LIC நிறுவனத்தில் உள்ள 'உதவியாளர் மற்றும் உதவி மேலாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கதல்ல என்று ஓ. பன்னீர் செல்வத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வில் ஒற்றைத்தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஓ. பன்னீர் செல்வம் - எடப்பாடி பழனிசாமி தரப்பு இடையே கடந்த சில நாட்களாக கருத்து மோதல் நடைபெற்று வருகிறது. இந்த பரபரப்புக்கு மத்தியில் எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர் செல்வம் நேற்று முன்தினம் கடிதம் எழுதியிருந்தார். அதில், உள்ளாட்சி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு சின்னம் வழங்க கையெழுத்து போட நான் தயார் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியிருந்தார். இந்தக் கடிதத்தை எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுத்ததாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வத்திற்கு நேற்று எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது,
தங்களின் 29.06.22-ம் தேதியிட்ட கடிதம் பத்திரிகைகளின் வாயிலாக தெரிந்து கொண்டேன். பின்னர் மகாலிங்கம் வழியாக பெறப்பட்டது. கடந்த 23.06.22 அன்று நடைபெற்ற பொதுக்குழுவில் 1.12.21 அன்று செயற்குழுவால் கொண்டு வரப்பட்ட சட்ட திட்ட திருத்தங்கள் அங்கீகரிக்கப்படவில்லை. ஆதலால் அந்த சட்ட திட்ட திருத்தங்கள் காலாவதியாகி விட்டது. எனவே ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கதல்ல.
மேலும் உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக இருக்கும் பதவிகளுக்கு நடைபெறவுள்ள தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் 27.06.22 அன்று முடிவுற்ற நிலையில் இத்தனை நாட்கள் பொறுத்திருந்து கட்சியின் வேட்பாளர்களை அதிகாரபூர்வமாக அறிவிக்காத நிலையிலும் 27.06.22 அன்று கூட்டப்பட்ட தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு தாங்கள் உட்பட அனைவருக்கும் முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டு மொத்தமுள்ள 74 தலைமை கழக நிர்வாகிகளில் 65 பேர் கலந்து கொண்டனர். 4 பேர் உடல்நிலை சரியில்லை என்று தகவல் தெரிவித்திருந்தனர். தாங்கள் அந்த கூட்டத்தை புறக்கணித்த நிலையில் தற்போதைய தங்களின் இந்த கடிதம் ஏற்புடையதாக இல்லை.
அதே போல் நாம் இருவரும் கூட்டாக அழைப்பு விடுத்த கட்சியின் பொதுக்குழுவை நடத்த விடாமல் தடுத்து நிறுத்துவதற்காக தாங்கள் ஆவடி காவல் ஆணையருக்கு கடிதம் மூலம் புகார் அளித்தும், நீதிமன்றங்களின் மூலம் வழக்குகளை தாக்கல் செய்தும் அ.தி.மு.க.வை செயல்படாத நிலைக்கு கொண்டு செல்வதற்கான அனைத்து பணிகளையும் செய்து விட்டு தற்போது இப்படி ஒரு கடிதத்தை எனக்கு அனுப்புவது ஏற்புடையதாக இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
Devil Eggs.![]() 6 hours 14 sec ago |
பொரி உப்புமா![]() 5 days 2 hours ago |
கடாய் வெஜிடபிள்![]() 1 week 5 hours ago |
-
50 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க நடிகையிடம் மன்னிப்பு கேட்ட ஆஸ்கர் குழு
17 Aug 2022லாஸ் ஏஸ்சல்ஸ் : 1973-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி 45-வது ஆஸ்கர் விருது விழா நடைபெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 17-08-2022.
17 Aug 2022 -
கென்ய அதிபர் தேர்தலில் வில்லியம் ரூட்டோ வெற்றி: வன்முறை வெடித்ததால் பதற்றம்
17 Aug 2022கென்யாவின் அதிபராக வில்லியம் ரூட்டோ வெற்றி பெற்ற நிலையில், அந்நாட்டில் வன்முறை வெடித்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது.
-
3 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம் : கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவு
17 Aug 2022சென்னை : 3 பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்து கவர்னர் ஆர்.என். ரவி உத்தரவிட்டுள்ளார்.
-
7 தைவான் அதிகாரிகளுக்கு சீனா பொருளாதார தடை
17 Aug 2022பெய்ஜிங் : அமெரிக்க எம்.பி.க்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தைவான் அதிகாரிகள் 7 பேருக்கு சீனா பொருளாதார தடை விதித்துள்ளது.
