முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3-வது போட்டியிலும் வெற்றி: நியூசிலாந்து 'ஏ' அணியை ஒயிட் வாஷ் செய்தது இந்தியா

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2022      விளையாட்டு
Cricket 2022-09-27

Source: provided

சென்னை: இந்தியா வந்துள்ள நியூசிலாந்து ஏ அணி, இந்திய ஏ அணியுடன் அதிகாரப்பூர்வமற்ற முறையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது.

இந்தியா வெற்றி...

இரு போட்டிகளில் இந்திய ஏ அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், நேற்று 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா ஏ அணி முதலில் பேட் செய்தது. 49.3 ஓவர்களில் 284 ரன்களுக்கு அந்த அணி ஆல்-அவுட் ஆனது. சஞ்சு சாம்சன் 54 ரன்னும், ஷர்துல் தாக்குர் 51 ரன்னும், திலக் வர்மா 50 ரன்னும் எடுத்தனர். அதன்பின், 285 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து ஏ அணி 38.3 ஓவர்களில் 178 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

முழுதும் வென்றது...

இதன்மூலம் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ஏ அணி வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் ராஜ் பாவா 4 விக்கெட்டும், ராகுல் சஹார், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 'ஏ' அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து