முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாறனின் ருத்ர தாண்டவம் தான் ஆன்டி இண்டியன் - தயாரிப்பாளர் விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 28 செப்டம்பர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் புளூ சட்டை மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆன்டி இண்டியன். சினிமா விமர்சகராக இருந்து  இயக்குனராகியவர். இது குறித்து பேசிய இயக்குனர்,  படம் முடிவடைந்த நிலையில், “சென்னையில் தணிக்கை குழுவினருக்கு படத்தை திரையிட்டு காட்டினோம். படத்தை பார்த்துவிட்டு எந்தவித காரணமும் சொல்லாமல் படத்திற்கு சான்றிதழே தர மறுத்து விட்டனர்.

இதையடுத்து ரிவைசிங் கமிட்டி சார்பில், பெங்களூரில் உள்ள நாகபரணா தலைமையில் படத்தை பார்த்தனர். படத்தில் 38 இடங்களில் கட்டுகளுக்கு ஒப்புக்கொண்டால் சான்றிதழ் தருகிறோம் என்று சொன்னார்கள். அப்படி 38 இடங்களில் வெட்டினால் நிச்சயம் படம் பிளாப் தான் என நினைத்து தயாரிப்பாளரும் நானும் அதை விரும்பவில்லை.

கடைசியாக, நீதிமன்றத்தை நாடினோம். எங்கள் தரப்பு நியாயங்களை கேட்ட நீதிமன்றம், அதற்கு முன்னதாக தணிக்கை குழு மற்றும் ரிவைசிங் கமிட்டி என இரண்டு தரப்பிலும் எடுக்கப்பட்ட முடிவுகளை ரத்து செய்யட்டது.. மேலும் புதிதாக ஒரு கமிட்டி ஒன்றை அமைக்க கூறிய நீதிமன்றம், முறையான கட்டுக்களுடன் கூடிய சான்றிதழை வழங்கவும் உத்தரவிட்டது.

அதை தொடர்ந்து படத்தை பார்த்த புதிய கமிட்டியினர் மூன்றே இடங்களில் சிறிய கரெக்சன்களை மட்டுமே செய்ய வேண்டும் என கூறி படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கினார்கள் என்றார். பின்னர் படத்தின் தயாரிப்பாளர் ஆதம் பாவா பேசும்போது, இந்த ஆன்டி இண்டியன் படத்தை பார்த்துவிட்டு இதற்கு எப்படி சான்றிதழ் கொடுப்பது என்றே அவர்களுக்கு புரியவில்லை. வழக்கமாக அவர்கள் பார்க்கும் படங்களில் இருந்து மாறுபட்டு இருப்பதால் அவர்களுக்கே குழப்பம் ஏற்பட்டுவிட்டது.

இந்தப்படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனைகளால் ஒரு தயாரிப்பாளராக எனக்கு எந்தவித நட்டமோ பாதிப்போ இல்லை. சொல்லப்போனால் லாபம் தான். இப்போதே பல பேர் இந்தப்படத்தை வாங்குவதற்கு தயாராக இருக்கிறார்கள். அந்தவகையில் இந்த ஆன்டி இண்டியன் படம் மாறனின் ருத்ர தாண்டவமாக இருக்கும்” என்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து