எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
விழுப்புரம் : தமிழ்நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும் என்றும் 10 வருடமாக செய்யாத திட்டங்களை 10 மாதங்களில் தி.மு.க. ஆட்சி செய்து முடித்து விட்டதாகவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம், ஒழுந்தியாம்பட்டில் நடைபெற்ற அரசு விழாவில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது,
இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய இந்த 10 மாத கால தி.மு.க. ஆட்சி எப்படி இருக்கிறது என்று சில தாய்மார்களிடத்திலே நான் கேட்ட போது, ரொம்ப சிறப்பாக இருக்கிறது என்று தாய்மார்கள் சொன்னார்கள்.
எந்தவிதப் பாகுபாடின்றி, எந்தவித வேறுபாடின்றி இந்தச் சமூகம் வாழவேண்டும் என்பதற்காகத்தான் குடியிருப்புகளாக நம்முடைய ஊர்கள் மாற வேண்டும் என்று பெரியார் கனவு கண்டார். ஒரு குறிப்பிட்ட சாதியினர், ஒரு குறிப்பிட்ட இடத்தில் மொத்தமாக வாழ்வார்கள் என்ற நிலை இல்லாமல், அனைவரும், எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும், ஒற்றுமையோடு, ஒருமித்தக் கருத்தோடு அவர்கள் வாழ வேண்டும் என்று பெரியார் விரும்பினார். அந்த விருப்பத்தின் அடையாளம் தான் சமத்துவபுரங்களை கருணாநிதி உருவாக்கினார். ஏதோ, ஒரு இடத்தில் சும்மா ஒரு அடையாளத்திற்காக நாம் கட்டவில்லை. 2010-2011 ஆம் ஆண்டிலே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டம் இது. பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் சமத்துவபுரம் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. உயர்ந்த நோக்கத்துடன் அமைக்கப்பட்ட சமத்துவபுரங்கள் கடந்த பத்து ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் சரியாகப் பராமரிக்கப்படவில்லை. அதனால்தான், அனைத்து சமத்துவபுரங்களும் எங்கேயாவது பழுது இருந்தால் அது மக்கள் பயன்படுத்தப்பட முடியாத நிலைக்கு போய்விடக் கூடாது என்பதற்காகத் தான் அது உடனடியாக சீரமைக்கப்படும் என்று 24-06-2021 அன்று சட்டமன்றத்தில் நான் தெரிவித்தேன்.
அந்த அடிப்படையில் தான் 1997 முதல் 2010 வரை கட்டப்பட்ட சமத்துவபுரங்களை 190 கோடி ரூபாயில் சீரமைக்க இந்த அரசு உத்தரவிடப்பட்டிருக்கிறது என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். கூடிய விரைவில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சமத்துவபுரங்கள் புதுப்பொலிவைப் பெறும். இந்த நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும், அதுதான் எங்களுடைய லட்சியம்.
சமத்துவபுரத்தைப் போல 2011-ம் ஆண்டுக்குப் பிறகு கைவிடப்பட்ட மற்றொரு முக்கியமான திட்டம் இருக்கிறது என்று சொன்னால் அண்ணா மறுமலர்ச்சித் திட்டம். இத்திட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு நூலகம் அமைத்தோம். அறிவுசார்ந்த இளைய சமுதாயம் உருவாக வழிவகை செய்தோம். கடந்த காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் மீண்டும் புதுப்பொலிவு பெறுவது மூலமாக தமிழகக் கிராமங்கள் மிகச் சிறந்த வளர்ச்சியை நிச்சயமாக அடையும். இதேபோல் நமக்கு நாமே திட்டத்தையும் கடந்த பத்து வருடமாக முடக்கி போட்டு வைத்திருந்தார்கள். அந்தத் திட்டமும் இப்போது புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. பத்தாண்டுகாலம் செய்து தர வேண்டிய திட்டங்களை, பத்து வருடமாக செய்யாத திட்டங்களை, பத்தே மாதத்தில் செய்து கொண்டிருக்கக் கூடிய ஒரு ஆட்சி தான் நம் ஆட்சி. இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
மராட்டிய அரசியலில் பரபரப்பு: பா.ஜனதா- சிவசேனா திடீர் மோதல்
19 Nov 2025மும்பை : பா.ஜனதா- சிவசேனா இடையே திடீர் மோதலில் அமைச்சரவை கூட்டத்தை சிவசேனா மந்திரிகள் புறக்கணித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
-
தனியார் வாகனங்களில் சிவப்பு, நீல நிற விளக்குகள் பயன்படுத்த கூடாது: தூத்துக்குடி எஸ்.பி. எச்சரிக்கை
19 Nov 2025தூத்துக்குடி, உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி சிவப்பு, நீல நிற ஸ்ட்ரோப் விளக்குகளை தனியார் வாகனங்களில் பயன்படுத்த கூடாது என்று எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.
-
வருங்கால வளர்ச்சிக்கு தேவையானதும், அவசியமான மெட்ரோ ரயில் திட்டத்தை கோவை, மதுரை நகரங்களுக்கு நிச்சயம் கொண்டு வருவோம் : மத்திய அரசு நிராகரித்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
19 Nov 2025சென்னை : கோவை, மதுரை மெட்ரோ திட்ட மத்திய அரசு நிராகரித்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கூட்டாட்சிக் கருத்தியலை சிதைப்பதை சுயமரியாதைமிக்க மண்ணான
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-11-2025.
