முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்டா வகையால் மத்திய கிழக்கு நாடுகளில் 4-ம் அலை: உலக சுகாதார அமைப்பு தகவல்

வெள்ளிக்கிழமை, 30 ஜூலை 2021      உலகம்
Image Unavailable

மத்திய கிழக்கு நாடுகளில் டெல்டா வகை கொரோனாவால் நான்காம் அலை உருவாகியுள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

உலகின் பல்வேறு பகுதிகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. முகக் கவசம் அணிவது, தனிமனித இடைவேளை உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவில்லை என அடுத்தடுத்த அலை உருவாகும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருந்தது. 

இந்நிலையில், டெல்டா வகை கொரோனாவால் மத்திய கிழக்கு நாடுகளில் நான்காம் அலை உருவாகியுள்ளது என உலக சுகாதார அமைப்பு நேற்று தெரிவித்துள்ளது.  இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், 

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட தீவிரமாக பரவக்கூடிய கொரோனா வகை 22 மத்திய கிழக்கு நாடுகளில் பரவியுள்ளது. மொரோக்கோ தொடங்கி பாகிஸ்தான் வரை பரவியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் டெல்டா வகை கொரோனாவால் பரவல் அதிகரித்துள்ளது. பாதிக்கப்படுவோரில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை. இப்பகுதிகளில் நான்காம் கொரோனா அலை பரவி வருகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து