எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
19 வயதுக்குட்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் உன்முக்த் சந்த், கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது அவருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சந்த், அமெரிக்காவில் நடந்த மைனர் லீக் கிரிக்கெட் போட்டியில் சிலிக்கான் வேலி ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக விளையாடும் போது இந்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்த புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அந்த படத்தில் அவரது இடது கண் கடுமையாக வீங்கியுள்ளது. இதனால் அவரால் கண்ணை திறக்க முடியவில்லை. அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ஒரு தடகள வீரருக்கு இது ஒருபோதும் சுமூகமான சவாரி அல்ல. சில நாட்களில் நீங்கள் வெற்றியுடன் வீட்டுக்கு வருகிறீர்கள், மற்ற நாட்களில் ஏமாற்றத்துடன் வருவீர்கள். மேலும் சில நாட்களில் காயங்கள் மற்றும் தழும்புகளுடன் வீட்டுக்கு வருவீர்கள். பேரழிவில் இருந்து தப்பியதற்கு கடவுளுக்கு நன்றி. கடினமாக விளையாடுங்கள் ஆனால் பாதுகாப்பாக இருங்கள். இது ஒரு மெல்லிய கோடு. வாழ்த்துக்களுக்கு நன்றி" என்று கூறியுள்ளார்.
_____________
இரானி கோப்பையில் சர்ஃபராஸ் கான் சதம்
இரானி கோப்பைப் போட்டியில் செளராஷ்டிரம் அணிக்கு எதிராக சதமடித்துள்ளார் ரெஸ்ட் ஆஃப் இந்தியா வீரர் சர்ஃபராஸ் கான். ராஜ்கோட்டில் அக்டோபர் 1-5 தேதிகளில் நடைபெறும் இரானி கோப்பைக்கான போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா - ரஞ்சி சாம்பியன் செளராஷ்டிரம் ஆகிய அணிகள் மோதுகின்றன. நேற்று தொடங்கிய இந்த ஆட்டத்தில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர் சாய் கிஷோருக்கு 11 பேருக்கான அணியில் இடம் கிடைக்கவில்லை.
டாஸ் வென்ற ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. புஜாரா இடம்பெற்றிருந்த செளராஷ்டிரம் அணி 24.5 ஓவர்களில் 98 ரன்களுக்குச் சுருண்டது. முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளையும் குல்தீப் சென், உம்ரான் மாலிக் தலா 3 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினார்கள். புஜாரா 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இதன்பிறகு பேட்டிங் செய்த ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி முதல் நாள் முடிவில் 49 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றுள்ளது. கேப்டன் விஹாரி 62 ரன்களுடனும் சர்ஃபராஸ் கான் 125 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளார்கள். ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி 107 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
_____________
ரன் அவுட் சர்ச்சை விவகாரம்: பென் ஸ்டோக்ஸ் கேள்வி ?
பிரபல இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ். இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ். அவர் கூறியதாவது: ஹர்ஷா, மன்கட் விவகாரத்தில் (ரன் அவுட்) மக்களின் கருத்துகளைக் கொண்டு கலாசாரத்தை விமர்சனம் செய்யலாமா? 2019 உலகக் கோப்பை நடைபெற்று இரண்டு வருடங்களாகி விட்டன. இன்றைக்கும் பலவிதமாக என்னைத் திட்டிப் பதிவுகள் எழுதுகிறார்கள் இந்திய ரசிகர்கள். இது உங்களைத் தொந்தரவு செய்யவில்லையா? இந்த விவகாரம் தொடர்பான (இங்கிலாந்து வீரர்களின் கருத்துகள்) கலாசாரம் தொடர்புடையதா? நிச்சயமாக இல்லை.
ஓவர்த்ரோ தொடர்பாக உலகெங்கும் உள்ள ரசிகர்கள் என்னிடம் கருத்து தெரிவிகிறார்கள். அதேபோல மன்கட் விக்கெட் தொடர்பாக எல்லோரும் கருத்து தெரிவிக்கிறார்கள். இங்கிலாந்து மக்கள் மட்டுமா இதற்குக் கருத்து தெரிவித்தார்கள்? ரன் அவுட் சம்பவம் தொடர்பாக உலகில் உள்ள மற்றவர்களின் கருத்து என்ன? ரன் அவுட் சம்பவம் தொடர்பாக நான் கருத்து தெரிவிக்கவில்லை. இந்த விவகாரத்துக்குள் இங்கிலாந்து கலாசாரத்தைக் கொண்டு வருவதைப் பற்றியே பேசுகிறேன் என்றார்.
