Idhayam Matrimony

'ஜாவித்' புயல் எதிரொலி: பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம்

வியாழக்கிழமை, 2 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

நாளை உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள  'ஜாவித்' புயல் பற்றி பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நிவாரண பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

நாட்டில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்துள்ளது.  இதனால், மழை, வெள்ளம் என மக்கள் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.  இந்த நிலையில், அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், இன்று புயலாக வலுப்பெற்று மத்திய வங்க கடல் பகுதிக்கு நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

புதிதாக உருவாக உள்ள இந்த புயலுக்கு 'ஜாவித்' என்று பெயர் சூட்டப்பட உள்ளது. இது சவுதி அரேபியா வழங்கிய பெயராகும். புயலுக்கான பட்டியலில் இந்த பெயர் தான் இடம் பெற்றுள்ளது. 'ஜாவித்' என்றால் அரபு மொழியில் கருணை என்று அர்த்தம்.  'ஜாவித்' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசா மாநிலத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

டிசம்பர் 4ம் தேதி (நாளை) ஒடிசாவிலும், டிசம்பர் 5ம் தேதி மேற்கு வங்காளத்திலும், அசாம், மேகாலயா, அருணாசல பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று கூட்டம் நடந்தது.  இந்த கூட்டத்தில், தேசிய பேரிடர் மீட்புப் படையின் இயக்குநர், இந்திய வானிலை மைய இயக்குநர், உள்துறை அதிகாரிகள் மற்றும் உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் புயலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரண பணிகள் உள்ளிட்டவை பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.  

ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேரிடர் மீட்புப் படையின் இயக்குநர் அதுல் கர்வால் கூறியதாவது., அடுத்த மூன்று நாள் வானிலை நிலவரம் குறித்து பிரதமரிடம் கூறினோம். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உள்துறை செயலாளர் விவரித்தார். முதல்கட்டமாக  மழையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு 29 குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும், 32 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து