முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆவின் நிலையங்களில் ஆவின் பொருள் தவிர மற்ற பொருட்களை விற்றால் உரிமம் ரத்து: பால்வளத்துறை அமைச்சர் நாசர் எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

ஈரோடு : ஆவின் நிலையங்களில் ஆவின் பொருட்கள் தவிர மற்ற பொருட்களை விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் அமைந்துள்ள ஆவின் பால் பண்ணையில், தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேற்று நேரில் ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் நாசர், கொரோனோ காலத்தில் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் முறையாக மக்களிடம் சென்றடைகிறதா? என்பது குறித்து முதல்வர் உத்தரவின் பேரில் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆவின் ஒன்றியங்களில் பணி நியமனத்தில் முறைகேடு இருப்பதால், விரைவில் புதிய மணி நியமனத்திற்கு அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்தார். மேலும் விவசாயிகளுக்கு பால் நிலுவைத்தொகை தொடர்பாக கவனத்திற்கு வந்தால் சரிசெய்யப்படும் என்று அவர் கூறிய அவர், ஆவின் பாலகத்தில் வேறு பொருட்களை விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து