-2021 வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நீட்டிக்கப்படுகிறது. இது 31-12-2021 வரை 9 மாத காலத்திற்கு நீட்டிக்கப்படுகிறது.
5. கடன் உத்தரவாத நிதிஆதாரத் திட்டம் (CGTMSE) மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டம் (Technology Upgradation Scheme) ஆகிய திட்டங்களின் கீழ் பெறப்பட்ட கடனுக்கான ஐந்து விழுக்காடு பின் முனை வட்டி மானியம் (BEIS) நிறுவனங்களுக்கு உடனடியாக விடுவிக்கப்படும். சிட்கோமனைகள், fast track அடிப்படையில் தொடர்ந்து ஒதுக்கீடு (Plot allotment) செய்யப்படும்.
7. சிட்கோ நிறுவனத்திற்குச் செலுத்தப்பட வேண்டிய மனை விலை, தவணைத் தொகை மற்றும் தொழிற்கூடங்களுக்கான வாடகை போன்றவற்றைச் செலுத்துவதற்கு, மேலும் ஆறு மாதகால அவகாசம் நீட்டிப்பு செய்யப்படுகிறது.
8. அனைத்து மாவட்டங்களிலுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில், சிட்கோ தொழிற்பேட்டைகள், தொழிற் கூட்டுறவு சங்கங்கள் உள்பட பணிபுரியும் 45 வயதிற்கு மேற்பட்ட சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் இடத்திலேயே கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்து, போடப்பட்டுள்ளது. தகுதியுடையஅனைவருக்கும் சிறப்புமுகாம்மூலம் கொரோனா தடுப்பூசி போட தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
9. ஆட்டோ ரிக்ஷா மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களின் கோரிக்கை மற்றும் நலன்களைக் கருத்தில் கொண்டு ஆட்டோ ரிக்ஷா மற்றும் டாக்சி ஆகியவற்றுக்கான சாலைவரி கட்டணங்கள் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு செய்து கட்ட அவகாசம் வழங்கப்படுகிறது.
10. சிறு குறு தொழில் நிறுவனங்கள், ஆட்டோ ரிக்ஷா, கால்டாக்சி, வாகனம் வைத்திருப்போர் வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய மாதாந்திர தவணைத் தொகையை (EMI) கட்டுவதற்கும் காலநீட்டிப்பு வழங்குவது குறித்து ஒன்றிய அரசு மற்றும் மத்திய ரிசர்வ் வங்கி (RBI) வலியுறுத்தப்படும்.
11. மே 2021ல் காலாவதியாகும் ஆட்டோ ரிக்ஷா, கால்டாக்சி போன்ற வாகனங்களுக்கான காப்பீட்டுக் கட்டணத் தொகையை (Insurance Premium) செலுத்துவதற்குக் காலநீட்டிப்பு வழங்கக் கோரி மத்திய அரசும், IRDA அமைப்பும் வலியுறுத்தப்படும்.
12. மே 2021 மாதத்தில் காலாவதியாகும் தீயணைப்புத் துறை, தொழில்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை ஆகியவற்றின் மூலம் பெறப்பட வேண்டிய சட்டரீதியான உரிமங்கள் (Statutory Licenses) மேலும் ஆறு மாத காலத்திற்கு நீட்டிக்க முடிவு செய்யப்படுகிறது. இது குறித்து, உரிய ஆணைகள் வெளியிட சம்பந்தப்பட்ட துறைகள் இது குறித்து மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
13. தொழில்துறை மூலம் வழங்கப்படும் மூலதனமானியம் (Capital Subsidy) மூன்று தவணைகளாக வழங்குவதற்குப் பதிலாக, மாநில தொழில் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு, ஒரே தவணையாக, தொழில் வளத்தை கருதி வழங்க முடிவு செய்யப்படுகிறது.
14. பெரிய மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் செலுத்த வேண்டிய தொழில்வரியை செலுத்த மேலும் மூன்று மாதகால அவகாசம் வழங்கப்படுகிறது.
மேற்கூரிய சலுகைகளை அறிவித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் 2 நாளில் வினியோகம் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தகவல்
02 Jan 2026சென்னை, ரேஷன் கார்டு தாரர்களுக்கு இந்த மாதம் வழங்க வேண்டிய சர்க்கரை, அரிசி போன்றவை வந்துவிட்டன.
-
ரஷ்ய பகுதியில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 24 பேர் பலி
02 Jan 2026கீவ், ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் தெற்கு கெர்சன் பிராந்தியத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
-
பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று முக்கிய அறிவிப்பு
02 Jan 2026சென்னை, பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் என்று அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு ஜாக்டோ ஜியோ ந
-
சென்னை வந்த துணை ஜனாதிபதிக்கு துணை முதல்வர் உதயநிதி வரவேற்பு: இன்று வேலூர் பொற்கோவிலுக்கு பயணம்
02 Jan 2026சென்னை, சென்னை வந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை தமிழ்நாடு அரசு சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் வரவேற்றார்.
