முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று 5-ம் ஆண்டு நினைவுநாள்: ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அஞ்சலி

சனிக்கிழமை, 4 டிசம்பர் 2021      அரசியல்
Image Unavailable

5-ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு இன்று ஜெயலலிதா சமாதியில் தலைவர்கள் இன்று ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் மற்றும் தலைவர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அ.தி.மு.க தலைமைக் கழகம் சார்பில் இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மறைந்து இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதையொட்டி ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவுநாளை கடைப்பிடிக்க அ.தி.மு.க. மேலிடம் கேட்டுக் கொண்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அ.தி.மு.க தலைமைக் கழகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் இன்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதில் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்துகின்றனர். மாவட்ட கழக அமைப்புகளிலும் ஜெயலலிதா நினைவு இன்று கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து