-
மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியை வாங்க எலான் மஸ்க் முடிவு
17 Aug 2022வாஷிங்டன் : நான் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்கப் போகிறேன் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார்
-
இலங்கைக்கு சீன உளவு கப்பல் வருகை: ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில் கடற்படை தொடர்ந்து கண்காணிப்பு
17 Aug 2022இலங்கைக்கு சீன உளவு கப்பல் வருகையை முன்னிட்டு தனுஷ்கோடியில் இந்திய கடலோர காவல் படை கப்பல் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
-
அ.தி.மு.க.வின் கசந்த காலங்கள் இனி வசந்த காலங்களாக மாறும் : ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
17 Aug 2022சென்னை : அ.தி.மு.க.வின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
உடல்நலம் குறித்து சோனியாவிடம் கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின்
17 Aug 2022புதுடெல்லி : இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு: 16 கண் பால மதகுகள் மூடல்
17 Aug 2022மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 20,000 கனஅடியாக சரிந்ததால், உபரிநீர் போக்கியான 16 கண் மதகு மூடப்பட்டது.
-
யோகி ஆதித்யநாத்துக்கு இடமில்லை: பா.ஜ.க. பாராளுமன்ற குழுவிலிருந்து நிதின் கட்கரி, சிவ்ராஜ் சிங் விடுவிப்பு
17 Aug 2022பா.ஜ.க.வில் மிகப்பெரிய அளவிலான அமைப்பு ரீதியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
-
ஜனாதிபதி, துணை ஜனாதிபதியின் சந்திப்பு மன நிறைவாக இருந்தது : டெல்லியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
17 Aug 2022புதுடெல்லி : ஜனாதிபதி, துணை ஜனாதிபதியின் சந்திப்பு மன நிறைவாக இருந்ததாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
-
இலங்கையில் அவசரநிலை நீட்டிக்கப்பட மாட்டாது : அதிபர் ரணில் விக்ரமசிங்கே தகவல்
17 Aug 2022கொழும்பு : இலங்கையில் அவசர கால சட்டம் நீட்டிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எதிர்கால நடவடிக்கைகள் அனைத்தும் தொண்டர்களின் விருப்பப்படி இருக்கும் : ஓ.பி.எஸ். பேட்டி
17 Aug 2022சென்னை : எதிர்கால நடவடிக்கைகள் அனைத்தும் தொண்டர்களின் விருப்பப்படியே இருக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
-
உலகின் ஆறு சிறந்த நகரங்கள் பட்டியலில் பெங்களூரு தேர்வு
17 Aug 2022பெங்களூரு : உலகின் சிறந்த நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் பெங்களூரு நகரம் இடம் பெற்றுள்ளது. பெங்களூரு நகரம் புதிய தொழில்கள் தொடங்க உகந்த இடமாக திகழ்கிறது.
-
புதிதாக 9,062 பேருக்கு தொற்று: இந்தியாவில் சற்று அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு
17 Aug 2022இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது.
-
ஜனாதிபதி, துணை ஜனாதிபதியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு
17 Aug 2022டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனாதிபதியை சந்தித்து மலர் கொத்து கொடுத்து பொன்னாடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
-
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்ப்பு எங்கள் தரப்பு நியாயத்திற்கு கிடைத்த வெற்றி: ஓ.பி.எஸ். வழக்கறிஞர் திருமாறன் பேட்டி
17 Aug 2022அ.தி.மு.க. பொதுக்குழு தீர்ப்பு எங்கள் தரப்பு நியாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்று ஓ.பி.எஸ். வழக்கறிஞர் திருமாறன் தெரிவித்தார்.
-
2-ம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 22-ம் தேதி தொடங்கும்: அண்ணா பல்கலை. அறிவிப்பு
17 Aug 20222-ம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 22-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
-
அமெரிக்க ராணுவ அமைச்சருக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு
17 Aug 2022வாஷிங்டன் : அமெரிக்க ராணுவ அமைச்சருக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
சசிகலா புரடக்சன்ஸ் வெளியிடும் 3 புதிய படங்கள்
17 Aug 2022சினிமா தயாரிப்பு நிறுவனமான சசிகலா புரடக்சன்ஸின் துவக்கவிழாவும், இந்நிறுவனத்தின் முதல் படைப்புகளாக ஆண்ட்ரியா நடிப்பில் “கா”, கிஷோர் நடிப்பில் “ட்ராமா” மற்றும் புது
-
ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை
17 Aug 2022மெரினாவில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.
-
கோவை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Aug 2022கோவை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஜோபைடனின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி
17 Aug 2022வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஜோபைடனின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
-
பொறியியல் தரவரிசை பட்டியல்: முதல் 5 இடங்களை பிடித்த அரசுப்பள்ளி மாணவர்கள்
17 Aug 2022பொறியியல் தரவரிசை பட்டியலில் முதல் 5 இடங்களை பிடித்த அரசுப்பள்ளி மாணவர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.