முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7 புதிய பாதுகாப்பு நிறுவனங்கள்: நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி

வெள்ளிக்கிழமை, 15 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : நாட்டின் ராணுவ தளவாடங்களில் தற்சார்பை மேம்படுத்தும் வகையில், ஆயுத தொழிற்சாலை வாரியமானது 7 பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றப்பட்டன. இந்த 7 பாதுகாப்பு நிறுவனங்களையும் தசரா பண்டிகை நாளன்று  பிரதமர் மோடி காணொலி மூலம் துவக்கி வைத்து நாட்டு அர்ப்பணித்தார். 

நாட்டின் ராணுவ தளவாடங்கள் தயாரிப்பில் தற்சார்பை மேம்படுத்தும் வகையில் ஆயுத தொழிற்சாலை வாரியத்தை 7 நிறுவனங்களாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது.

அதன்படி, முனிஷன்ஸ் இந்தியா லிமிடெட், ஆர்மட் வெஹிகிள்ஸ் நிகம் லிமிடெட், அட்வான்ஸ்டு வெப்பன்ஸ் மற்றும் எக்யூப்மென்ட் இந்தியா லிமிடெட், ட்ரூப் கம்ஃபோர்ட்ஸ் லிமிடெட், யந்த்ரா இந்தியா லிமிடெட், இந்தியா ஆப்டெல் லிமிடெட் மற்றும் கிளைடர்ஸ் இந்தியா லிமிடெட் ஆகிய புதிய 7 நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இணை மந்திரி அஜய் பட் மற்றும் பாதுகாப்பு தொழில் சங்கங்களின் பிரதிநிதிகள், உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்த நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். 

எதிர்கால தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்க வேண்டும், ஆராய்ச்சியாளர்களுக்கு வாய்ப்புகளை வழங்கவேண்டும் என்று கூறிய பிரதமர் மோடி, இந்த 7 நிறுவனங்களுடன் ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து