_____________
கோலியின் சாதனையை சமன் செய்த பாபர் அசாம்
இங்கிலாந்து, பாகிஸ்தான் இடையிலான 6-வது டி20 போட்டி லாகூரில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான், கேப்டன் பாபர் அசாம் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது. பாபர் அசாம் 59 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 87 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் . தொடர்ந்து 170 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி பில் சால்ட் அதிரடியால் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் 87 ரன்கள் அடித்ததன் மூலம் பாபர் அசாம் சர்வதேச டி20 போட்டிகளில் 3 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளார். இதன்மூலம் டி20 போட்டிகளில் அதிவேகமாக 3 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை சாதனையை பாபர் அசாம் சமன் செய்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை2 days 18 hours ago |
ஆப்பிள் பான் கேக்4 days 19 hours ago |
சிக்கன் மிளகு வறுவல்1 week 2 days ago |
-
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு
18 Mar 2024பெஷாவர் : வடமேற்கு பாகிஸ்தானில் நேற்று காலை ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடைபெற்றது.
-
பிரதமர் நரேந்தி மோடி இன்று சேலம் வருகை : பிரம்மாண்ட பிரச்சார கூட்டத்தில் பேசுகிறார்
18 Mar 2024சேலம் : இன்று சேலம் நகருக்கு வருகை தரும் பிரதமர் மோடி அங்கு நடைபெறவுள்ள பிரம்மாண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
-
பொன்முடி பதவியேற்பு விவகாரம்: கவர்னருக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
18 Mar 2024புதுடெல்லி : பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ஆர்.என்.
-
தமிழகத்தில் நாளை முதல் லேசான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் நாளை முதல் 23-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு: கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசு மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
சபர்மதி- ஆக்ரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து : பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு
18 Mar 2024ஜோத்பூர் : ராஜஸ்தானில் ஆஜ்மீர் அருகே சபர்மதி - ஆக்ரா விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை
-
கோவை பார்லி. தொகுதியில் பா.ஜ.க.தான் போட்டியிடும் : அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டம்
18 Mar 2024கோவை : கோவை பா.ஜ.க. கோட்டையாக உள்ளது. இத்தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிடுவது உறுதி என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதிக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு
18 Mar 2024சென்னை, அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
போதை பொருள் புழக்கம் அதிகரிப்பு: தமிழக அரசுக்கு எடப்பாடி கண்டனம்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரிப்புக்கு காரணமான தமிழக அரசுக்கு அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: தமிழகத்தில் ஏப்ரல் 13-ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வி துறை திட்டம்
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு எதிரொலியாக, தமிழகத்தில் ஏப்ரல், 13க்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங். போட்டியிடும் 9 தொகுதிகள் : ம.தி.மு.க.வுக்கு திருச்சி ஒதுக்கீடு
18 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க.
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடின் வெற்றி : மே மாதம் பதவியேற்பு விழா நடக்கிறது
18 Mar 2024மாஸ்கோ : ரஷ்ய அதிபர் தேர்தலில் 87.29 சதவீத வாக்குகள் பெற்று புடின் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது: எந்தெந்த தொகுதிகளில் போட்டி - முழுவிவரம் வெளியீடு
18 Mar 2024சென்னை, தமிழ்நாட்டில் தி.மு.க.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறை நீட்டிப்பு
18 Mar 2024சென்னை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க.வின் பார்லி. தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனய
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக், சென்னை அழைத்து வரப்பட்டார்
18 Mar 2024சென்னை : போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.
-
திருச்செந்தூர் கோவிலில் ஓ.பி.எஸ். சிறப்பு வழிபாடு
18 Mar 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: 24-ம் தேதி திருச்சியில் பிரசாரத்தை துவக்குகிறார் எடப்பாடி பழனிசாமி
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை வருகிற 24-ம் தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தொடங்குகிறார்.
-
கவர்னர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தமிழிசை சவுந்தரராஜன் ஜனாதிபதிக்கு கடிதம் : தமிழகத்தில் போட்டியிட போவதாக அறிவிப்பு
18 Mar 2024சென்னை : தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் மக்கள
-
டிராக்டருடன் கார் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
18 Mar 2024பாட்னா : பீகாரில் டிராக்டருடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் படங்களுக்கு மலர்கள் தூவி பிரதமர் அஞ்சலி
18 Mar 2024கோவை, கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி நேற்று மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்.
-
பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை இ.பி.எஸ்.யிடம் ஒப்படைப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் இறுதி தொகுப்பை அ.தி.மு.க.
-
டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழல் வழக்கு: அமலாக்க துறையின் சம்மனை புறக்கணித்தார் கெஜ்ரிவால்
18 Mar 2024புதுடெல்லி : டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்தம் அளிக்கப்பட்டதில் ஊழல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முதல்வர் கெஜ்ர
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி: புடினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
18 Mar 2024புதுடெல்லி, ரஷ்ய கூட்டமைப்பின் அதிபராக விளாடிமிர் புதின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக என்னுடைய வாழ்த்துகள் என பிரதமர் மோடி எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
-
புதிய அரசின் முதல் 100 நாட்களுக்கான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் : மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
18 Mar 2024புதுடெல்லி : தேர்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசின் முதல் 100 நாட்கள் மற்றும் 5 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை வகுக்குமாறு மத்திய அமைச்சர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டு