முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியம் அதிகரிப்பு நிர்மலா சீதாராமன் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2022      இந்தியா
Nirmala 2022-05-22

Source: provided

புது டெல்லி : பெட்ரோல், டீசல் மீதான மத்திய கலால் வரி குறைப்பை அறிவித்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடு முழுவதும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியம் 1. 10 லட்சம் கோடியாக அதிகரிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில், மத்திய பட்ஜெட்டில் உர மானியம் ரூ.1.05 லட்சம் கோடி கூடுதலாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தொற்றில் தொற்றுநோயிலிருந்து உலகம் மீண்டு வரும் நேரத்தில், உக்ரைன் ரஷ்யா மோதல், விநியோகச் சங்கிலி சிக்கல் மற்றும் பொருட்கள் பற்றாக்குறையை கொண்டு வந்துள்ளது. இது பல நாடுகளில் பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

சவாலான சர்வதேச சூழ்நிலை இருந்த போதிலும், அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை இந்தியாவில் இல்லை என்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை கட்டுக்குள் வைக்கப்படுவதையும் உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஏழைகளின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது என்று மத்திய நிதி அமைச்சர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து