முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைன் துறைமுகங்களில் இருந்து மேலும் 4 தானிய கப்பல் லெபனானுக்கு செல்கிறது

திங்கட்கிழமை, 8 ஆகஸ்ட் 2022      உலகம்
Ukraine 2022-08-08

Source: provided

கீவ் : ரஷியா-உக்ரைன் போர் காரணமாக உலகில் 4.7 கோடி பேர் பசியால் வாடும் அபாயம் இருப்பதாக ஐ.நா. சபை எச்சரித்தது.

இதையடுத்து உக்ரைனில் இருந்து தானியக் கப்பல்களை கருங்கடல் வழியாக வெளிநாடுகளுக்கு அனுப்ப வழிவகை செய்யும் ஒப்பந்தம் ரஷியா-உக்ரைன் இடையே ஐ.நா. சபை மற்றும் துருக்கி முன்னிலையில் கடந்த மாதம் கையெழுத்தானது.

அதன் கீழ் உக்ரைனில் இருந்து முதல்முறையாக உணவு தானிய கப்பல் லெபனானை நோக்கி கடந்த 1-ந்தேதி புறப்பட்டது. இந்த நிலையில் மேலும் 4 கப்பல்கள் உக்ரைன் துறை முகங்களில் இருந்து இன்று லெபனானுக்கு செல்கிறது.

இதன் மூலம் பசியால் வாடும் 4.7 கோடி பேரின் துயரை துடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து