முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெற்கு சூடானில் 2 மாதங்களாக கனமழை 7 லட்சம் மக்கள் பாதிப்பு என ஐ.நா. தகவல்

வியாழக்கிழமை, 25 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

வட ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான தெற்கு சூடானில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழையும் அதனால் வெள்ளமும் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் 7 லட்சம் பேர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். வட ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான தெற்கு சூடானில் கடந்த 2 மாதங்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. 

இதனால் தலைநகர் பென்டியுவில் எங்கு பார்த்தாலும் வெள்ளமாகவே காட்சியளிக்கிறது. மிகவும் ஏழை நாடுகளில் ஒன்றான தெற்கு சூடான் மக்கள் தற்போது செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

பல ஆயிரம் குடிசை வீடுகளும், அறுவடைக்கு தயாராகி இருந்த சிறுதானிய பயிர்களும் முற்றிலும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. இதனால் மிகப்பெரிய வேதனை ஏற்பட்டுள்ளதாகவும் உலக நாடுகள் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்றும் சூடான் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து