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழ்நாடு முழுவதும் இன்று சிறப்பு முகாம்
02 Jan 2026சென்னை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகம் முழுவதும் 2-ம் கட்டமாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
-
நாமக்கல்லில் சிறுவன் உயிரிழப்பு: இழப்பீட்டை உயர்த்தி வழங்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
02 Jan 2026சென்னை, நாமக்கல்லில் சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் இழப்பீட்டை உயர்த்தி வழங்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
-
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஜன. 6-ல் புதிய புயல் சின்னம் உருவாகிறது
02 Jan 2026சென்னை, தென்மேற்கு வங்கக்கடலில் வருகிற 6-ம் தேதி அல்லது அந்த வாரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி ஒன்று உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
ஜனவரி 8-ம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடக்கம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்
02 Jan 2026சென்னை, தமிழகத்தில் 2.22 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வரும் 8ம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.
-
சமத்துவ நடைபயணம் என்ற பெயரில் திருச்சியில் வைகோவின் நடைபயணம்: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
02 Jan 2026திருச்சி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-01-2026
02 Jan 2026 -
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் ஜனவரி 19-ல் தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை
02 Jan 2026சென்னை, தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் ஜனவரி 19-ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றிட ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ தி.மு.க.
-
ஆஷஸ் சிட்னி டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணி அறிவிப்பு
02 Jan 2026லண்டன், ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்தின் 12 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுப்பயணம்...
-
மிகப்பெரிய நெட்வொர்க்கான போதைப்பொருளை ஒழிக்க மாநில அரசுகளும், மத்திய அரசும் இணைந்து செயல்பட வேண்டும்: திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
02 Jan 2026சென்னை, போதைப்பொருள் என்பது மிகப்பெரிய நெட்வொர்க்.
-
தி.மு.க. ஆட்சியில் 4.5 ஆண்டுகளில் 3967 கோவில்களுக்கு கும்பாபிஷேகம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
02 Jan 2026நாகர்கோவில், தி.மு.க. ஆட்சியில் 4.5 ஆண்டுகளில் 3967 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
ம.பி.யில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த மேலும் 4 பேர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
02 Jan 2026இந்தூர், மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தூய்மையான நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
-
தஞ்சை பல்கலை. இணையத்தில் நீக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் படத்தை பதிவேற்ற இ.பி.எஸ். வலியுறுத்தல்
02 Jan 2026சென்னை, தஞ்சை தமிழ்ப்பல்கலை இணையதளத்தில் எம்.ஜி.ஆர் பெயர், படம் நீக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர் புகழை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து
-
சென்னையில் 4, 5-ம் தேதிகளில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ரேசன் பொருட்கள் நேரில் விநியோகம்: இல்லம் தேடி சென்று வழங்க உத்தரவு
02 Jan 2026சென்னை, சென்னையில் ஜனவரி 4, 5-ல் 15 மண்டலங்களில், 990 ரேசன் கடைகளின் விற்பனையாளர்கள் ரேசன் பொருட்களை முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீடு தேடி சென்று விநியோகம் செய்ய உத்
-
மனித மூளையில் பொருத்தும் நியூராலிங்க் சிப் உற்பத்தியை அதிகரிக்க எலான் மஸ்க் முடிவு
02 Jan 2026நியூயார்க், மனித மூளையில் பொருத்தும் நியூராலிங்க் சிப் உற்பத்தியை நடப்பு ஆண்டில் (2026) அதிகரிக்க திட்டம் இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
-
நீலகிரியில் கனமழை: உதகை மலை ரயில் சேவை ரத்து
02 Jan 2026நீலகிரி, மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று காலை உதகைக்கு புறப்பட்ட ரயில், மண் சரிவு காரணமாக பாதியிலேயே ரத்து செய்யப்பட்டு திரும்பியது.
-
தமிழகம் வரும் அமித்ஷாவை சந்திக்க இ.பி.எஸ். திட்டம்
02 Jan 2026சென்ன, வருகிற 4-ம் தேதி தமிழகம் வரும் அமித்ஷாவை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
அர்ஜுன் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும்: யுவராஜ் தந்தை யோசனை
02 Jan 2026மும்பை, அர்ஜுன் டெண்டுல்கர் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்று யுவராஜ் தந்தை யோசனை தெரிவித்துள்ளார்.
-
இனி நடைப்பயணம் மேற்கொள்ளக் கூடாது: வைகோவிடம் கோரிக்கை வைத்த முதல்வர் ஸ்டாலின்
02 Jan 2026திருச்சி, மத நல்லிணக்கம், போதைப் பொருள் ஒழிப்பு போன்றவற்றை வலியுறுத்தி, ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ மேற்கொள்ளும் நடைப்பயணத்தின்போது, அவரடம் முதல்வர் மு.க.
-
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 7 லட்சம் பேர் விண்ணப்பம்
02 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர்.
-
முதல்வரின் அறிவிப்பைப் பொருத்து அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
02 Jan 2026சென்னை, முதல்வரின் அறிவிப்பைப் பொருத்து எங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ -ஜியோ கூறியுள்ளது.
-
உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோவில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்
02 Jan 2026கடலூர், சிதம்பரம் நடராஜர் கோவில் தோரட்டம் நேற்று (ஜன.2) நடைபெற்றது.