19 Nov 2025 -
பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு கோவையில் கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்
19 Nov 2025கோவை : பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
-
திருவண்ணாமலையில் மலையேற பக்தர்களுக்கு அனுமதி தரப்படுமா? அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
19 Nov 2025தி.மலை, தீபத்தின் போது ஈரப்பதத்தை பொறுத்து மலையேற பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா இல்லையா என முடிவு செய்யப்படும் என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
-
கோவையில் இயற்கை வேளாண் மாநாடு: விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதியை விடுவித்தார் பிரதமர் மோடி
19 Nov 2025கோவை கோவையில் நடைபெற்ற இயற்கை வேளாண் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதியை விடுவித்தார்.
-
காசா அமைதி திட்டத்திற்காக ட்ரம்ப் வரைவு தீர்மானத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை ஒப்புதல்
19 Nov 2025நியூயார்க் : காசா அமைதி திட்டத்திற்கு ஐ.நா. அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
-
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு; தமிழக அரசாணை வெளியீடு
19 Nov 2025சென்னை, அரசு ஊழியர்களுககு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
விஜய் நிலைப்பாட்டில் திடீர் மனமாற்றம்: அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை?
19 Nov 2025சென்னை : விஜய் நிலைப்பாட்டில் திடீர் மனமாற்றம் ஏற்படும் என்று அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
-
ஆலங்குளம், கன்னியாகுமரி உள்ளிட்ட 3 மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு
19 Nov 2025சென்னை : ஒட்டப்பிடாரம், ஆலங்குளம், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தி.மு.க. நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
-
சபரிமலை: கூட்ட நெரிசலில் பெண் பலி
19 Nov 2025சபரிமலை : சபரிமலை கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்தார்.
-
ரஷ்ய அதிபருடன் ஜெய்சங்கர் சந்திப்பு: முக்கிய விசயங்கள் பற்றி ஆலோசனை
19 Nov 2025மாஸ்கோ : ரஷ்ய அதிபருடன் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
-
ஏ.ஐ.யை நம்பாதீர்கள்: சுந்தர் பிச்சை
19 Nov 2025வாஷிங்டன் : ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
-
சிங்கள ஆட்சியாளர்களுக்கு திருமாவளவன் கண்டனம்
19 Nov 2025சென்னை : இலங்கையின் ஒற்றை ஆட்சி முறைமையின்கீழ் தமிழ் மக்கள் ஒருபோதும் நிம்மதியாக வாழமுடியாது என்று தெரிவித்துள் வி.சி.க.
-
ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை இந்தியா வருகை
19 Nov 2025டெல்லி : ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வோங் இந்தியா வந்துள்ளார்.
-
கூகுள் மேப்பில் 10 புதிய அம்சங்கள் அறிமுகம்
19 Nov 2025வாஷிங்டன் : கூகுள் மேப்பில் 10 புதிய அப்டேட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
-
மதுரையில் நிகழந்த சோகம்: நாய் குறுக்கே பாய்ந்ததால் சாலையில் விழுந்த தம்பதி, பேருந்து மோதி பலி
19 Nov 2025மதுரை : மதுரையில் நாய் குறுக்கே பாய்ந்ததில் மோட்டார் சைக்கிளில் இருந்து கணவனும், மனைவியும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தனர்.
-
ஆடம்பரம் அல்ல; அவசியமானது: மதுரை, கோவை நகரங்களுக்கு மெட்ரோ ரயில் சேவை தேவை : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
19 Nov 2025சென்னை : மெட்ரோ ரயில் என்பது ஆடம்பரம் அல்ல அவசியமானது என்று தெரிவித்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு மதுரை, கோவை நகரங்களுக்கு இது அவசியமான உள்கட்டமைப்புத் தேவை என்றும் அவ
-
பாட்னா, காந்தி மைதானத்தில் விழா: பீகார் முதல்வராக இன்று நிதிஷ்குமார் பதவியேற்பு : பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்பு
19 Nov 2025பாட்னா : தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடைபெறும் விழாவில் பீகாரின் முதல்வராக நிதிஷ்குமார்10-வது முறையாக இன்று பதவியேற்கவுள்ளார்.
-
ராமேசுவரம்-சென்னை வந்தே பாரத் ரயில் கால அட்டவணை வெளியீடு
19 Nov 2025மதுரை : ராமேசுவரம்-சென்னை வந்தே பாரத் ரயில் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
-
வருவாய் துறை ஊழியர்கள் புறக்கணிப்பு: தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் பாதிப்பு
19 Nov 2025சென்னை : வருவாய் துறை ஊழியர்கள் புறக்கணிப்பால் தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு இடைக்கால தடை
19 Nov 2025புதுடெல்லி : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு சுப்ரீம்கோர்ட் இடைக்கால தடையை விதித்துள்ளது.
-
லெபனானில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 13 பேர் உயிரிழப்பு
19 Nov 2025சிடோன் : லெபனானில் அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்தி வான்வழி தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
பாரதிய ஜனதாவில் இணைந்த பிரபல நடிகை ஊர்மிளா உன்னி
19 Nov 2025திருவனந்தபுரம் : பிரபல மலையாள நடிகை ஊர்மிளா உன்னி பா.ஜனதாவில் இணைந்தார்.


