முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் உடல்நலக்குறைவால் மரணம்

புதன்கிழமை, 11 ஜனவரி 2023      உலகம்
Kiris 2023-01-11

Source: provided

ஏதேன்ஸ் : கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் தனது 82-வது வயதில் மரணமடைந்தார். 

கிரீஸ் நாட்டின் மன்னராக 1964 முதல் 1973 வரை பதவி வகித்தவர் 2-ம் கான்ஸ்டென்னின். இவர் தனது 23-ம் வயதில் கிரீசின் மன்னராக அரியணை ஏறினார். கிரீசில் மன்னாராட்சி முறைக்கு 1967-ம் ஆண்டு எதிர்ப்பு எழுந்த நிலையில் 2-ம் கான்ஸ்டெனினின் நாட்டை விட்டு வெளியேறினார். 

பின்னர், 1974-ம் ஆண்டு மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டு மக்களாட்சி நடைமுறைக்கு வந்ததால் அவர் அதிகாரப்பூர்வமாக மன்னர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மக்களாட்சி மலர்ந்த நிலையில் பின்னர் நாடு திரும்பினார். இதனிடையே, கிரீஸ் நாட்டின் கடைசி மன்னரான 2-ம் கான்ஸ்டெனினின் நேற்று மரணமடைந்தார். 

வயது முதிர்வு, உடல்நலக்குறைவு காரணமாக தனது 82 வயதில் அவர் மரணமடைந்தார். உடல்நலக்குறைவு காரணமாக ஏதேன்சில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 2-ம் கான்ஸ்டெனினின் மரணமடைந்ததாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து