முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

9-12 வகுப்புகளுக்கு 27-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க இமாச்சல் முடிவு

வெள்ளிக்கிழமை, 24 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

சிம்லா : இமாசல பிரதேசத்தில் 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு வருகிற 27-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது.

இமாசல பிரதேசத்தில் பள்ளிகள் திறப்பு பற்றி அமைச்சரவை கூடி நேற்று ஆலோசனை மேற்கொண்டது.  இதில், 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு வருகிற 27-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி, 10 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு திங்கள், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய கிழமைகளிலும், 9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு வியாழன், வெள்ளி மற்றும் சனி ஆகிய கிழமைகளிலும் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு தெரிவித்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து