முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 34 நாட்களுக்கு பின் டாஸ்மாக் கடைகள் திறப்பு: தீபாராதனை காட்டி மது பிரியர்கள் பூஜை

திங்கட்கிழமை, 14 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் 34 நாட்களுக்கு பின் தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் 10-ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தொடக்கத்தில் எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிடைக்காததால், ஊரடங்கு 24-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையிலும், பின்னர் 31-ம் தேதியில் இருந்து 7-ம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டது.

கடைசியாக அறிவித்த தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கின் காரணமாக கொரோனா தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்தது. பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 14-ம் தேதி காலை 6 மணி வரையிலும் நீட்டிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் ஊரடங்கினை 5-வது முறையாக மேலும் ஒரு வாரத்துக்கு, அதாவது வரும் 21-ம் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளுடன் நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். 

11 மாவட்டங்களைத் தவிர, இதர 27 மாவட்டங்களில் நோய்த்தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுடன் கூடுதலாக செயல்பாடுகளும் அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்பு வேலி போடப்பட்டிருக்க வேண்டும் உள்ளிட்ட 14 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி நேற்று 27 மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்புடன்  டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. மதுபிரியர்கள் வரிசையில் நின்று மது வாங்கி சென்றனர்.  சிலர் முதல் ஆளாக வாங்கிய வெற்றிக்களிப்பில் பாட்டில்களை தொட்டு வணங்கினர். சில கடைகளில் கடை திறந்த பிறகு தேங்காய் மீது சூடம் ஏற்றி திருஷ்டி சுற்றி சிதறு தேங்காய் போட்ட பிறகு வியாபாரம் செய்தனர். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து