முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வரும் 20-ம் தேதி வரலட்சுமி விரத பூஜை

சனிக்கிழமை, 14 ஆகஸ்ட் 2021      ஆன்மிகம்
Image Unavailable

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வரும் 20-ம் தேதி வரலட்சுமி விரத பூஜை நடைபெறுகிறது. 

 திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வரலட்சுமி விரத பூஜை நடைபெறுவது வழக்கம்.  ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலம் வரலட்சுமி விரதத்தில் பக்தர்கள் பங்கேற்க தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பக்தர்கள் ரூ. 1001-ஐ ஆன்லைனில் செலுத்தி, தேவஸ்தான வெப்சைட்டில் சென்று இதற்குண்டான டிக்கெட் பெற்று பங்கேற்கலாம். இந்த டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு தபால் துறையின் சார்பில் மஞ்சள், குங்குமம், வளையல் உள்ளிட்ட பிரசாதங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

இந்த வரலட்சுமி விரத டிக்கெட்டுகளை www.Tirupatibalaji.Ap.Gov.In என்ற தேவஸ்தான இணையத்தில் பெற்றுக் கொள்ளலாம். வரும் 20-ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணிவரை வரலட்சுமி விரத பூஜை நடைபெற உள்ளது.  அர்ச்சகர்கள் பத்மாவதி தாயார் மூலவர் சந்நிதியில் இருந்தபடி வரலட்சுமி விரத பூஜையை மேற்கொள்ள உள்ளனர். பக்தர்கள் தங்கள் வீடுகளில் வேஸ்தான தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி மூலம் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து