முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் கைது காப்புடன் பயணிகள் வெளியேற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2022      உலகம்
Australia 2022-08-14

Source: provided

கான்பெர்ரா : ஆஸ்திரேலியாவின் கான்பெர்ரா விமான நிலையத்தில் நடந்த துப்பாக்கி சூட்டை அடுத்து, ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆஸ்திரேலியாவின் கான்பெர்ரா விமான நிலைய முனையத்தில் திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதனையடுத்து, மத்திய போலீஸ் படை அதிரடியாக செயல்பட்டு விமான நிலையத்தில் இருந்த பயணிகளை பாதுகாப்புடன் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். 5 ரவுண்டுகள் வரை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கி சூடு சத்தம் கேட்டவுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலீசார் பாதுகாப்பு பணியில் இறக்கி விடப்பட்டனர். இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது. 

துப்பாக்கி சூட்டில் கேன்பெர்ரா விமான நிலையத்தில் உள்ள சுவர்களில் குண்டுகள் துளைத்துள்ளன. ஜன்னல் கண்ணாடிகளிலும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. நிலைமை தற்போது, கட்டுக்குள் உள்ளதாக ஆஸ்திரேலிய மத்திய போலீஸ் படை தெரிவித்து உள்ளது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டு உள்ள ஒருவரை போலீசார் பிடித்து சென்றனர். அவரிடம் இருந்த ஆயுதமும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. விமான நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் கிடைத்த தகவலின்படி, துப்பாக்கி சூட்டில் ஒரே நபர் அவர் என தெரிய வந்துள்ளது. இந்த நேரத்தில் யாரும் விமான நிலையத்திற்கு வரவேண்டாம் என மக்களிடம் போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து